திருப்பூர், ஏப். 22 - உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு பெருமாநல்லூரில் மூன்று நாட்கள் புத்தகக் கண்காட்சி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அவிநாசி ஒன்றிய தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க பெருமா நல்லூர் கிளை இணைந்து இந்த புத்தகக் கண்காட்சியை ஏற் பாடு செய்தனர். முதல் நாளான வெள்ளியன்று புத்தகக் கண் காட்சி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அறிவியல் இயக்க திருப்பூர் மாவட்டத் துணைத் தலைவர் ஸ்ரீ ராம்குமார் தலைமை யில், தமுஎகச பெருமாநல்லூர் கிளைச் செயலாளர் ஜி.சண்மு கம் வரவேற்றார். இதைத் தொடர்ந்து ஈட்டிவீரம்பாளையம் பள்ளி மாணவர்களின் பறை இசை நிகழ்ச்சியும், தொரவலூர் பள்ளி மாணவர்களின் நடன நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற் றது. தமுஎகச மாவட்டத் தலைவர் பி.ஆர்.கணேசன் புத்தக விற்பனையைத் தொடங்கி வைத்தார். தமுஎகச மாவட்டத் துணைச் செயலாளர் ஜெயலட்சுமி,
பெருமாநல்லூர் கிளைச் செயலாளர் கருணாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அறிவியல் இயக்க மாவட்ட இணைச் செயலாளர் சந்துரு, பெருமாநல்லூர் கிளைச் செயலாளர் ராம்குமார் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். அவிநாசி ஒன்றியச் செயலாளர் ராஜேஷ் நன்றி கூறினார். பெருமாநல்லூர் ஸ்ரீ செல்வம் மஹாலில் இக்கண்காட்சி நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை மூன்றாம் நாள் நிறைவு பெறுகிறது. இதில் புத்தகங்கள் வாங்கும் பொது மக்க ளுக்கு 10 சதவிகிதம், மாணவர்களுக்கு 15 சதவிகிதம் தள்ளு படி வழங்கப்படுகிறது. இரண்டாம் நாளும் மாணவர் கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. பெருமாநல்லூர் சுற்று வட்டார பொது மக்கள் ஆர்வமுடன் புத்தகக் கண்காட்சியைப் பார்வையிட்டு விரும் பிய புத்தகங்களை வாங்கிச் சென்றனர். இரண்டு நாளில் சுமார் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் விற்பனை ஆனது.