districts

img

சுமுக தீர்வுக்கோரி சுமைப்பணி தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

திருப்பூர், ஏப்.19- அரிசி மண்டி வியாபாரிகள் சங்க  நிர்வாகிகளை கண்டித்தும், சுமுக தீர்வு காண வலியுறுத்தியும் திருப் பூர் மாவட்ட சுமைப்பணி தொழிலா ளர் சங்கத்தினர் செவ்வாயன்று அரிசி கடைவீதியில் இரண்டு நாள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். திருப்பூர் அரிசிக் கடை வீதியில் வேலை செய்யும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு கடந்த நான்கு  மாதங்களாக பேச்சுவார்த்தை நடத் தியும் கூலி உயர்வு ஒப்பந்தம் நிறை வேற்ற முன்வராமல் வன்முறை யைத் தூண்டும் விதத்தில் செயல் படும் மொத்த அரிசி மண்டி வியாபா ரிகள் சங்க நிர்வாகிகளை கண்டித் தும், இப்பிரச்சனையில் சுமூக தீர்வு காண முன்வர வலியுறுத்தியும் திருப்பூர் மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் சார்பில்  செவ்வாயன்று அரிசி கடைவீதியில் இரண்டு நாள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். சிஐடியு மாவட்ட துணைச் செய லாளர் ஜி சம்பத் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைத்தார்.  அரிசி கடை வீதி சுமைப்பணி தொழி லாளர் சங்க தலைவர், மாவட்ட பொருளாளர் எஸ்.சதாசிவம் தலை மையில் நடைபெற்ற இப்போராட் டத்தை விளக்கி சிஐடியு மாவட்ட தலைவரும், சுமைப்பணி தொழிலா ளர் சங்க மாவட்ட செயலாளருமான கே. உன்னிகிருஷ்ணன், சுமைப் பணி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் எம்.ராஜகோபால், சாலை யோர வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் பி.பாலன், சங்க நிர் வாகி முருகசாமி உள்ளிட்டோர் பங் கேற்று உரையாற்றினர். முன்னதாக, கூலி உயர்வு பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு காண வலியுறுத்தி வரும் 21ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத் தப் போராட்டம் நடத்துவது என்று  சுமைப்பணி தொழிலாளர் சங்கம்  முடிவு செய்திருந்தது. இந்நிலை யில் மொத்த அரிசி மண்டி வியாபாரி கள் சங்கத்தினர், பிரச்சினைக்கு தீர்வு காண முன் வருவதற்கு பதி லாக, புதிய நிபந்தனைகளை விதித் தும், வெளி ஆட்களை வைத்து  வேலை செய்ய போவதாகவும் அறிக்கை விடுத்தனர். 40 ஆண்டு காலமாக இப்பகுதியில் நல்இணக் கமான முறையில் வேலை செய்யும் சுமைப்பணி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகை யிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் மொத்த அரிசி மண்டி வியாபாரிகள் சங்க நிர்வாகிகளின் இந்த அறிக்கை அமைந்திருந்தது. இந்த நிலையில், நியாயமான முறையில் இந்த தொழிலாளர் களின் வாழ்வாதாரத்தை பாதுகாக் கவும், புதிய நிபந்தனைகள் எதுவும் விதிக்காமல் சுமூகமான முறையில் கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வும், ஜனநாயக வழியில் இந்த உண் ணாவிரதப் போராட்டம் மேற்கொள் ளப்பட்டுள்ளது என்று இப்போராட் டத்தில் பேசியவர்கள் தெரிவித்த னர்.