திருப்பூர், ஜன. 4 - திருப்பூரில் அரசுப் பேருந்து பணிமனை முன்பு வியாழ னன்று போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்த கோரிக்கை விளக்க கூட்டம் சிஐடியு மண்டல துணைப் பொதுச் செயலாளர் தேவநேசன் தலைமையில் நடைபெற்றது. தமிழக அரசு வரும் ஜன.9 ஆம் தேதிக்குள் தொழிற்சங் கங்களை அழைத்து பேசி ஓய்வு பெற்ற ஊழியர்களின் டிஏ உயர்வை வழங்க வேண்டும். 15ஆவது ஊதியப் பேச்சு வார்த்தையை துவக்க வேண்டும். பேச்சு வார்த்தையை துவக்க மறுத்தால் ஜனவரி 9ஆம் தேதி முதல் அனைத்து தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் முழுமையாக பங்கேற்று வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும். அனைத்து பேருந்துகளும் இயங்கவில்லை என்ற நிலையை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்ற தீர்மா னம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இக்கோரிக்கைகளை விளக்கி டிடிஎஸ்எப் சங்கத்தின் துணைத் தலைவர் செந்தமிழ் செல்வன், பொருளாளர் முருகானந்தம், சிஐடியு துணைப் பொதுச் செயலாளர் கொங்கு ராஜ், பொதுச் செயலாளர் பி.செல்லதுரை ஏஐடியுசி துணைச் செயலாளர் குமரேசன், ஓய்வு பெற்ற நல அமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பி.செல்வராஜ் ஆகியோர் பேசினர். சிஐடியு சங்கத்தின் துணைச் செயலாளர் ஆர்.மனோகரன் நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார். இக்கூட்டத்தில் மேற்கண்ட சங்கங்களின் நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங் கேற்றனர்.