அமராவதி அணைக்கு நீர் ஆதாரமாக உள்ள பாம்பாறு, தேனாறு, சின்னாறு ஆகிய மூன்று ஆறுகள் இணைந்து கூட்டாறாக அமராவதி அணைக்கு தண்ணீர் வருகிறது. கூட்டாறு வரும் வழியில் துவானம் அருவி அமைத்துள்ள இடத்தில் மழை காலங்களில் தண்ணீரை சேமித்து வைக்க சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் அப்பர் அமாரவதி அணை என்ற பெயரில் ஒரு தடுப்பு அணை கட்ட முடிவு செய்யபட்டது. இந்த அணையில் சுமார் 5 டிஎம்சி நீரை சேமித்து வைத்து நீர் மின்சாரம் உற்பத்தியும், கோடை காலங்களில் அப்பர் அமாரவதி அணையில் இருந்து தண்ணீரை அமராவதி அணைக்கு கொண்டு செல்ல முடியும். ஆணைமலையாறு திட்டம் பரம்பிக்குளம் –ஆழியாறு திட்டத்தின் கட்டப்பட்ட திருமூர்த்தி அணைக்கு மேல் நீராறு அணை வழியாக சுமார் 120 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து தண்ணீர் வருகிறது. தண்ணீர் வரும் துரத்தை குறைக்கும் வகையிலும் கூடுதலாக தண்ணீரை சேமிக்கும் வகையிலும் திருமூர்த்தி அணையில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாவடப்பு பகுதியில் இருக்கும் நல்லாற்றின் குறுக்கே அணைகட்ட திட்டம் வகுக்கப்பட்டது. இந்த அணைகள் கட்டப்பட்டால் நல்லாறு ஆணையில் இருந்து கால்வாய் வழியாக சுமார் 18 கிலோ மீட்டர் துரத்தில் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் வந்து சேரும். மேலும் கூடுதாலக மழைகாலங்களில் தண்ணீரை சேமித்துவைத்து கொள்ள முடியும். இதனால் சுமார் 8 டிஎம்சி தண்ணீர் திருமூர்த்தி அணைக்கு வறட்சிகாலங்களில் கிடைக்கும். ஆகவே, கடுமையான வறட்சி காலங்களில் அமாரவதி மற்றம் திருமூர்த்தி அணைகளுக்கு தண்ணீர் கிடைக்க வகுக்கப்பட்ட திட்டங்களை தாமதம் இன்றி தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது-