திருப்பூர் ஜூன் 10- நவீன வாழ்க்கை முறையின் தவிர்க்க முடியாத உடன் நிகழ்வாக உருவெடுத்தி ருக்கிறது குப்பை! இன்று பெரு நகரங்கள் மட்டுமின்றி, நகரமயமாகி வரும் ஒவ்வொரு சிற்றூரும் குப்பைகள் பெருத்துப் போய் எங்கே கொட்டுவது, எப்படி தூய்மைப்ப டுத்துவது என்று தெரியாமல் திண்டாடி வரு கின்றன. மொத்த சமூகமும் மூச்சுத் திணறி வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் கடந்த ஜூன் 3ஆம் தேதி, தூய்மையான நகரங்க ளுக்கான மக்கள் இயக்கத்தை அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் தொடக்கி உள் ளார். இதில் முதலாவது செயல்பாடு பெரும ளவில் மக்கள் பங்களிப்புடன் பொது இடங் களை சுத்தம் செய்தல் ஆகும். இந்த மாதத்தின் இரண்டாவது சனிக்கி ழமை என்ற அடிப்படையில், ஜூன் 11ஆம் தேதி இந்த பெருந்திரள் தூய்மைப்பணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பூர் மாந கராட்சியில் இப்பணியில் தன்னார்வலர்கள் கலந்து கொள்ளும்படி திருப்பூர் மாநக ராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி அழைப்பு விடுத்துள்ளார்.
அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதலில், அனைத்துத்துறை அலுவலர்கள் ஒருங்கி ணைப்புக் கூட்டம் நடத்தி, தூய்மை உறுதி மொழியுடன் பணியைத் தொடங்க வேண் டும், உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள், பிரபல மானவர்கள் இப்பணியில் முன்னின்று நடத்த ஊக்கப்படுத்த வேண்டும். இப்பணி யில் பங்கேற்போர் விபரம் ஆவணப்படுத்த வேண்டும். இதற்குரிய அனைத்து இயந்தி ரங்கள், வாகனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும், தன்னார்வலர்கள் உள் ளிட்ட அனைத்து தரப்பினருடன் ஆயத்தக் கூட்டம் நடத்துவது, பங்கேற்பாளர்களுக்கு அடையாள அட்டை, தொப்பி, கையுறை, முகக்கவசம் வழங்க வேண்டும். பள்ளி மாணவர்களில் 9ஆம் வகுப்பிற்கு மேற்பட் டவர்களை மட்டும் ஈடுபடுத்த வேண்டும். மக்கும் தன்மையுள்ள பைகளில் குப்பை களை சேகரிக்க வேண்டும், விளம்பர சுவர்க ளையும் வெள்ளையடிக்க வேண்டும். “எனது குப்பை எனது பொறுப்பு” என்ற வாசகத்தை பெரியளவு பிரபலப்படுத்த வேண்டும், எப்போதும் குப்பை கொட்டப்ப டும் இடங்களைக் கண்டறிந்து அந்த இடங் களை மாற்றுப் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், குப்பை சூழ்ந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பாதைகளை, வீதிகளை தூய்மை செய்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். சாலையோர கட்டிட கழிவுகளை முழுமையாக அகற்ற வேண்டும், சமுதாய, பொதுக் கழிப்பறை களை தூய்மையாக வைத்திருப்பதன் அவ சியத்தை தன்னார்வலர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டு தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்ப டுத்துவதை நோக்கமாக கொண்டிருக்கும் இப்பணி வெற்றிகரமாக நடைபெற்றால் நக ரங்கள் ஓரளவு தூய்மையாகும் என்பது உறுதி. எனினும் இதை விளம்பர நோக்கத் தில் செயல்படுத்தாமல் உண்மையான அர்த் தத்தில் நிறைவேற்ற அந்தந்த உள்ளாட்சி நிர் வாகங்கள், அரசுத் துறை உரிய கவனமும், ஈடுபாடும் செலுத்த வேண்டும். சனிக்கிழமை (இன்று) திருப்பூர் வடக்கு உழவர் சந்தை மற்றும் தென்னம்பாளை யத்தில் உள்ள தினசரி மற்றும் வார சந்தை பகுதிகளை மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பங்களிப்புடன் தூய்மைப்படுத்த தேர்வு செய்யப்பட்டுள்ளது. மக்கள் பங்கேற்புக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. மக்கள் விழிப்புணர்வும், இப்பணியில் பங்கேற்பும் அடிப்படை அவசியமானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே சமயம், அரசின் கொள்கை நிலைபாட்டில் உரிய மாறுதல்கள் தேவை. பொது சுகா தாரம் பேணுவதற்கு காலி பணியிடங்களை நிரப்புவதும், ஒப்பந்த அடிப்படையில் பணியை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிடுவதும் அவசியமாகும். இத்தகைய தனியார்மய, ஒப்பந்த அடிப் படையில் அயல்பணி வழங்குவது ஊழல் நடைமுறையாகவே உள்ளது, நகரம் தூய்மை ஆவதில்லை என்பதே அனுபவ உண்மை. எனவே அரசு முடுக்கிவிட்டிருக்கும் இந்த பணியுடன், பொது சுகாதாரம் பேணும் கொள்கை நிலைபாட்டையும் மேற்கொள்ள வேண்டும். அதில் தனியார்மயத்தை அனு மதித்துக் கொண்டு, மறுபுறம் பெருந் திரள் மக்கள் பங்கேற்புடன் தூய்மைப் பணி மேற்கொள்வது மாறுபட்ட நடவடிக் கையே! தொலைநோக்கு அடிப்படையில் முழுமையான பயன் விளைவிக்காது. எனவே முதல்வரின் நோக்கம் நிறைவேறிட, பொது சுகாதாரத்தில் அரசின் கொள்கை மாற்றத்துக்கு, இந்த பணி ஒரு தொடக்கமாக அமைந்தால் நலம்.
(வே.தூயவன்)