விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்
கோவை, பிப்.7- சுல்தான்பேட்டை ஒன்றியம், போகம்பட்டியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக காட்டுப் பன்றிகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவ தால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். கோவை, சுல்தான்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதி போகம்பட்டி இங்கு விவசாய நிலங்கள் அதிகம் உள்ளது. இந்த விவசாய நிலங்களில், காட்டுப் பன்றிகள் கூட்டமாக வந்து பயிர்களை சேதப்படுத்துவதால், விவ சாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வாழை, தென்னை போன்ற நீண்ட கால பயிர்களும் சேதமடைந்துள்ளன. காட்டுப் பன்றிகளின் தொல்லை அதிகரித்து வருவதால், விவசாயிகள் வேளாண்மை துறை மற்றும் வனத்துறையினரின் உதவியை நாடியுள் ளனர். காட்டுப் பன்றிகளை பிடித்து விவசாய நிலங்களில் இருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், காட்டுப் பன்றிகளால் சேதமடைந்த பயிர்க ளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிப்.14 இல் தருமபுரி மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: ஜாக்டோ – ஜியோ அறிவிப்பு
தருமபுரி, பிப்.7- தேர்தல் வாக்குறுதிப்படி, பழைய ஓய்வூதியத் திட் டத்தை அமல்படுத்த வேண்டும், என வலியுறுத்தி, பிப்.14 ஆம் தேதியன்று தருமபுரி மாவட்டம் முழுவதும் ஆர்ப் பாட்டம் நடைபெற உள்ளதென, ஜாக்டோ – ஜியோ அறி வித்துள்ளது. தருமபுரி சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத்தில் ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். தொகுப் பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ சார்பில், பிப்.14 ஆம் தேதியன்று தருமபுரி மாவட்டம் முழுவதும் வட்ட தலைநகரங்களில் மாலைநேர ஆர்ப் பாட்டமும், பிப்.25 ஆம் தேதியன்று தருமபுரியில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இதில் பெருமளவில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்று போராட் டங்களை வெற்றிபெற செய்வது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
1,718 மனுக்களுக்கு உடனடித் தீர்வு
சேலம், பிப்.7- ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம் மற்றும் தலைவாசல் பகுதிகளில் நடைபெற்ற “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில், 1,718 மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டுள்ளதாக, அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர்” மூன் றாம் கட்ட திட்ட முகாம், 4 ஆம் நாளாக வெள்ளியன்று, தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாவக் குறிச்சி, புனல்வாசல், தேவியாக்குறிச்சி, புளியங் குறிச்சி மற்றும் ஊனத்தூர் ஆகிய 5 இடங்களில் நடை பெற்றது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட் டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமை வகித்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், பொதுமக்களின் கோரிக் கைகளை பெற்று அரசின் முக்கிய சேவைகளை அவர் களின் இல்லத்திற்கு அருகிலேயே வழங்கும் நோக்கத் தோடு “மக்களுடன் முதல்வர்” திட்டம் செயல்படுத் தப்பட்டு வருகிறது. தற்பொழுது மூன்றாம் கட்டமாக ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலையில் உள்ள மக்கள் அதி கம் வசிக்கும் பகுதிகள் தேர்தெடுக்கப்பட்டு சேலம் மாவட்டத்தில் 90 முகாம்கள் நடத்தப்படுகிறது. ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம் மற்றும் தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 20 இடங்களில் நடை பெற்ற “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் 5,425 மனுக்கள் பெறப்பட்டு 1,718 மனுக்களுக்கு உடனடித் காணப்பட்டுள்ளது, என்றார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தா தேவி, வருவாய் அலுவலர் ரா.ரவிக்குமார், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம், வேளாண் இணை இயக்குநர் சிங்காரம், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நீலாம்பாள் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஈரோடு இடைத்தேர்தல் நிறைவு: ஜவுளி வியாபாரிகள் மகிழ்ச்சி
- எம்.பிரபாகரன் - நாமக்கல், பிப்.7- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள தால், பள்ளிபாளையம் சுற்றுவட் டார ஜவுளி வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களை இணைக்கும் முக்கிய பகுதியாக பள்ளிபாளை யம் உள்ளது. நாமக்கல் மாவட்டத் தின் எல்லை பகுதியாகவும், ஈரோடு மாவட்டத்தின் துவக்கப்பகுதியாக வும் பள்ளிபாளையம் அமைந்துள் ளது. இங்கு விசைத்தறி, கார் மெண்ட்ஸ் உள்ளிட்ட தொழில் அதி களவு நடைபெற்று வருகிறது. பள்ளி பாளையம் சுற்றுவட்டார பகுதி முழு வதும் உற்பத்தியாகும் விசைத் தறி ஜவுளிகள், கார்மெண்ட்ஸ் நிறு வனத்தில் தயாராகும் உடைகள், ஈரோடு வழியாக திருப்பூர் உள் ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக் கும் அனுப்பப்பட்டு வருகிறது. பள் ளிபாளையத்தில் இருந்து கிட்டத் தட்ட 60 சதவிகிதம் ஈரோடு பகுதி யில் செயல்பட்டு வரும் ஜவுளிக் கடைகள் மற்றும் பல்வேறு தொழில் சார்ந்த நிறுவனங்களில் நேரடி யாகவும், மறைமுகமாகவும் பணி யாற்றி வருகின்றனர். சேலம், திருச்சி, நாமக்கல், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங் களை இணைக்கும் மிக முக்கிய மான சாலையாகவும், பள்ளி பாளையம் உள்ளது. இந்நிலையில், ஈரோட்டில் கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப் பினராக செயல்பட்டு வந்த காங்கி ரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே. எஸ்.இளங்கோவன் உடல் நலக் குறைவால் காலமானதால், பிப்.5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெ றும் என தேர்தல் ஆணையம் அறி வித்தது. இதன் காரணமாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த தால், வணிகர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் பணம், நகை, ஜவுளி பொருட்கள் மற்றும் அனைத்து விதமான அத்தியாவசியப் பொருட் களை கொண்டு செல்வதிலும் கட் டுப்பாடு விதிகள் அமலுக்கு வந்தது. மேலும், வாக்காளர்களுக்கு பரிசு பொருள், பணம் உள்ளிட்டவற்றை வழங்குவதை தடுக்கும் வகையி லும் தீவிர கண்காணிப்பும் தேர்தல் பறக்கும் படையால் மேற்கொள் ளப்பட்டது. இதனால் பள்ளிபாளை யத்திலிருந்து அருகிலுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக் குட்பட்ட ஈரோடு, கருங்கல்பாளை யம், மணிக்கூண்டு சாலை, ஜவுளி கடை வீதி உள்ளிட்ட இடங்களுக்கு ஜவுளிகளை கொண்டு செல்ல வியாபாரிகள் தயக்கம் காட்டினர். அதையும் மீறி ஜவுளிகள் கொண்டு செல்லப்பட்டால் ஆங்காங்கே உள்ள தேர்தல் பறக்கும் படையி னர் கொண்டு செல்லப்படும் ஜவுளி களை பறிமுதல் செய்யும் நிலையும் ஏற்பட்டது. வாரந்தோறும் வியாழக்கி ழமை நாட்களில் கருங்கல்பாளை யம் பகுதியில் மாட்டுச்சந்தை நடை பெறும் மாட்டுச் சந்தைக்கு மாடு களை வாங்க விற்க வியாபாரிகள் பணம் வைத்திருக்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் காரண மாக மாட்டுச்சந்தை வியாபாரிக ளும் பாதிப்புக்குள்ளாகினர். இப் படி பல்வேறு தரப்பினர் இந்த இடைத்தேர்தல் தேர்தல் நடத்தை விதிமுறைகளால் அவதியடைந்து வந்த நிலையில், கடந்த ஒரு மாதங் களுக்கு மேலாக மிகுந்த தொழில் பாதிப்பும் பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டது. கடந்த பிப்.5 ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நிறைவு பெற்று, சனியன்று (இன்று) வாக்குகள் எண் ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப் பட உள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தா லும் இடைத்தேர்தல் நிறைவு பெற் றுள்ளதால் பொதுமக்கள் மற்றும் ஜவுளி வியாபாரிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர். சனிக்கிழமை (இன்று) மாலை அல்லது ஞாயிற் றுக்கிழமைக்குள் தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்ப பெறப்படும் என்பதால், பழையபடி வியாபார மும், பண பரிவர்த்தனையும் மேற் கொள்ளலாம் என பொதுமக்கள், வியாபாரிகள் எதிர்பார்ப்புடன் உள் ளனர்.
கேஎஸ்சி பள்ளி நூற்றாண்டு விழா குறித்து அவதூறு
திருப்பூர், பிப்.7- கேஎஸ்சி பள்ளி நூற்றாண்டு விழா குறித்து அவதூறு பரப் புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வியாழனன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் மாணவர்கள் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேஎஸ்சி பள்ளி முன்னாள் மாணவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது, நூறு ஆண்டுகள் கடந்த பள்ளிகளில் விழா கொண் டாட அரசு ஆணையிட்டுள்ளது. பள்ளியின் முன்னாள் மாண வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்களை அழைத்து விழா கொண்டாட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி கேஎஸ்சி பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற் றும் முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைப்பில் முன்னேற் பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சிலர் காழ்ப்புணர்ச்சி காரணமாக பள்ளிக்கு களங்கம் ஏற்படுத் தும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். எனவே நூற்றாண்டு விழா குறித்து அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
குடற்புழு நீக்க மாத்திரைகள் விநியோகம்
குடற்புழு நீக்க மாத்திரைகள் விநியோகம் திருப்பூர், பிப்.7- தேசிய குடற்புழு நீக்கும் தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் 1 வயது முதல் 19 வயது வரை உள்ள சுமார் 5.6 லட்சம் குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வரை வயதுடைய 2.5 லட்சம் பெண்களுக்கு (கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட் டும் தாய்மார்களை தவிர) குடற்புழு நீக்க மாத்திரைகள் பிப்.10 மற்றும் விடுபட்ட குழந்தைகளுக்கு பிப்.17 வழங்கப்பட உள் ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குடற்புழு தொற்றினால் ஊட்டச்சத்து குறைபாடு, சோர்வு, மற்றும் சுகவீனம், படிப்பில் கவனமின்மை, பசியின்மை, ரத்தசோகை, குமட்டல், வாந்தி ஆகியவை ஏற்படும். எனவே குடற்புழு தொற்றிலிருந்து விடுபட அல்பெண்டசோல் மாத்தி ரைகளை உட்கொள்வது மிகவும் அவசியம். காலை அல்லது மதியம் உணவு உண்டபின் அரைமணி நேரம் கழித்து இம்மாத் திரைகள் உட்கொள்ள வேண்டும். இதனால் எந்த பக்கவிளை வுகளும் ஏற்படாது. இம்மாத்திரைகள் மாவட்டத்தின் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகா தார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் மற்றும் கல்லூரியில் படிக்கும் முதலாம் மற் றும் இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவியர்களுக்கு பிப்.10 ஆம் தேதியும் மற்றும் விடுபட்ட குழந்தைகளுக்கு பிப்.17ஆம் தேதியும் வழங்கப்படவுள்ளது. 1 வயது முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அல்பெண்டசோல் அரை மாத்திரை (200 அப) வழங்கப்படும். 2 வயது முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வரை வயதுடைய பெண்க ளுக்கு அல்பெண்டசோல் 1 மாத்திரை (400 அப) வழங்கப்படும் எனவே குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயதுடைய பெண்கள் இம்மாத்திரையை உட்கொண்டு பயனடையுமாறு ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் கூறியுள்ளார்.
10, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சிக்கு ஆலோசனைக் கூட்டம்
திருப்பூர், பிப்.7 - திருப்பூரில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர் கள் தேர்ச்சி தொடர்பாக தலைமை ஆசிரியர் கள் மற்றும் பாட ஆசிரியர்களுடன் பகுப்பாய் வுக்கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ் தலைமையில் வெள்ளியன்று இக்கூட் டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் 163 அரசு பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பொது தேர் வில் 15 ஆயிரத்து 733 மாணவ, மாணவிக ளும், 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 12 ஆயி ரத்து 34 மாணவ, மாணவிகளும் தேர்வு எழுத வுள்ளனர். இத்தேர்வு தொடர்பாக கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் காலாண்டு, அரை யாண்டு, மற்றும் முதல் திருப்புதல் தேர்வுக ளின் தேர்ச்சி விகிதம், கடந்த ஆண்டு 11 ஆம் வகுப்பின் தேர்ச்சி விகிதம் தொடர்பாக தலைமை ஆசிரியர்கள் மற்றும் பாட ஆசிரி யர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட் டது. மேலும், தேர்வுக்கு வராத மாணவர் களை பள்ளி மேலாளண்மைக் குழு துணை கொண்டு பள்ளிக்கு வரவழைத்து சிறப்பு பயிற்சி வழங்கவும், தேர்ச்சி பெறாத மாண வர்களுக்கு ஒரு மதிப்பெண் வினாக்கள், முக் கியமான 2 மற்றும் 3 மதிப்பெண் வினாக்களை படிக்க வைத்தல், பாடப் பகுதிகளை விளக்கி குறைந்த பகுதிகளை தினமும் படிக்க வைத் தல், சிறு தேர்வு வைத்தல், தினமும் சிறப்பு வகுப்புகள் வைத்தல், மற்றும் பெற்றோரு டன் கலந்துரையாடி வீட்டிலும் அதிகமான நேரம் படிக்க அறிவுறுத்தி 100 சதவீதம் தேர்ச்சி என்ற இலக்கை பெற்றுத்தர அனைத்து தலைமை ஆசிரியர்களும் பணியாற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மீ.உதய குமார், உதவி திட்ட அலுவலர் (ஒருங்கி னைந்த பள்ளிக்கல்வி) அண்ணத்துரை மற் றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நியாய விலைக் கடைகளில் கழிப்பிட வசதி: சிஐடியு கோரிக்கை
திருப்பூர், பிப்.7 - அனைத்து நியாய விலைக்கடைகளி லும் கழிப்பிட வசதி ஏற்படுத்தித்தர வேண் டும் என திருப்பூர் மாவட்ட கூட்டுறவுப் பணி யாளர் சங்கம் (சிஐடியு) கோரியுள்ளது. இந்த சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட சிஐடியு அலுவலகத்தில் வெள்ளி யன்று மாவட்டத் தலைவர் பி.கௌதமன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத் தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் 100% முழு ஒதுக்கீடு வழங்க வேண்டும். வெளி மாவட்ட குடும்ப அட்டைகளுக்கு விநி யோகம் செய்ய ஏதுவாக 10 சதவீதம் கூடு தலாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு சம்பள ரசீது வழங்க வேண்டும். அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் கழிப்பிட வசதி ஏற்ப டுத்தித் தர வேண்டும் ஓய்வு பெற்ற ஊழி யர்களுக்கு வழங்க வேண்டிய பணப் பயன் களை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் மகேந்திரன், மாவட்டப் பொருளாளர் சுரேஷ் மாவட்ட துணைத்தலைவர்கள் கருப்பு சாமி, கார்த்திகேயன் மாவட்ட துணைச் செயலாளர்கள் சிவக்குமார், பிரபாகரன் மற் றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் வேலுச் சாமி, பழனிச்சாமி, யசோதா, பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செயலி முடங்கியதால் 100 நாள் வேலை பாதிப்பு
அவிநாசி, ஜன.7 - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட தொழி லாளர்கள் வருகைப்பதிவு செய்யும் செயலி வெள்ளியன்று முடங்கிய தால், அவிநாசி கிராமப்புற ஊராட்சி யில் பணியாற்றும் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். திருப்பூர் மாவட்டத்தில் 265 கிரா மப்புற ஊராட்சிகள் உள்ளன. இதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்டத்தில் 15 ஆயி ரத்திற்க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இத்தொ ழிலாளார்களின் பெயர், வங்கிக் கணக்கு, வருகைப் பதிவேடு உள்ளிட்ட தகவல்களை ஒன்றிய அரசின் 100 நாள் வேலைத்திட்ட கைபேசி செயலி மூலம் பணித்தள பொறுப்பாளர்கள் பதிவு செய்வார்கள். இந்நிலையில் அவிநாசியில் ஒரு சில பகுதிகளில் வெள்ளியன்று 100 நாள் வேலைத்திட்ட செயலி முடங்கிய தால் பணி செய்ய வந்த தொழிலாளர் கள் மூன்று மணி நேரம் காத்திருந்து, மீண்டும் வீட்டிற்கு சென்றுவிட்டனர். திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிக ளில் செயலி முடங்கியதாக கூறப்ப டுகிறது. இதுகுறித்து விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அ.சண்முகம் கூறுகையில், 100 நாள் வேலைத்திட்டம் என்பது கேள்விக்கு றியாக இருந்து வரும் சூழ்நிலை யில், ஒன்றிய அரசின் செயலி செயல்ப டாமல் இருப்பது வேலை திட்டத்தை முடக்கும் செயல். பணிக்கு வந்து, செயலி முடக்கதால் திரும்பி சென்ற தொழிலாளர்களுக்கு கூலி வழங்க வேண்டும். உடனடியாக செயலியை சரி செய்ய வேண்டும் என தெரிவித் தார்.
அரசு கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டம்
அவிநாசி, பிப்.7- அவிநாசி அரசு கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் வெள்ளியன்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றம் உத்தரவு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதல் படி கௌரவ விரிவுரையாளர்க ளுக்கு மாத ஊதியமாக ரூ. 50 ஆயிரம் வழங்க வேண்டும். மாதம் மாதம் முறையாக ஊதியம் வழங்க வேண்டும் உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையா ளர்கள் வெள்ளியன்று உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி னர். அவர்கள் கருப்பு பேட்ச் அணிந்து, வகுப்பைப் புறக்க ணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தமிழ், ஆங்கிலம், கணிதம், வணிகவியல் உள்ளிட்ட 8 துறைகளை சார்ந்த 15 க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் பங் கேற்றனர்.
சட்டவிரோத மது விற்பனை அதிமுக நிர்வாகி கைது
சட்டவிரோத மது விற்பனை அதிமுக நிர்வாகி கைது சேலம், பிப்.7- தம்மம்பட்டி அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகியை காவல் துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே உள்ள செந் தாரப்பட்டி, மண்மலை பாலகாடு பகுதியைச் சேர்ந்தவர் பரம சிவம் (45). கெங்கவல்லி ஒன்றிய அதிமுக மாணவரணி செய லாளரான இவர், தனது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பதாக, காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தம்மம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் சந்திரன் தலைமையிலான காவல் துறையினர், பரமசிவம் வீட்டில் சோதனை நடத்தினர். இதில், 750 மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து, பரமசிவத்தை கைது செய்தனர். இதேபோன்று, தம்மம்பட்டி 8 ஆவது வார் டுக்குட்பட்ட காளியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த விஜி (41) என்பவரது வீட்டிலும், மதுபாட்டில்கள் பதுக்கி விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக விஜியையும் போலீசார் கைது செய்தனர்.
சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒருவர் பலி
சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒருவர் பலி தருமபுரி, பிப்.7- பாலக்கோடு அருகே சிலிண்டர் வெடித்த விபத்தில், படு காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர் வெள்ளியன்று உயிரி ழந்தார். தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள சீரியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேசன் (52). இவர் வட மாநிலத்தில் ஜேசிபி ஆபரேட்டராக வேலை செய்து வந் தார். இந்நிலையில், கடந்த வாரம் குடும்பத்தினரை பார்க்க தனது சொந்த ஊரான சீரியம்பட்டிக்கு மாதேசன் வந்துள்ளார். கடந்த 4 ஆம் தேதியன்று காலை சமையல் செய்வதற்காக சிலிண்டரை பற்ற வைக்க முயன்ற போது, திடீரென சிலிண்டர் வெடித்ததில், மாதேசன் தீக்காய்களுடன் தூக்கி எரியப்பட் டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மாதேசனை மீட்டு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைய ளிக்கப்பட்டு வந்த நிலையில், வெள்ளியன்று காலை மாதே சன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மாரண்ட அள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
வெறிநாய்கள் கடித்து 12 ஆடுகள் பலி
வெறிநாய்கள் கடித்து 12 ஆடுகள் பலி நாமக்கல், பிப்.7- சமயசங்கிலி கிராமத்தில் வெறிநாய்கள் கடித்து 12 ஆடு கள் உயிரிழந்த சம்பவம் விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள அடுத்துள்ள சமய சங்கிலி கிராமத்தில், காவிரி கரையோரம் ஏராளமான விவசாயிகள் தங்கள் ஆடு, மாடு உள்ளிட்ட கால் நடைகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். கடந்த சில மாதங்களாகவே காவிரி கரையோரம் மேய்ச்சலுக்கு விடப் படும் ஆடுகளை, அங்கு கூட்டமாக சுற்றித் திரியும் நாய்கள் கடித்து குதறுவது அவ்வப்போது நடைபெற்று வந்தது. கடந்தாண்டு 10க்கும் மேற்பட்ட ஆடுகளை வெறி நாய்கள் கடித்து குதறியது. இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், சமயசங்கிலி கிராமத்தில் உள்ள விவசாயிகளான அன்பழகன், விஜயா, கிருஷ்ணவேணி, கோபால் ஆகியோர் தங்களுடைய வளர்ப்பு ஆடுகளை மேய்ச்சலுக்காக வியாழனன்று காவிரி ஆற்றங்கரையோரம் விட்டிருந்தனர். அப்போது மேய்ச்சலில் இருந்த ஆடுகளை அங்கு சுற்றி திரிந்த வெறிநாய்கள் கடித்ததில் 12 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் திரும்ப வராததை கண்ட விவசாயிகள் காவிரி ஆற்றங்கரை யோரம் சென்று பார்த்தபோது, ஆடுகள் உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின் பெயரில் கால்நடைத் துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர். வெறி நாய்கள் கடித்துக் குதறியதில் ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வேளாண் பல்கலை.,யில் 19 புதிய பயிர் ரகங்கள் வெளியீடு
கோவை, பிப்.7- தமிழ்நாடு வேளாண்மைப் பல் கலைக்கழகம், விவசாயிகளின் பயன் பாட்டிற்காக 19 புதிய பயிர் ரகங்களை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்க லைக்கழகத்தின் கீழ் செயல்படும் 18 கல்லூரிகள், 42 ஆராய்ச்சி நிலையங் கள் மற்றும் 15 வேளாண் அறிவியல் நிலையங்கள், தமிழ்நாட்டின் பல்வேறு தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ற புதிய ரகங்களை உருவாக்குவதில் ஈடுபட்டுள் ளன. ஆண்டுதோறும் புதிய ரகங்கள் வெளியிடப்படுகின்றன. இதுவரை, 929 ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ரகங்கள் தேசிய அளவிலும், சர்வ தேச அளவிலும் விவசாயிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்தாண்டு, வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர் களில் 19 புதிய பயிர் ரகங்கள் வெளியி டப்பட்டுள்ளன. இதில், நெல் கோ59, நெல் ஏடிடீ 56, நெல் ஏடிடீ 60, மக்காச் சோளம் கோஎச் (எம்) 12, உளுந்து விபிஎன் 12, நிலக்கடலை சிடிடீ 1, வீரிய ஒட்டு ஆமணக்கு ஒய்ஆர்சிஎச் 3, தக் காளி கோ 4, வீரிய ஒட்டு வெண்டை கோ(எச்) 5, மிளகாய் கோ 5, சாம்பல் பூசணி பிஎல்ஆர் 1, வாழை காவேரி வாமன், வெண்ணெய் பழம் டிகேடி 2, எழுமிச்சை எல்என்கேஎல் 1, அரளி தோவாளை 1, தென்னை ஏஎல்ஆர் 4, ஜாதிக்காய் பிபிஐ 1, சிறுகுறிஞ்சான் கோ 1, சிப்பிக்காளான் கேகேஎம் 1 ஆகிய பயிர்கள் வெளியிடப்பட்டன. முன்னதாக, பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கோவை மலர் கண்காட்சி குறித்து பேசிய துணைவேந்தர் கீதாலட் சுமி, தமிழ்நாடு பல்கலைக்கழகத்தில் ஏழாவது மலர்கண்காட்சி, பிப்.8 ஆம் தேதியிலிருந்து 12ஆம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப் படுகிறது. நம்ம தமிழ்நாட்டில் வளரக் கூடிய அனைத்து மலர்களையும் வைத்து, மலர்களுடைய முக்கியத்து வம், குறித்து எடுத்துரைத்திருக்கி றோம், என்றார்.
சூயஸ் திட்டத்தில் எனக்கு விருப்பம் இல்லை! திமுக கோவை எம்.பி., கணபதி ராஜ்குமார் வெளிப்படை
கோவை, பிப்.7- சூயஸ் நிறுவனத்தை யாராலும் கட்டுப் படுத்த முடியவில்லை, சூயஸ் திட்டத்தில் எனக்கு விருப்பம் இல்லை என திமுகவின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் வெளிப்படையாக பேசியது, சூயஸ் நிறுவனத்தின் அடாவடியை அம் பலப்படுத்தியுள்ளது. கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையில் விக்டோரியா ஹாலில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் கணபதி ப.ராஜ்குமார் சிறப்பு அழைப்பா ளராக கலந்து கொண்டு, மாமன்றத்தில் பேசி னார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் விமான நிலைய விரிவாக் கம், மெட்ரோ திட்டத்திற்கான ஒப்புதல் பெறப் பட்டுள்ளது. அதனை செயல்படுத்துவதற் கான ஆய்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த திட்டங்களுக்கு ஒன்றிய அரசு நிதியை கொடுத்தே ஆக வேண்டும். நமது தலைமுறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லத் தேவையான அடிப்படை வசதிகள் தான் இது, டிரோன் சர்வே முறையை சரியாக முறைபடுத்த வேண்டும். மாநகராட்சி “வரி வசூலர்” ஆட்டத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். கவுன்சிலர்கள், மேய ருக்கு அவர்கள் கட்டுப்படுவது இல்லை. அங்கு நடக்கும் விஷயங்கள் ஆணையாளர் கவனத்திற்கும் வருவது இல்லை. தொடர்ந்து வரி வசூலர்கள் இதே போல செயல்பட்டால் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து, கோவை மாநகராட்சியில் உள்ள வரி வசூலர்களை கூண்டோடு மாற்ற பரிந்துரை செய்வேன். அதற்கு நானே முக்கிய காரணமாக இருப் பேன். குடிநீர் விநியோகத்திற்கு தேவையான அதிகாரிகள் நம்மிடம் இருக்கிறார்கள் ஆதி காலத்தில் இருந்து தண்ணீர் சப்ளை செய்து கொண்டு இருக்கின்றோம். ஆனால் சூயஸ் திட்டம் வந்து விட்டது; அவர்களை முறைப்படுத்த வேண்டும். அவர்களை யாரா லும் கட்டுப்படுத்த முடியவில்லை. நக ரில் பல இடங்களில் குழிகளை தோண்டி மாதக்கணக்கில் போட்டு வைக்கின்றனர். அதிகாரிகள் சொன்னாலும் அவர்கள் கேட்ப தில்லை. அவ்வளவு பவர் வாய்ந்த்தா? சூயஸ் நிறுவனம் என கேள்வி எழுப்பினார். சூயஸ் நிறுவனத்தை நிறுத்த வேண்டும். இப்படியே போய் கொண்டு இருந்தால் தேர்தல் நேரத் திற்குள் சாலை பணிகளை முடிக்க முடியாது. அடிக்கடி சாலைகளை தோண்டினால் மக் கள் தாங்க மாட்டார்கள். சாலைகளை தோண் டுவதை நிறுத்தாவிட்டால் பணி நடக்கும் இடங்களை தடுத்து நிறுத்துவது நானாகத் தான் இருக்கும். எதிர் கட்சி மாதிரி பேசி விட்டேன் என நினைக்க வேண்டாம், மாமன்ற உறுப்பினர்கள் பேச முடியாத சூழலில் தான் நான் பேசுகின்றேன். சூயஸ் விவகாரம் குறித்து மேயர், ஆணையர், மக்களவை உறுப்பினர் ,மண்டல தலைவர்கள் அமர்ந்து சிறப்பு கூட்டம் போட்டு தீர்மானங்களை நிறை வேற்ற வேண்டும். கோவை மாநகராட்சி சூயஸ் திட்டத்தில் எனக்கு விருப்பம் இல்லை. அவர்களை யாரும் கட்டுப்படுத்த முடிய வில்லை. சூயஸ் திட்டத்தை நிறுத்த வேண் டும், என்றார். அதிமுக ஆட்சியில் கடுமையான எதிர்ப் புக்கு மத்தியில், கோவை மாநகரின் குடிநீர் விநியோகத்தை சூயஸ் என்கிற பிரான்ஸ் நாட்டு நிறுவனத்திற்கு தாரை வார்த்தார்கள். சூயஸ் நிறுவனம் பெரும் ஆபத்தானது என்று இன்று வரை மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறது. கடந்த சட்ட மன்ற தேர்தல் காலத்தில்கூட நாங்கள் ஆட் சிக்கு வந்தால் சூயஸ் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்வோம் என இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி அளித் தார். ஆனாலும் சூயஸ் நிறுவனத்தின் ஒப்பந் தத்தை திமுக அரசு ரத்து செய்யவில்லை. இந் நிலையில், ஆளும்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே சூயஸ் நிறுவனம் யார் பேச்சையும் கேட்பதில்லை, இந்நிறுவனத் தின் செயல்பாட்டின் மீது எனக்கு விருப்பம் இல்லை என மாமன்ற கூட்டத்திலேயே பேசி யிருப்பது, சூயஸ் நிறுவனத்தின் அடாவடி அம்பலமாகியுள்ளது.