districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

வருவாய் ஆய்வாளரை தாக்கிய வட்டாட்சியர் நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனைவி மனு

 தருமபுரி, ஏப்.6- தன் கணவரை தாக்கிய நில எடுப்பு வட்டாட்சியர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதி என்பவர் தருமபுரி  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்ததால்  பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நான்  குடியிருந்துவருகிறேன். எனது  கணவர் எம்.சுரேஷ்குமார்.  ஓசூர் மாநகராட்சியில் சிறப்பு வருவாய் ஆய்வாளராக பணியாற்றிவருகிறார். இந்நிலையில்,  தருமபுரி மாவட்டம், பாலக்கோடு கே. செட்டிஅள்ளி கிராமத்தில் ஆக்ஸ்போர்டு எஜிகேசனல் டிரஸ்ட்டுக்கு சொந்தமான 1 ஏக்கர் 40 சென்ட் நிலம் உள்ளது. இந்நிலத்தை, தருமபுரி - அத்திப்பள்ளி வரை என்எச்  -844 புதிய 6 வழிச்சாலை அமைக்கப்படுவதால் இந்த டிரஸ்டுக்கு சொந்தமான நிலம் கையகப்படுத்தினர்.  இந்த  நிலத்திற்கு குறைந்த இழப்பீடு வழங்கியதால் உரிய இழப்பீடு கேட்டு ஆக்ஸ்போர்டு எஜிகேசனல் டிரஸ்ட்  நிர்வாக இயக்குநரான நான், ஓராண்டுக்கு முன் பணியில் இருந்த   தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினியிடம் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீது  மனுதாரரிடம் விசாரணை முடிவுற்ற நிலையில், எந்த முடிவும் அறிவிக் காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதனையடுத்து கடந்த 6 மாதகாலமாக மேல் முறையீடு  மனுவின் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.  இந்நிலையில்,  ஏப்ரல் 6 அன்று காலை  நானும் எனது  கணவர் சுரேஷ் குமாருடன் தருமபுரி நில எடுப்பு வட்டாட்சியர் அலுவல கத்திற்க்கு வந்து தர்மராஜியிடம் மேல்முறையீடு மனு குறித்து  கேட்டேன்.  அதற்கு, அவர் வேறு ஒருவரை பார்க்க சொன்னார்,  நான், ஏன் சார் மாத கணக்கில் என்ணை அலையவைக் கிறீர்கள் என கேட்டேன். அப்படிதான் என மிரட்டும் தொனியில்  வட்டாட்சியர் பேசினார். இதற்கு என் கணவர் சுரேஷ்குமார் ஏன் எங்களை இப்படி மிரட்டுகிறீர்கள்  என கேட்டதற்க்கு வட்டாட்சியர் தர்மராஜ், என் கணவர் சுரேஷ்குமாரை கண் மீது அவரது கைகளால் அடித்தார். இதனால் என் கணவர் சுரேஷ்குமார் நிலைகுலைந்து தடுமாறி கீழே விழுந்தார்.மேலும் எங்களை  ஆபாச வார்த்தை களால் திட்டி மிரட்டினார். இதனையடுத்து தருமபுரி அரசு மருத்துவமனையில்என் கணவர் சுரேஷ்குமார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட் டுள்ளார். மேல்முறையீடு மனுமீது விசாரிக்க என்னுடன் வந்த என் கணவர் சுரேஷ்குமாரை தாக்கிய வட்டாட்சியர் தர்மராஜ் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனு அளிக்க வந்ததாக தெரிவித்தார்.

செந்நாய்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

உதகை, ஏப்.6- முதுமலை புலிகள் காப்பகத்தில் அழிவின் பட்டியலில் இருந்த செந்நாய்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித் துள்ளது. இதற்கு சூழலியல் ஆர்வலர்கள் வரவேற்பு தெரி வித்துள்ளனர்.  மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் 55 சதவீதம் வனப் பகுதி மிகுந்த மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்த செந் நாய்கள் 15 ஆண்டுகளுக்கு முன்பு வேட்டை உட்பட பல்வேறு  காரணங்களால் அழிவை நோக்கி சென்றது. தற்போது  சமீபத்தில் எடுக்கப்பட்ட வனவிலங்குகளின் கணக்கின்படி முதுமலை புலிகள் காப்பகம், நீலகிரி மற்றும் கூடலூர் வனக்கோட்டங்களில் செந்நாய்கள் எண்ணிக்கை 70  சதவிகித்த்திற்கு மேல் அதிகரித்திருப்பது தெரியவந் துள்ளது. கூட்டமாக வாழக்கூடிய தனக்கென்று வாழ்விடம் அமைத்துக் கொண்டு வாழக்கூடிய செந்நாய்கள்களை பார்த்தால் யானை, புலி போன்ற வனவிலங்குகள் கூட அச்சத்தில் ஓடிவிடும். முதுமலை புலிகள் காப்பகம் வெளிமண்டல வனப் பகுதியில் உள்ள சிங்கார வனப் பகுதியில் செந்நாய் கூட்டம் ஓடி ஆடி விளையாடிய காட்சியை வாகனத்தில் சென்ற  சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். மாயார் சாலையில் மானை வேட்டையாடி செந்நாய் கூட்டம்  மற்றும் காட்டுப்பன்றி  சாப்பிடும் காட்சியும் சுற்றுலா பயணிகள்  கண்டு ரசித்தனர்.

பழங்குடியினரின் திருவிழா

உதகை, ஏப்.6- முதுமலை புலிகள் காப் பகம் அடர்ந்த வனப்பகுதி யில் உள்ள பெண்ணை பொம்மதேவர் கோவில் திரு விழா நடைபெற்று வரு கிறது.  நீலகிரி மாவட்டம், முது மலை புலிகள் காப்பகத்தில்  உள்ள அடர்ந்த வனப்பகு தியில் பெண்ணை பகுதியில் பண்டைய பழங்குடியின மக்கள் வசித்து வருகின் றனர். இவர்களின் குல தெய்வமான பொம்மதேவர் கோவில் திருவிழா வனப் பகுதியில் உள்ள கோயிலில் நடைபெற்றது. விசேச பூஜையில் பழங்குடியின மக்கள்  இயற்கை சார்ந்த பொருள்களான மூங்கிலால்  வடிவமைக்கப்பட்ட இசைக் கருவிகள் மூலம் இசைத்து அவர்களின் பாரம்பரிய நடனமாடி இயற்கை வளங் கள் செழிக்கவும், வன விலங்குகளிடம் இருந்து மக்களை பாதுகாக்கவும், நல்ல மழை பெய்து விவ சாயம் பெருக்க வேண்டும் என வலியுறுத்தி விசேச பூஜைகள் நடைபெறுகிறது. இயற்கைக்கு முக்கியத் துவம் அளித்து பழங்குடி யின மக்கள் கொண்டாடும் விழாவாக இது உள்ளது.

உடுமலை அணைகளின் நிலவரம்

திருமூர்த்தி அணை  நீர்மட்டம்:43.78/60அடி  நீர்வரத்து:570கன அடி வெளியேற்றம்:1124கன அடி  அமராவதி அணை  நீர்மட்டம்:54.27/90அடி. நீர்வரத்து:178கனஅடி வெளியேற்றம்:15கன அடி

தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் 

நாற்றுகளுக்கு தண்ணீர் ஊற்றக்கூட ஆட்கள் இல்லாத நிலை

உதகை, ஏப்.6- தோட்டக்கலைத்துறை ஊழியர்களின் வேலை நிறுத்தம்  காரணமாக  குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கோடை விழா விற்காக நடப்பட்ட மலர் நாற்றுகளுக்கு தண்ணீர் ஊற்ற கூட ஆட்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையில் பணி யாற்றி வரும் பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்களின் சிறப்பு காலமுறை ஊதியத்தை, காலமுறை ஊதியமாக மாற்றி வழங்க வேண்டும். தோட்டக்கலைத்துறையில் தினக்கூலி பணியாளர்களாக பணியாற்றும் பண்ணை மற்றும்  பூங்கா பணியாளர்களுக்கு தினசரி ரூ.400 ஆக உள்ள ஊதி யத்தை ரூ.700 ஆக உயர்த்த வேண்டும் என்பது உள்பட 10  அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 15 தினங்களாக  வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், குன்னூர் சிம்ஸ்பூங்காவில் கோடை சீசனுக்கு பழக்கண்காட்சிக்காக இரண்டரை லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ள நிலையில் தண்ணீர் ஊற்ற  கூட ஆட்கள் இல்லாமல் காணப்படுகிறது. மேலும் பூங்கா  முழுவதும் குப்பைகளாக பராமரிப்பின்றி காணப்படுகிறது படகு சவாரி, கண்ணாடி மாளிகை செயல்படாமல் பூட்டப் பட்டுள்ளன. வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். இதே நிலை நீடித்தால், கோடை விழா நடை பெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது.

கல்லூரி பேருந்து மோதி தந்தை, மகன் பலி

கோவை, ஏப்.6- கோவை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை,  மகன் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே உள்ள கணபதி பாளையம் நார்த்தங்காடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேலு. இவர் தனது மகன் நந்தகுமாருடன் அதிகாலை கோவிலுக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென் றுள்ளார். அப்போது கிட்டாம்பாளையம் நான்கு வழி சாலை யில் செல்லும்போது, பொள்ளாச்சியில் இருந்து சத்திய மங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் கல்லூரி  பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே தந்தையும், மகனும் உயிரிழந்தனர்.  விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் இருவரது சடலங் களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநர் செல்வம் என்பவரை கைது செய்து  கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில்  பொள்ளாச்சியை சேர்ந்த தனியார் பாலிடெக்னிக் மாணவர்களை, சத்தியமங்கலம் தனியார் கல்லூரியில் நடை பெறும் நேர்காணலுக்கு அழைத்து சென்ற போது விபத்து ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.  இந்த விபத்து குறித்து கண்காணிப்பு கேமரா காட்சி வெளி யாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோட்டில் மே 5 இல் வணிகர் உரிமை முழக்க மாநாடு

ஈரோடு, ஏப்.5- வணிகர் உரிமை முழக்க மாநாடு ஈரோட் டில் வரும் மே மாதம் 5 ஆம் தேதி நடைபெற வுள்ளது என தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேர மைப்பு சார்பில் ஈரோட்டில் மே மாதம் 5 ஆம்  தேதி நடக்க உள்ள வணிகர் உரிமை முழக்க  மாநாட்டிற்கான பந்தல் கால்கோள் விழா புதனன்று நடைபெற்றது.   மாநில பொதுச்செயலாளர் கோவிந்த ராஜுலு வரவேற்றார். பந்தல் அமைக்கும் பணியை தொடங்கிவைத்த மாநில தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஈரோடு சித்தோடு புற வழி சாலையில் மே 5இல் வணிகர் உரிமை  முழக்க மாநாட்டு நடக்கிறது. வணிகர்களின் நீண்ட கால பிரச்சனைகள் குறித்து இம் மாநாட்டில் முடிவுகள் எடுக்கப்படும்.  வணிக  நிறுவனங்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை  உரிமம் பெறுதல் மற்றும் வணிகர் நல வாரியம் குறித்து அரசிடம் வலியுறுத்தப் படும். ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட் கட்டு மான பணிகள்  நிறைவடைய உள்ளதால், அங்கு ஏற்கனவே கடை வைத்திருந்த வியா பாரிகளுக்கே முன்னுரிமை அடிப்படையில் கடைகளை ஒதுக்க வேண்டும். வணிகர்களின் நலன் தொடர்பான அரசு  அறிவிப்புகளை உரிய முறையில் செயல் படுத்தாமல், லஞ்சம் பெறும் நோக்கத்தில் தாமதம் ஆக்கி அரசுக்கு கெட்ட பெயரை  ஏற்படுத்துவதை அதிகாரிகள் மாற்றிக் கொள்ள வேண்டும்.  இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் ஆன்லைனில் வர்த்தகம் மேற்கொள்வதை ஏற்கிறோம். ஆனால், சர்வதேச நிறுவனங்கள்  ஆன்லைனில் மருந்து உள்ளிட்ட அத்தியா வசிய பொருள்கள் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும். ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் தடை செய்யப் பட்ட, பயன்படுத்தக்கூடாத மருந்துகள், போதை பொருள்களை ஆன்லைனில் விற் பனை செய்வதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்தால் மக்கள் ஏமாற்றப்படுவதுடன், அரசுக்கு செலுத்த வேண்டிய வரியும் பாதிக்கிறது. வணிகர்கள் மாநாட்டுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் மற்றும் மாநில அமைச்சர்கள் 5  பேர் பங்கேற்க செய்ய முயற்சி மேற் கொண்டு வருகிறோம் என்றார். நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட தலைவர் சண்முகவேல், மாவட்ட செயலாளர் ராமச் சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செங்கல் சூளைக்காக தோண்டப்பட்ட பகுதிகளை சமன்படுத்தும் பணி

கோவை, ஏப்.6- செங்கல் சூளைக்காக தோண்டப்பட்ட பகுதிகளை சமன்படுத்தும் பணிகள் நடை பெற்று வருகிறது.  கோவை மாவட்டம், வடக்கு தாலுகா, பெரியநாயக்கன்பாளையம் பஞ்சாயத்து உட்பட்ட சின்ன தடாகம், 24 வீரபாண்டி, பன்னி மடை, சோமியம்பாளையம், நஞ்சுண்டாபுரம் ஆகிய பஞ்சாயத்துகளில் உள்ள செங்கல்  சூளை உரிமையாளர்களால் மண் தோண்டி  எடுக்கப்பட்டன. இதில், உரிமம் வழங்கப் பட்ட அளவைவிட முறைகேடாக அதிக ளவில் மண் தோண்டி எடுத்துள்ளனர். இத னால் ஏற்பட்ட பள்ளங்களை சமன்படுத்த  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.  இதையடுத்து, கோவை மாவட்ட ஆட்சியர் மார்ச் 27ஆம் தேதியன்று மண்  எடுக்கப்பட்ட பட்டா நிலம் மற்றும் அரசு நிலங் களில் உள்ள மண் திட்டுக்கள், வரப்புகளை சமன்படுத்த உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, மண் எடுக்கப்பட்ட பகுதி களில்  செங்கல் சூழை உரிமையாளர்கள் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் சமன்படுத்தும் நடைபெற்றது.  முன்னதாக, கடந்த 2019ஆம் ஆண்டு செங்கல் சூளைக்காக மண் எடுப்பதற்கு கோவை மாவட்ட ஆட்சியரால் தடை விதிக் கப்பட்டிருந்தது.    மேலும், முறைகேடாக  மண் எடுக்கப் பட்டதற்கு செங்கல் சூளை உரிமையாளர் களுக்கு, மாவட்ட நிர்வாகம் அபராதம் விதித்தது. இதில், ரூ.1 லட்சம் முதல் ரூ.8  லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட் டிருந்தன.  கனிம வளங்களை பாதுகாப்பு கட்டண மாக ரூ.65 ஆயிரம் செங்கல் உற்பத்தி உரிமை யாளர்களால் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பி டதக்கது.

பொது மக்கள் சாலை மறியல்

திருப்பூர், ஏப்.6- திருப்பூரில், சாலை விரிவாக்க பணிகள் நடைபெறும்  பகுதிகளில் முறையான அறிவிப்பு பலகைகள் வைத்து  விபத்துகளை தடுக்க வலியுறுத்தி பொது மக்கள் சாலை  மறியல் செய்தனர்.  பல்லடம் அருகே உள்ள ஆலூத்து பாளையம் பிரிவு பகுதி யில், பல்லடம்- தாராபுரம் சாலை விரிவாக்கப் பணி நடை பெற்று வருகிறது. இந்த நிலையில் சாலை விரிவாக்க பணி யால் அடிக்கடி அந்த பகுதியில் விபத்துக்கள் ஏற்படுவதா கவும், விபத்துக்களை குறைக்க சாலை விரிவாக்க பணிகள்  நடைபெறும் பகுதிகளில் முறையான அறிவிப்பு பலகைகள்  வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி புதனன்று  இரவு அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில்  ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு சென்ற பல்லடம் துணை  காவல் ஆணையர் சவுமியா, ஆய்வாளர் மணிகண்டன், மற் றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச் சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

ரூ. 1.54 கோடிக்கு பருத்தி ஏலம்

தாராபுரம், ஏப்.6- மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சுமார் ரூ. 1.54  கோடிக்கு பருத்தி ஏலம் போனது. திருப்பூர் மாவட்டம், மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூட முதுநிலை செயலாளர் ஆர்.பாலச்சந்திரன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மூலனூர் ஒழுங் குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி விற்பனை மறை முக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி,  திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த 715  விவசாயிகள் பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்தி ருந்தனர். அதேபோல் பருத்தியை கொள்முதல் செய்ய திருப் பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை  சேர்ந்த வணிகர்கள் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர். அதிக பட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ. 8 ஆயிரத்து 128  க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ. 6 ஆயிரத்து 500 க்கும்  சராசரி விலையாக ரூ. 7 ஆயிரத்து 350 க்கும் விலை போனது.  மொத்தம் 7083 மூட்டைகள் 2 ஆயிரத்து 178 குவிண்டால் பருத்தி  ரூ. 1 கோடியே 54 லட்சத்து 61 ஆயிரத்து 346 க்கு விற்பனையா னது. இந்த ஏலத்தில் 29 வணிகர்கள் பங்கேற்றனர். ஏலத்திற் கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்தி ருந்தார்.

ரூ.37 லட்சத்து 32 ஆயிரத்துக்கு  பருத்தி ஏலம் 

அவிநாசி,ஏப்.6- அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் பருத்தி ஏல வர்த்தகம்  நடைபெற்று வருகிறது.  அவிநாசி கூட்டுறவு விற்பனை சங்கத்தில்  நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.37 லட்சத்து 32 ஆயிரத்துக்கு  பருத்தி ஏல  வர்த்தகம் நடைபெற்றது.  இந்த வாரம் நடைபெற்ற பருத்தி  ஏலத்திற்கு, மொத்தம் 1827 பருத்தி மூட்டைகள் மட்டும் வந்தி ருந்தன. சென்ற வாரத்தைவிட, இந்த வாரம் பருத்தி மூட்டை கள் வரத்து அதிகரித்து இருந்தன. இதில், ஆர்.சி.எச்.  பி.டி.ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு  ரூ. 7000 முதல்  ரூ.8188 வரையிலும், கொட்டுரக (மட்டரக) பருத்தி குவிண் டால் ஒன்றுக்கு ரூ. 2500 முதல் ரூ.4000 வரையிலும் ஏலம் போனது. நேற்று பருத்தி ஏல மையத்தில் மொத்தம் ரூ.37 லட்சத்து 32 ஆயிரத்துக்கு   பருத்தி ஏல வர்த்தகம் நடை பெற்றது.

மின்வாரிய அலுவலர் எனக்கூறி மோசடியில் ஈடுபடும் நபர்கள்

தாராபுரம், ஏப்.6 - தனிநபர்கள் தன்னை மின்வாரிய அலு வலர் எனத் கூறிகொண்டு மின்இணைப்பு வாங்கி தர பணம் கேட்டால், புகார் அளிக்க  வேண்டும் என தாராபுரம் மின்சார வாரிய  செயற்பொறியாளர் வேண்டுகோள் விடுத் துள்ளார். தாராபுரம் மின்வாரிய செயற்பொறி யாளர் வ.பாலன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தாராபுரம் நகர் பகுதிக ளில், கிராம பகுதிகள் மற்றும் தாராபுரம் பிரிவு  அலுவலகங்களுக்கு உட்பட்ட ஆள் நடமாட் டம் இல்லாத சில பகுதிகளில் ஏற்கனவே வழங்கப்பட்ட மின் இணைப்புகளின் மின் அள விகள் திருடப்பட்டுள்ளது. அவிநாசி பகுதி யில் வாரியமல்லாத தனிநபர் ஒருவர் தன்னை  மின்வாரிய அலுவலர் எனக்கூறி, புதிதாக  மின்இணைப்பு பெற விண்ணப்பித்துள்ள விண்ணப்பத்தாரரிடம், மின்வாரியத்திலி ருந்து மின்அளவி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து தாராபுரம் பகுதியில் திருடப்பட்ட மின்அளவியை விண்ணப்பத்தாரருக்கு அளித்து ரூ.5000 பெற்று மோசடி செய்து சென்றதாக அவிநாசி மின்வாரிய பொறியா ளர் தாராபுரம் மின்வாரிய செயற்பொறியா ளருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவிநாசி மற்றும் தாராபு ரம் காவல் நிலையங்களில் பிரிவு அலுவலர் களால் புகார் அளிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போன்று சில நாட்களுக்கு முன்பு பல்லடம் மின்பகிர்மான பகுதிகளில் மின்இணைப்பு பெற விண்ணப்பித்த விண்ணப்பதாரரிடம்   மின் இணைப்பு வழங்க மின்அளவி ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறி  உடுமலை வட் டத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட மின் அள வியை திருடி அந்த மின் அளவியை விண்ணப் பத்தாரர்களிடம்  தன்னை மின்வாரிய பணி யாளர் எனக்கூறி மோசடி செய்து ரூ.6000 பெற்று சென்றுள்ளார். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் பிரிவு அலுவலர் புகார்  அளித்துள்ளார்.  தாராபுரம் கோட்டத்தில் உள்ள அனைத்து மின்நுகர்வோர்களும் தங்களுக்கு வழங்கப் பட்ட மின்இணைப்புகளில் பொருத்தப் பட்ட மின்அளவிகளை பாதுகாப்பாக வைத் துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகி றது. மேலும் புதிதாக மின்இணைப்பு பெற விண்ணப்பித்த விண்ணப்பத்தாரர்கள் மின் வாரியம் அல்லாத தனிநபர் தன்னை மின்வா ரிய பணியாளர் எனத் தெரிவித்து மின் அளவி  ஒதுக்கப்பட்டதாக கூறி மோசடி செய்து  பணத்தை கோரினால் உடனடியாக உதவி மின்பொறியாளர் (விண்ணப்பித்த பிரிவு அலு வலகம்) அல்லது செயற்பொறியாளர் தாராபு ரம் அவர்களுடைய கைபேசி எண்: 9445851562 கைபேசிக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இதுபோல் சந்தேகப்படும் படி மோசடி நபர்கள் தங்கள் பகுதிக்குள் கண்டறியப்பட்டால் உடனடியாக தங்கள்  பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையத்திலும்  மற்றும் மின்வாரிய அலுவலர்களிடமும் புகார்  அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாராபுரத்தில் விபத்தில் உயிரிழந்த தொழிலாளி  இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

தாராபுரம், ஏப்.6 - தாராபுரத்தில் அரசுப் பேருந்து மோதி உயி ரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு இழப்பீடு  வழங்காததால் நீதிமன்ற உத்தரவுப்படி அரசு   பேருந்து ஜப்தி செய்யப்பட்டது. தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டி ணம் அடுத்த ஊத்துப்பாளையம் பண்ணாடி தோட்டத்தை சேர்ந்த காளியப்பன் என்பவரது  மகன் தங்கவேல் (45). இவர் கடந்த 2008 ஆம்  ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி தனது நண்ப ருடன் இருசக்கர வாகனத்தில் தாராபுரம் - ஒட் டன்சத்திரம் சாலை மாட்டுப் பாதை சாலை அருகே சென்றுகொண்டிருந்தார். அப் போது வேகமாக வந்த அரசு  பேருந்து மோதி  விபத்து ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில் இருந்து பேருந்தின் அடியில் விழுந்த தங்க வேல்  படுகாயமடைந்தார். அருகில் இருந்த வர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோ தனை செய்ததில் அவர் உயிரழந்தது தெரிய வந்தது. இதையடுத்து விபத்தால் தனது மகன்  உயிரிழந்ததற்கு அரசுப் போக்குவரத்துக் கழ கம் இழப்பீடு வழங்கக்கோரி தங்கவேலின் தந்தை தாராபுரம் மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன் றம், தங்கவேல் குடும்பத்துக்கு ரூ.7 லட்சத்து  38 ஆயிரம்  இழப்பீடாக அரசுப் போக்குவ ரத்துக் கழகம் வழங்க வேண்டும் என கடந்த  2017 டிசம்பர் 16ஆம் தேதி உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவுப்படி போக்கு வரத்து கழகம் இழப்பீடு வழங்கப்பட வில்லை. இதையடுத்து காளியப்பன் நீதி மன்ற உத்தரவை நிறைவேற்றக் கோரி மனு  தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதி மன்றம் பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட் டது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு தாராபுரம் பழனி வழித்தடத்தில் இயங் கும் அரசு  பேருந்து ஜப்தி செய்யப்பட்டு நீதி மன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

மாவட்ட அளவிலான போடியில் வெற்றி பெற்ற மாணவர்களை மாநில அளவிலான போட்டிக்கு அழைத்து செல்லவில்லை

அவிநாசி,ஏப்.6 அவிநாசி பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான  வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றும்,  மாநில அளவிலான போட்டிக்கு அழைத்துச் செல்லப்படவில்லை. மாணவர்களை மாநில  அளவிலான போட்டிக்குப் பள்ளி அழைத்துச்  செல்ல வேண்டும் என  பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம்,  சேவூரைச் சேர்ந்தவர் அருள் செல்வன், கட் டிட பொறியாளர். இவரது மனைவி மல்லிகா  அரசு தொடக்கப் பள்ளி தலைமையாசிரி யராக உள்ளார். இவர்களது மகன் கதிரவன் (14), சேவூர் அருகே பஞ்சலிங்கம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில், நடத்தப்பட்ட வினாடி -  வினா போட்டியில் வட்டார மற்றும் மாவட்ட  அளவில் வெற்றி பெற்ற கதிரவன்,  அவருடன்  இணையாக பங்கேற்று வெற்றி பெற்ற அதே பள்ளிச் சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவன் அபி ஷேக் ஆகியோர் மாநில அளவில் சென்னை யில் நடைபெறும் மெய்யறிவு கொண்டாட் டத்திற்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப் பட்டனர். இதையடுத்து மாநில அளவிலான  போட்டி சென்னையில் ஏப்ரல் 3ஆம் தேதி தொடங்கியது. ஆனால் இப்போட்டிக்கு திருப்பூர் மாவட்டத்தில் வெற்றி பெற்ற  கதிரவன், அபிஷேக் ஆகிய இருமாணவர்க ளும் அழைக்கப்படவில்லை. இது குறித்து, மாணவன் கதிரவனின் தந்தை பள்ளி கல்வித்துறையினரிடம் கேட்ட  போது, உரிய பதில் கிடைக்கவில்லை என  தெரிவித்தார். மேலும் பஞ்சலிங்கம்பாளை யம் அரசு பள்ளிக்கான கியூ ஆர் கோடு இணைத்து பதிவேற்றம் செய்யாததால், மாணவர்கள் கதிரவன், அபிஷேக் ஆகி யோர் மாநில அளவிலான போட்டிக்கு அழைக்கப்படவில்லை. ஆகவே இறுதி நாளான ஏப்ரல் 8ஆம் தேதிக்குள் மாண வர்கள் போட்டியில் பங்கேற்க அழைத்துச் செல்ல வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒற்றை காட்டு யானை தாக்கியதில் வாகனங்கள் சேதம்

உடுமலை, ஏப்.6- உடுமலை வனப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக ஒற்றை  யானையின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக வனத்துறை யினர் எச்சரிக்கை செய்த நிலையில், ஒற்றை யானை வாகனங் களைத் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உடுமலை மூணார் செல்லும் சாலை 9/6  செக்போஸ்ட்  என்ற பகுதியில் இருந்து வனப்பகுதியில் சுமார் 60 கிலோ  மீட்டர்  தார் சாலையில் சின்னார், மறையூர் மற்றும் தேயிலைத்  தோட்டங்களை கடந்து சென்றால் மூணார் பகுதியை அடை யமுடியும். இந்த அடர்ந்த வனப்பகுதியில் வறட்சி நிலவு கிறது. அதனால் தற்பொழுது காட்டு விலங்குகள் உணவு  மற்றும் தண்ணீர் தேடி மலை அடிவார பகுதிகளுக்கு வரத் தொடங்கியுள்ளது. கடந்த ஒரு மாதமாக மறையூர் பகுதியில்  ஒற்றை யானை மக்கள் குடியிருப்பு பகுதிகளில் வருவதா கவும் அனைவரும் எச்சரிக்கையாக இருக்கும் படி வனத்து றையினர் எச்சரிக்கை விடுத்த நிலையில், புதனன்று உடு மலை மூணார் சாலையில் பகல் நேரத்தில் இவ்வழியாக வந்த  வாகனங்களை மறித்து தாக்கி உள்ளது.

உடுமலை அணைகளின் நிலவரம்

திருமூர்த்தி அணை நீர்மட்டம்:43.78/60அடி நீர்வரத்து:570கன அடி
வெளியேற்றம்:1124கனஅடி
அமராவதி அணை நீர்மட்டம்:54.27/90அடி.நீர்வரத்து:178கனஅடி
வெளியேற்றம்:15கன அடி

குழந்தை கடத்தியதாக புகார்

கோவை, ஏப்.6- கோவை அருகில் 4 மாத குழந்தையை காணாத நிலையில்,  கணவர் மீது சந்தேகமடைந்துள்ள நிலையில், போலீசார் விசா ரண மேற்கொண்டு வருகின்றனர்.  கோவை - ஒண்டிப்புதூர் அன்னை சத்யா நகர் பகுதி  சேர்ந்தவர் ஜோதிகா (22). இவருக்கு இரண்டு ஆண்டுக ளுக்கு முன்பு திருமண நடைபெற்றது. இவருக்கு நான்கு மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது.  இந்நிலையில், இவ ருக்கும் கணவர் சக்திவேலுக்கும் இடையே கருத்து வேறு பாடு காரணமாக,  கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகி றார். ‌ இந்நிலையில், வீட்டில் இருந்த குழந்தையை திடீ ரென காணவில்லை.‌  இது குறித்து, ஜோதிகா சிங்காநல் லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக் குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   இந்நிலையில்  ஜோதிகாவின் கணவர் அத்துமீறி வீட்டின்  புகுந்து குழந்தையை தூக்கி சென்று இருக்கலாம் என கூறப்ப டுகிறது.  குழந்தை காணாமல் போன பிறகு சக்திவே லையும் காணவில்லை.‌  இது தொடர்பாக போலீசார் விசாரித்து  வருகின்றனர்.

மோடி உதகை வருகை - 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

மோடி உதகை வருகை - 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு உதகை, ஏப். 6- நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு 9 ஆம்தேதி பிரதமர் நரேந்திர மோடி  வருகையை முன்னிட்டு 2 ஆயிரம் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 9 ஆம்தேதி பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (இன்று) முதல் 9 தேதி வரை நீலகிரி மாவட் டத்தில் டுரோன்கள் பறக்க காவல்துறை தடை விதித்துள் ளது. பாதுகாப்பு கருதி 8-ந்தேதி மாலை 4 மணி முதல்  9-ந்தேதி 10.30 மணி வரை தொரப்பள்ளி - கக்கநல்லா - பந்திப்பூர்  தேசிய நெடுஞ்சாலை  மூடவும் கர்நாடகாவிலிருந்து கேரளா  செல்லும் அனைத்து வாகனங்களும் சுல்தான்பத்தேரி தேசிய  நெடுஞ்சாலையில் திருப்பி விட நீலகிரி, வயநாடு, சாம்ராஜ்  நகர் மாவட்ட அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு  செய்யபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உதகை யில் 1 மணிநேரம் மழை 

உதகை, ஏப்.6- உதகை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஒரு மணி நேரமாக இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் சுற்றுலா பய ணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் சுற்று வட்டார பகுதி களில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனம ழையும் பெய்து வருகிறது. இந்நிலையில், உதகை மற்றும்  சுற்று வட்டார பகுதிகளில் வியாழனன்று காலை முதல் வெயில் வாட்டிய நிலையில், மாலையில் திடீரென கருமேகங் கள் சூழ்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால்  தொட்டபெட்டா, தலைக்குந்தா, பிங்கர்போஸ்ட், புதுமந்து,  இத்தலார் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய கனமழை  பெய்தது. இதனால், சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டது. மேலும், கனமழையினால் குளிர்ச்சி நிலவுவதால் பொது  மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். 

ஆன்லைன் டாஸ்க்கில் ரூ.7.96 லட்சம் மோசடி

கோவை, ஏப்.6- ஆன்லைன் டாஸ்க்கில் கலந்து கொண்ட வரிடமிருந்து ரூ.7.96 லட்சம் மோசடி செய்யப் பட்டுள்ளது.  கோவை புதூரை அடுத்த கோவை கார்டன் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்  (38). இவர் சாப்ட்வேர் இன்ஜினியராக உள் ளார். இந்நிலையில், இவர் ஆன்லைன் மூல மாக பகுதி நேர வேலையும் தேடி வந்தார்.‌ இந்நிலையில் இவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.  அந்த குறுஞ்செய் தியில், கேள்வி பதில் தொடர்பான டாஸ்க்கில் பங்கேற்றால் அதன் மூலமாக அதிக லாபம் ஈட் டலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.  இதைத் தொடர்ந்து, மணிகண்டன்  ஆயி ரம் ரூபாய் யுபிஐ பரிவர்த்தனை மூலமாக  செலுத்தினார். மேலும், இவரது செல்போன் எண் டெலிகிராம் செயலி மூலமாக இணைக் கப்பட்டது. இதில் பல்வேறு தவணை களில் மணிகண்டன் ரூ.7.96 லட்சத்தை ஆன் லைன் பரிவர்த்தனை மூலமாக செலுத்தி னார். இந்நிலையில், இவர் செலுத்திய தொ கைக்கு,  பணம் மற்றும் லாபத்தொகை எது வும் திரும்ப கிடைக்கவில்லை.‌ இது தொடர்பாக மணிகண்டன் கோவை  நகர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித் தார்.‌போலீசார் வழக்குப் பதிவு செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.

காட்டு யானைகள் முகாம் - வனத்துறை எச்சரிக்கை

உதகை, ஏப். 6- நீலகிரி மாவட்டம், குன்னூர் மேட்டுப்பா ளையம் சாலையில் 7 காட்டு யானைகள் பர்லி யார்  பகுதியில் முகாமிட்டிருப்பதால்  வாகன  ஓட்டிகள் மற்றும் குடியிருப்பு வாசிகள் எச்சரிக் கையுடன் இருக்க வனத்துறையினர் அறவுறு தியுள்ளனர். சமவெளிப் பகுதியான மேட்டுப்பா ளையம் பகுதியில் கடும் வறட்சி நிலவு வதால், மேட்டுப்பாளையம்  வனப்பகுதியில் இருந்து  உணவு மற்றும் குடி நீருக்காக  குன் னூர் அருகே உள்ள  ரன்னிமேடு ரயில் நிலையம் மற்றும் நஞ்சப்பசத்திரம் பகுதிகளில் கடந்த  ஒரு மாதகாலமாக உலா வந்த 7 காட்டுயா னைகள்  பர்லியார் பகுதியில் தற்போது முகா மிட்டுள்ளன. இந்த  யானைகள் குடியிருப்புகளுக்கு அருகில்  வந்து விடாமல் கண்காணிக்கும் பணியில் 10க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழி யர்கள்  ஈடுபட்டுள்ளனர்.  இவை, அவ்வப்போது சாலைகளை கடந்து செல்வதால்   வாகன ஓட்டிகள் மிகவும்  எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்  என்று  வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

பூத்து குலுங்கும் காபி பூக்கள்

உதகை, ஏப். 6- கூடலூரில், காப்பி தோட் டங்கள் அதிக வறட்சி நில விய நிலையில், நான்கு நாட் கள் மழை பெய்ததும் காபி தோட்டங்களில் பூக்கள் பூத் துக் குலுங்குகிறது, குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த நான்கு  நாட்கள் பெய்த மழை கார ணமாக கருகி கிடந்த காப்பி செடிகள் உயிர் பிடித்து பூத் துக் குலுங்க துவங்கி யுள்ளது. பெரும்பாலும் தேயிலை செடிகளுக்கு நடு வில் ஊடுபயிராக சிலர் மட்டு மே காப்பி செடிகளை வளர் த்து வருகின்றனர். பூக்கள்  வெள்ளை நிறத்தில் கான் போர் மனதை கொள்ளை கொள்ளும் அளவிற்கு ரம்யமான காட்சி தருகிறது.