பொதுமக்கள் ஆவேசம் தருமபுரி, டிச.24- தருமபுரி அருகே சோகத்தூர் ஏரியில் விதிமுறைகளை மீறி தனியார் நிறுவனம் மண் எடுப்பதாகக் கூறி, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரியிலிருந்து பாலக்கோடு, ராயக் கோட்டை வழியாக ஒசூருக்கு 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இச்சாலை அமைக்கும் பணிக்காக, தருமபுரி அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்த மான 360 ஏக்கர் பரப்பளவு கொண்ட சோகத் தூர் ஏரியில், லாரிகள் மூலம், தனியார் நிறுவனத்தினர் மண் அள்ளி வருகின்றனர். இந்நிலையில், பொதுவாக நீர் நிலைகளில் மணல் எடுப்பதற்கு அரசு நிர்ணயித்துள்ள விதிமுறைகள் மீறி, கடந்த சில நாட்களாக மண் அள்ளி வருவதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க வேண்டும் என வலியு றுத்தி அப்பகுதி பொதுமக்கள் மண் அள்ள வந்த லாரிகளை முற்றுகையிட்டு போராட்டத் தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பொதுப்பணித் துறை, வருவாய்த்துறை, நகர காவல் துறை யினர் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட னர். இதில், விதிமுறைகள் மீறி, மண் எடுக்கக் கூடாது என அதிகாரிகள், தனியார் நிறுவனத் துக்கு அறிவுறுத்தினர். இதையடுத்து, பொதுமக்கள் தற்காலிகமாக போராட் டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.