districts

img

எங்க ஊரு 7 எண் அரசு பேருந்து எங்கே போனது? விடை தருவார் யாரோ?

கோவை மாநகரத்தில் 7  நிமிடத்திற்கு ஒரு பேருந்து என ஓடிக் கொண்டிருந்த 7 ஆம் எண் அரசு பேருந்து தற்போது ஒரே ஒரு பேருந்து மட்டும் கட மைக்கு ஓடிக்கொண்டிருக்கிறது. எங்கே  எங்க ஊரு பேருந்து என இவ்வழித்தடத்தில் உள்ள மக்கள் கேள்வி கேட்டும் அரசு போக்குவரத்து கழகத்தில் பதில் இல்லை. கோவை, காந்திபூங்காவில் ஆரம்பித்து ஆர்எஸ்.புரம், வடகோவை, பவர்ஹவுஸ், நூறடி சாலை, காந்திபுரம், பார்க்கேட், உப்பிலியபாளையம், கேஜி திரையரங்கம், பந்தயசாலை, புலியகுளம், சுங்கம், அரசு மருத்துவமனை, டவுன்ஹால் வழியாக மீண் டும் காந்திபூங்காவை செல்லும் வகையில் 7 ஆம் எண் பேருந்து  ஓடிக்கொண்டிருந்தது.  

இந்த பேருந்து செல்லும் வழித்தடம் அனைத் தும் மிக முக்கியமானதாகும். கோவை மாந கரின் இதயப்பகுதியை சுற்றிப்பார்க்க வேண் டும் என்றால், 7 ஆம் எண் பேருந்தில் பயணம் செய்தால் போதுமானது. அரசு மருத்துவ மனை துவங்கி, ரயில்நிலையம், ஆட்சியர்  அலுவலகம், நீதிமன்றம், மாநகர காவல் ஆணையர் அலுவலகம், காந்திபூங்கா,  காந்திபுரம், டவுன்ஹால் உள்ளிட்ட  அனைத்து முக்கியமான இடங்களுக்கு அரு கில் செல்லும் ஒரே பேருந்து இந்த 7 ஆம் எண் கொண்ட பேருந்து. கொரோனா தொற்று காலத்திற்கு முன்பு 7 நிமிடத்திற்கு ஒரு அரசு பேருந்து இயக்கப் பட்டு வந்தது. இரண்டு திசையிலும் 7 ஆம் எண் பேருந்து 7ம். 7சி பேருந்து என மொத் தம் 14 அரசு பேருந்துகள் இந்த வழித் தடத்தில் இயங்கி வந்தது.

கொரோனா தொற் றுக்கு பிறகு அரசு பேருந்துகள் மூன்று மட் டும் இயங்கி வந்தது. இது தற்போது ஒரே  ஒரு பேருந்து மட்டும் இயங்கும் நிலைக்கு வந்துள்ளது.  இதுகுறித்து அரசு பேருந்து ஓட்டுநர்கள் கூறுகையில், 7 ஆம் எண் பேருந்து கோவை மாநகரத்தில் உள்ள அனைத்து முக்கிய பகுதிகளுக்கும் செல்லும் வகையில் இந்த வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. மற்ற பேருந்துகள் காலை மற்றும் மாலை என குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் கலெக்சன் அதி கம் கிடைக்கும். ஆனால் 7 ஆம் எண்  பேருந்து செல்லும் வழித்தடத்தில் அனைத்து ட்டிரிப்புகளிலும் கலெக்சன் இருக்கும். கொரோனா தொற்றுக்கு முன்பு ஒரு சிப் டுக்கு ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரம் வரை கலெக்சன் ஆகும்.

இப்போது சுமார் ரூ.8  ஆயிரம் வரையில் கலெக்சன் ஆகிறது. இந்த  வசூல் குறைவிற்கும் காரணம் மகளிருக்கு இலவசம் என்பதால் மட்டுமே. ஆனால் கழக நிர்வாகம் எதற்காக இந்த வழித்தடத்தில் இயங்கி வந்த அனைத்து பேருந்துகளையும் நிறுத்தி விட்டு ஒரே ஒரு பேருந்து மட்டும் இயக்குகிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது. இப்போது இந்த வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்து நிறுவனத் திற்குத்தான் கொண்டாட்டமாக உள்ளது. பொதுவாகவே தனியார் பேருந்து முன் செல்ல அதன் வால் போல் அரசு பேருந்து  பின்தொடர்கிற நிலைதான் தற்போது உள்ளது. அனைத்து பயணிகளையும் வாரி  சுருட்டி தனியார் பேருந்து ஏற்றிய பின்  ஆளில்லாமல் வெறும் வண்டியை ஓட்டும்  நிலைதான் இப்போது உள்ளது. இவை அனைத்தும் போக்குவரத்து கழக நிர்வாகத் தின் ஆசியோடு நடைபெறுகிறதா அல்லது ஏதோச்சையாக நடைபெறுகிறதா என தெரியவில்லை.

இதனால் கலெக்சன் காட்ட வேண்டும் என்கிற நிலையில் தனியார் பேருந்து ஊழியர்களுடன் முரண்பட்டு மோதிக் கொள்ளும் நிலைதான் அடிக்கடி ஏற்படுகிறது.  மேலும், கட்டணமில்லா மகளிர் பேருந்து அதிகம் ஓடுவதால், கடைகளில், சிறுசிறு தொழிற்சாலைகளில், கூலி வேலைக்கு செல் பவர்கள் உள்ளிட்ட பெண்கள் பெரும் பயனடைகின்றனர். இதனை நாங்கள் கண் முன்னே பார்த்து வருகிறோம். ஆனால் இதுபோன்று எந்த அறிவிப்பும் இன்றி அரசு பேருந்துகளை நிறுத்துகிறபோது, பயணி கள் திக்குமுக்காடிப்போகிறார்கள்.  உங்க ளைப்போன்ற ஊடகங்களும், அரசியல்  கட்சி இயக்கங்களும்தான் இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தன்னிச்சை யாக செயல்படும் கழக நிர்வாகத்திற்கு கடி வாளம் போட வேண்டும், என்றனர்.

இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக  கோவை கோட்ட பொது மேலாளர் ஸ்ரீதரனி டம், கோவை மாநகரத்தில் 7 எண் வழித் தடத்தில் இயங்கி வந்த அரசு பேருந்துகள்  குறைந்துள்ளது குறித்து கேட்டபோது, இப்போது எந்த மாநகர பேருந்துகளையும் நாங்கள் குறைக்கவில்லை. கோவை கோட்டத்தில் 951 பேருந்துகள் எப்போதும் போல்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஒருவேளை  கொரோனா தொற்றுக்கு முன்பு வேண்டுமானால் குறைத்திருக்கலாம் இப்போது மாநகர பேருந்துகள் எதனையும் குறைக்கவில்லை.

இன்னும் சொல்லப்போ னால் நீலவண்ணத்தில் புதிதான ஒரு 7 எண் பேருந்து விடப்பட்டுள்ளது என்றார். இப் போது 7 ஆம் எண் பேருந்து எவ்வளவு இயங்குகிறது என கேள்வி எழுப்புகையில், அதனை பார்த்துச்சொல்கிறேன். அல்லது நீங்கள் பேருந்து நிலையத்திலேயே கேட் டுக்கொள்ள முடியுமே என்று முடித்துக் கொண்டார். அரசு போக்குவரத்து கழக பொது மேலா ளருக்கே தெரியாமல் 7 ஆம் எண் அரசு  பேருந்து வழித்தடத்தில் இருந்து மறைத்தது யார் என அரசு போக்குவரத்து கழக ஊழியத் களும், எங்க ஊர் பஸ் எங்கே என மக் களும் கேள்வி எழுப்புகிறார் கள். விடை தருவார் யாரோ?