districts

img

பல்லடம் சாலையில் ஏற்படும் சுகாதார சீர்கேடு: விடிவு பிறப்பது எப்போது? சிபிஎம் மாமன்ற உறுப்பினர் கேள்வி

திருப்பூர், அக்.19- திருப்பூர் - பல்லடம் சாலையில் 53 ஆவது வார்டு நொச்சிப்பாளை யம் பிரிவில் கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு வீதியில் தேங்கி  இருப்பதுடன் அப்பகுதியில் சுகா தார சீர்கேடு ஏற்படுகிறது. பல  ஆண்டுகளாக இந்த பிரச்சனை நீடித்து வந்த போதும் மழைக் காலங்களில் மிக மோசமான பாதிப்பு  ஏற்பட்டாலும் மாநகராட்சி நிர்வா கம் கண்டு கொள்ளாமல் அலட்சிய மாக இருக்கிறது.  இதுகுறித்து 53 ஆவது வார்டு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாமன்ற உறுப்பினர் ஆர்.மணி மேகலை, கட்சியின் தெற்கு ஒன்றி யக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் ஆகியோர் கூறுகையில், நொச்சிப் பாளையம் பிரிவில் மட்டும் இன்றி,  பல்லடம் சாலை நெடுகிலும் டிகேடி மில் பகுதியில் இருந்து, வித்யால யம், தமிழ்நாடு தியேட்டர், எல்ஆர்ஜி  கல்லூரி, மாவட்ட ஆட்சியர் அலு வலகம் வரை கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் கழிவு நீர் வெளி யேறிச் செல்ல முடியாமல் தேங்கி யிருக்கின்றது.  நொச்சிபாளையம் பிரிவிலி ருந்து செல்லும் கழிவுநீர் கால்வாய் குப்பாண்டம்பாளையம், ஓஎம்எஸ் மருத்துவமனை, சுண்ட மேடு வழி யாக மேற்கில் இருக்கும் ஓடையில் சென்று கலக்கிறது. இருந்த போதும் இந்த கால்வாயில் மண்ணும், கல் லும் நிரம்பி அடைப்பு ஏற்பட்டுள் ளது. முழுமையாக தூர்வாரினால் எந்த பிரச்சனையும் இல்லாமல் கழிவுநீர் உடனடியாக வெளியேறி செல்லும். ஆனால் பல ஆண்டுக ளாக தூர்வாரப்படாததால், கற்க ளும் மண்ணும் அடைத்து மழைக் காலங்களில் கழிவுநீர் வடிகால் முழுவதும் சேறும், சகதியுமாக  சாலையில் வெளியேறி வாரக்கணக் கில் தேங்கி நிற்கிறது. மாநகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தாலும் எந்த நடவடிக்கையும் எடுப்ப தில்லை.  இதுபற்றி மாநகராட்சி மாமன் றக் கூட்டத்திலும் பலமுறை பேசப் பட்டுள்ளது. மாநகராட்சி மேயர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரி டமும் பலமுறை கடிதம் கொடுக் கப்பட்டுள்ளது. இது தவிர திருப்பூ ரில் புற்றுநோய் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவிற்கு வந்த  மாநில அமைச்சர் எ.வ.வேலுவிட மும் நேரடியாக கடிதம் கொடுத்து முறையிட்டோம். இருந்த போதும் மாநகராட்சி நிர்வாகம் இப்பிரச்ச னையை கவனிக்காமல் அலட்சிய மாக உள்ளது. கழிவு நீர் வடிந்து செல்ல வழி இல்லாமல், வீதிகளிலும் தெருக் களிலும் தேங்கி நிற்கும் கழிவு நீர் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக் கள் பூச்சிகள் உற்பத்தியாகும் இட மாக மாறி நோய் தொற்று பரப்பும் பகுதியாக உள்ளது. மழைக்காலங் களில் மிகப் பெரும் தொந்தரவாக மாறும் நிலையில், மாநகராட்சி நிர் வாகமும் நடவடிக்கை எடுக்காத தால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். இது போன்ற சூழ் நிலையில் நெருக்கடியை தணிப்ப தற்காக நாங்களே தனியாக ஜேசிபி எந்திரம் ஏற்பாடு செய்து அடைப்பு  உள்ள பகுதியில் அகற்றி நீர் வடிந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண் டிய நிலை ஏற்படுகிறது. திருப்பூர் மாநகராட்சி நிர்வா கம் கடந்த உள்ளாட்சி மன்ற தேர்த லில் பொறுப்பேற்பதற்கு முன்பு இருந்தே, இந்தப் பிரச்சனை நீடித்த போதும், திருப்பூர் நகரின் மிக முக் கியமான போக்குவரத்து மிகுந்த  பல்லடம் சாலையில் மாநகராட்சி நிர்வாகம் உரிய கவனம் செலுத்தா மல், மக்களை அவதிக்கு உள்ளாக் குவது வேதனை அளிப்பதாக உள் ளது. வரக்கூடிய நாட்களும் மழைக் காலமாக இருக்கும் என்பதால், இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட் டுக்கொள்கிறோம், என்றனர்.