districts

img

ரூ.8 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஜோதிநகர் பூங்கா திறக்கப்படுவது எப்போது?

கோவை மாவட்டம், பொள்ளாச்சி நக ராட்சிக்குட்பட்ட ஜோதிநகர்  பகுதியில் 4  ஏக்கர் பரப்பளவில் ரூ.8 கோடி மதிப்பீட் டில் பொள்ளாச்சி  நகராட்சி சார்பில்  பிரம் மாண்டமான  பூங்கா 2021 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இப்பூங்காவில், குழந் தைகளை கவரும் வகையில் தண்ணீர் பவுண்டேஷன்கள் சறுக்கல், ஊஞ்சல்  போன்ற விளையாட்டு உபகரணங்கள்,  நீச்சல் குளம் குடும்பத்துடன் பொழுதை  கழிக்கும் வகையில், மரங்களால் கட்டப் பட்டது போல் கூடாரங்கள் அமைக்கப் பட்டு, வர்ணங்கள் தீட்டப்பட்டுள்ளது.  மேலும், பூங்காவின் நுழைவாயில்  பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்ட சுவர்களில் தமிழர்களின் பாரம்பரிய சின் னங்களை நினைவு கூறும் விதமாகவும் விவசாயத்தையும், பாரம்பரிய விளை யாட்டுகளான சிலம்பம், கில்லி, கபடி போன்ற விளையாட்டுக்களை பற்றியும், பாரம்பரிய இசைக்கருவிகளைப் பற்றி யும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.  2021 ஆம் ஆண்டு பெயரளவிற்கு மட் டுமே இரண்டு மாதங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பூங்கா திறக்கப்பட் டது. இதனையடுத்து பூங்கா பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதாக கடந்த ஆறு மாதங்களாகவே பூங்கா மூடப்பட்டு உள் ளது. இதனால், பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள பொதுமக் கள் மற்றும் குழந்தைகள் ஏமாற்றமடைந் துள்ளனர். இதுகுறித்து ஜோதிநகர் பொதுமக் கள் கூறுகையில், பொள்ளாச்சி நக ராட்சி சார்பில் பல கோடி மதிப்பீட்டில் கட் டப்பட்ட இப்பூங்கா, பல மாதங்களாக  பூட்டி வைக்கப்பட்டுள்ளது. பூங்கா ஒப்பந்த தாரர்கள் பூங்கா பராமரிப்பு பணிகள்  நடைபெற உள்ளதாக தெரிவிக்கின்ற னர். ஆனால், ஆறு மாதங்களாகியும் பராமரிப்பு பணிகள் நிறைவடைய வில்லை, என குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் தரப்பில் கூறுகையில், ஜோதி நகர் பூங்கா  முழுவதும் ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக் கப்பட்டது. இதுகுறித்து ஒப்பந்ததாரே முறையான பதிலளிக்க வேண்டும். ஆனால், இன்றளவும் பதில் அளிக்கப்பட வில்லை. எனவே, இதுகுறித்து  பொள் ளாச்சி நகராட்சி முறையாக நடவடிக்கை  எடுத்து, விரைவில் உரிய தீர்வு காணப் படும், என்றனர்.  -த.கா.மணியாழன்