districts

பருத்தி மீதான இறக்குமதி வரி நீக்கம் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் வரவேற்பு

கோவை, ஏப்.15-  பருத்தி மீதான 11 சதவிகித  இறக்குமதி வரி நீக்க நடவடிக் கைக்கு, தென்னிந்திய பஞ்சாலை கள் சங்கம் வரவேற்பை தெரி வித்துள்ளது. கோவை பந்தய சாலை பகுதி யில் உள்ள தென்னிந்திய பஞ் சாலைகள் சங்கத்தில் இவ்வமைப் பின் தலைவர் ரவிஷாம் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பின் சிட்டி தலைவர் ராஜ்குமார் வெள்ளி யன்று கூட்டாக செய்தியாளர் களை சந்தித்தனர்.  அப்பொழுது, அவர்கள் கூறியதாவது, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு  பருத்தி இறக்குமதி மீதான வரியை  ரத்து செய்ய வேண்டும் என ஒன்றிய  அரசிற்கு கோரிக்கை விடுத்திருந் தோம்.  அதன் அடிப்படையில் ஒன்  றிய அரசு இரண்டு தினங்களுக்கு முன்பு, இந்த வரியை நீக்கி விட்ட னர். இதில் விவசாயிகளுக்கும் பாதகம் ஏற்படுத்தாமல், தொழி லும் பயனடையும் வகையில், ஏப் ரல் மாதம் துவங்கி செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வரியை நீக்கியுள் ளனர். இதன் பயனாக, நூற்பாலை கள், பின்னலாடைகள், விசைத் தறி, கைத்தறி நெசவாளர்கள் பயன் பெறுவார்கள். இந்த ஆண்டு, பருத்தி உற்பத்தி 340 லட்சம் பேல் என்று நிர்ணயம் செய்து இருந்தா லும், 325 முதல் 330 லட்சம் தான்  வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கி றோம். அதாவது, கடந்த ஆண்டை விட 45 லட்சம் பேல் குறைவாக  வரும் என்றும் எதிர்பார்க்கப்படு கிறது.   இந்த வரி நீக்கம் உத்தரவு வந்த பின்னர், பேலுக்கு 1000 ரூபாய் விலை குறைந்துள்ளது. மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. ஏனென் றால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பருத்திகள் அனைத்தும் வெளியே வரும். இந்த இறக்குமதி வரியை ரத்து செய்துள்ளதால் அனைத்து நூற்பாலைகளும் பஞ்சை இறக்கு மதி செய்ய முன்வருகிறார்கள். வெளிநாடுகளில் உள்ள பருத்தி இறக்குமதி செய்ய ஆயத்தமாகி வருகின்றனர். சுமார் 30 முதல் 35 லட்சம் பேல்கள் செப்டம்பர் மாதத் திற்குள் இறக்குமதி ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே இந்த வரியை நீக்கிய ஒன்றிய அர சிற்கு நன்றிகளை தெரிவித்து கொள் வதாக தெரிவித்தனர்.