districts

img

திமுக மாவட்ட செயலாளர்களுக்கு வரவேற்பு

தருமபுரி, அக்.3-  புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள திமுக தருமபுரி கிழக்கு மற்றும் கோவை மாந கர் மாவட்ட செயலாளர்க ளுக்கு அக்கட்சியினர் உற் சாக வரவேற்பு அளித்தனர். தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளராக, மூன்றாவது  முறையாக தடங்கம் சுப்பிர மணி அறிவிக்கப்பட்டார். இத னையடுத்து அவருக்கு, திமுக கிழக்கு மாவட்டம் சார்பில் தருமபுரியை அடுத்த குண்டல் பட்டி கூட்ரோட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, தருமபுரி நான்கு  ரோட்டில் உள்ள அண்ணாத் துரை சிலை, திருப்பத்துார் சாலையில் உள்ள  தந்தை பெரியார் சிலை, தருமபுரி அரசு மருத் துவக்கல்லுாரி மருத்துவமனை அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு அவர் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் மாவட்ட செயலாளராக பெறுப்பேற்ற தடங்கம் சுப்பிர மணிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரி வித்தனர். மேலும், புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணை  செயலாளர்கள் உமாசங்கர், ஆறுமுகம், ரேணுகாதேவி, பொருளாளர் தங்கமணி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தர்ம செல்வன், முன்னாள் எம்.பி., சேகர், ஆகியோ ருக்கும் வாழ்த்து தெரிவித்தனர். கோவை கோவை மாநகர் மாவட்ட திமுக செயலா ளராக நா.கார்த்திக், திமுக தலைமை கழகத் தால் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து பேர றிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை  அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து அவர் பேசுகையில், மதவாத சக் திகள் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி தமிழகத்தில் வளர நினைக்கின்றது. அது  ஒருகாலும் முடியாது. வரும் பாராளுமன்ற  தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியடையும்,  என்றார். இந்நிகழ்வில், மாநகர மேயர் கல் பனா ஆனந்தகுமார், மற்றும் புதிய நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.

;