கோவை, நவ. 6- மின் கட்டணத்தை குறைக்க அர சிடம் வலியுறுத்தப்படும் என தொழில்துறையினருடனான சந்திப்பு நிகழ்ச்சியில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உறுதியளித்தார். தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு, கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு மற்றும் மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் தொழில் துறையினர் மக் கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பு நிகழ்ச்சி கோவை ஆவாரம்பா ளையம் பகுதியிலுள்ள கோ இண் டியா அரங்கில் நடைபெற்றது. கூட்டமைப்பு ஒருங்கிணைப்பா ளர் ஜேம்ஸ் தலைமையில் நடை பெற்ற இந்த நிகழ்ச்சியில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், தொழில் அமைப் பினர் மற்றும் கோவை மாவட்டத் ்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பி னர்கள் பங்கேற்று தொழில் அமைப் பினரின் கோரிக்கை மனுவை பெற்று கொண்டனர். முன்னதாக, தொழில்துறையி னரிடம் மனுவை பெற்றுக்கொண்ட மார்க்சிஸ்ட் கட்சியின், பி.ஆர் நடரா ஜன் எம்.பி., ஒன்றிய மோடி அரசின் கார்ப்ரேட் ஆதரவு கொள்கையின் விளைவாக சிறுகுறு மற்றும் நடுத் தர தொழில்கள் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளது.
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, மூலப்பொருட்களின் பதுக்கல் என்பதன் தொடர்ச்சி யாக மோடி அரசின் மின்சார கொள் கையும் தொழில் நிறுவனத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மாநில அரசும் இந்த நெருக்கடியை சந்தித்து வருகிறது. இருப்பினும் பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் சிறு குறு தொழில்கள், நெருக்கடியின்றி தொழில்களை நடத்த வேண் டும் என்பதே மார்க்சிஸ்ட் கட்சி யின் நிலைப்பாடு. தமிழக அரசு அதிகரிக்கப்பட்ட மின் கட்ட ணத்தை திரும்ப பெற வலியுறுத்து வோம். மேலும், தொழில் துறை யினர் முன்வைத்துள்ள கோரிக்கை களை ஒன்றிய மற்றும் மாநில அர சின் கவனத்திற்கு கொண்டு செல் வோம் என்றார். முன்னதாக, கலந்தாலோசனை கூட்டத்திற்கு பிறகு பேசிய தமிழ் நாடு தொழில்துறை மின் நுகர் வோர் கூட்டமைப்பின் ஒருங்கி ணைப்பாளர் ஜேம்ஸ் பேசுகையில், பீக் ஹவர் கட்டணத்தை தொழிற் ்சாலைகளுக்கு முழுமையாக திரும்ப பெற வேண்டும். தொழிற் சாலை கூரைகளில் சோலார் தகடுகள் அமைக்க கட்டணத்தை முழுமையாக ரத்து செய்திட வேண் ்டும். மின்சார வாரியத்தால் அவசர கோணத்தில் தயாரிக்கப்பட்ட தொழில்துறையின் மீது திணிக் கப்பட்ட கட்டணங்களை மறு சீர மைப்பு செய்ய வேண்டும் என தெரிவித்தார். மேலும் தங்களது கோரிக்கைகளை அரசு பரிசீலிக் காத பட்சத்தில் டிசம்பர் 4 ஆம் தேதியன்று 10 லட்சம் தொழில் முனைவோர் கைகோர்த்து நின்று தமிழகம் தழுவிய மனித சங்கிலி போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தார்.