districts

img

இரண்டு மாதங்களாக குடிநீர் விநியோகம் பாதிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

தாராபுரம், டிச. 29- தாராபுரம் அருகே உள்ள தாளக்கரை கிரா மத்திற்கு இரண்டு மாதங்களாக குடிநீர் விநி யோகம் சீரான முறையில் வழங்கப்படா ததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறிய லில் ஈடுபட்டனர். தாராபுரத்தை அடுத்த சங்கராண்டாம்பா ளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட தாளக்கரை கிராமத்தில் 2 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக் கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத் திற்கு என இரண்டு குடிநீர் மேல்நிலைத் தொட்டி அமைக்கப்பட்டு குழாய்கள் மூலம்  பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலை யில், தாளக்கரைக்கு வரும் அமராவதி  குடிநீர் முக்கிய குழாயில் அடிக்கடி விரிசல் ஏற் பட்டு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் கடந்த இரண்டு மாதங்களாக கிரா மத்திற்குக் குடிநீர் விநியோகம் சீரான முறை யில் மேற்கொள்ளப்படவில்லை. இதுகு றித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தக வல் தெரிவிக்கப்பட்டும், எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், தங்கள் பகுதிக்கு முறையான குடிநீர் வினியோ கம் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் தாளக்கரை சங்கரண்டாம் பாளையத்தில் சாலை மறியல் ஈடுபட்டனர்.  இதுகுறித்து தகவலறிந்த குண்டடம் வட் டார வளர்ச்சி அலுவலர் ஹரிஹரன், மண்டல  துணை வட்டாட்சியர் வளர்மதி, வடுகபாளை யம் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் மற்றும்  ஊதியூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய் வாளர்கள் சண்முக சுந்தரம், பூமிபாலன் ஆகி யோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக் களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப் போது அடிக்கடி குழாய் விரிசல் ஏற்படும்  பகுதியில் பதிக்கப்பட்டுள்ள குழாய்களை அகற்றி மாற்றுப்பாதை வழியாகவும், தாளக் கரைக்கு செல்லும் குடிநீர் குழாய்களை பஞ் சாயத்துச் சார்பில் சீர்செய்து  உடனடியாக  பொதுமக்களுக்குக் குடிநீர் விநியோகம்  செய்யப்படும் என அதிகாரிகள் உறுதிய ளித்தனர். இதையேற்று பொதுமக்கள் 2 மணி நேர போராட்டத்தைக் கைவிட்டனர்.