கோவை, ஜன.10- ஆழியார் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவை மாவட்டம், பொள் ளாச்சி மற்றும் வால்பாறைக்கு இடையே அமைந்துள்ளது ஆழி யாறு அணை. இந்த அணையின் மூலம் புதிய மற்றும் பழைய ஆயக் கட்டு பாசனத்திற்கு ஆண்டுதோறும் தண்ணீர் திறந்துவிடப்படும். இந்த நிலையில், பழைய ஆயக்கட்டு பாச னத்தின் கீழ் உள்ள பயிர்களை காப் பாற்ற, ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த வகையில், கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிஏபி தொகுப்பு அணைகளின் நீர்ப்பி டிப்பு பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. 120 கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 82.35 அடியாக உயர்ந்துள் ளது. இந்நிலையில், விவசாயிகளின் தொடர் கோரிக்கையை ஏற்ற தமிழ் நாடு அரசு ஆழியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. ஜன. 10 ஆம் தேதி முதல் மார்ச் 10 ஆம் தேதி வரை 60 நாட்களுக்கு மொத்தம் 350 மில்லியன் கன அடிக்கு மிகாமல், தேவைக்கேற்ப நீரை திறக்க வேண்டும் எனவும் அரசு தெரிவித் துள்ளது. இந்த பாசன நீரால், பள்ளி விளங்கால், காரப்பட்டி, அரியாபுரம், பெரியணை ,வடக்கலூர் ஆகிய பழைய ஆயக்கட்டு பாசன வாய்க் கால் மூலம் 6400 ஏக்கர் நிலங்கள் பயனடையும். இதனால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள் ளனர். முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சி யில், ஆழியாறு வடிகால் உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் சிங்கார வேலு, காடம்பாறை அணை மின் உற்பத்தி நிலைய நிர்வாக பொறியா ளர் ராம்பிரகாஷ் பொதுப்பணித் துறை அதிகாரிகள், விவசாயிகள் என பலர் பங்கேற்றனர். அணையி லிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரை விவசாயிகள் அதிகாரி கள் மலர் தூவி வரவேற்றனர்.