திருப்பூர், டிச.25- பல்லடம் ஒன்றியம் வ.அய்யம்பாளை யத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ஏ.ஜி.துரைசாமி யின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நெகிழ்ச்சியுடன் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன் னாள் பல்லடம் ஒன்றியக்குழு உறுப்பின ரும், முன்னாள் சாமளாபுரம் பேரூராட்சி உறுப்பினருமான ஏ.ஜி.துரைசாமி கடந்த ஆண்டு வ.அய்யம்பாளையத்தில் காலமா னார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சனியன்று அய்யம் பாளையத்தில் அவரது உருவப்படம் மலர் களால் அலங்கரித்து வைக்கப்பட்டு நினை வஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் பல்லடம் ஒன்றியச் செயலாளர் ஆர்.பரமசிவம், ஒன் றியக்குழு உறுப்பினர்கள் வை.பழனிசாமி, காந்தி, ஏ.ஈ.சுப்பிரமணியம், துரைசாமி மற் றும் ஆர்.சி.பழனிசாமி, சி.குருசாமி, விநா யகா பழனிசாமி, சோமசுந்தரம், ஏ.ஜி.துரை சாமியின் மகன்கள் சந்துரு, அருண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். மேலும், அதிமுக நிர்வாகி அங்கமுத்து, திமுக சார்பில் பழனிசாமி உட் பட அரசியல் கட்சியினரும், அய்யம்பாளை யம் பகுதி பெண்கள் பெருந்திரளானோர் உள்பட பொதுமக்களும் கலந்து கொண்டு கண்ணீர் மல்க மலரஞ்சலி செலுத்தியது நெகிழ்ச்சி ஏற்படுத்துவதாக இருந்தது.