குடிநீர் தட்டுபாட்டை நீக்க விதொச வலியுறுத்தல்
கோவை, ஏப்.27- கோடையில் குடிநீர் தட்டுபாட்டை நீக்க மாவட்ட ஆட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கத்தின் மாவட்டக் குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விதொச கோவை மாவட்டக்குழு கூட்டம், சங்கத்தின் தலைவர் பி.ரவிச்சந்திரன் தலைமையில், பொள்ளாச்சி சிஐடியு அலுவலகத்தில் வெள்ளியன்று நடைபெற்றது. இதில், சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வி.அமிர் தலிங்கம், மாவட்டப் பொறுப்பாளர் சி.துரைசாமி, மாவட் டச் செயலாளர் ஏ.துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, நூறு நாள் வேலை உறுதி திட்டத்தில் ஏற்படும் தொய்வு நீக்கிட, மாவட்ட அளவில் பிரச்சனைகள் ஒட்டிய இயக்கங்கள் நடத்துவது, தோழமை அமைப்பான தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்துடன் இணைந்து போராட் டங்களை முன்னெடுப்பது, கோடையில் குடிநீர் தட்டுபாட்டை நீக்க மாவட்ட ஆட்சி நிர்வாகம், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இருவேறு இடங்களில் தங்க நகை திருட்டு
இருவேறு இடங்களில் தங்க நகை திருட்டு தருமபுரி, ஏப்.27- தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள கம்பைநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (44). இவர் அங்குள்ள சுப்பி ரமணியர் கோயில் தெருவில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் மதிய உணவிற்காக தனது வீட்டிற்கு செல்லும்போது அவரது மகன் கடையை கவனித்துக் கொள்வது வழக்கம். இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி வழக்கம் போல் மதிய உணவிற்காக கணேசன் தனது வீட்டிற்கு சென்ற சமயத்தில், அவரது மகன் கடையில் இருந்தார். உணவருந்தி விட்டு மீண்டும் கடைக்கு திரும்பினார். அப்போது நகைகளை சரிபார்த்த போது 15 பவுன் மாயமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் கணேசன் சாப்பிடுவதற்காக சென்றிருந்தபோது, அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் கடைக்கு வந்து சென்றது தெரியவந்தது. அவர்கள் கடையில் இருந்த கணேசன் மகனிடம் 200க்கு சில்லறை கேட்டுள்ளனர். சில்ல றையை எடுத்து எண்ணிக் கொண்டிருந்தபோது பணப்பெட்டி யில் இருந்த 49 மோதிரங்கள் 4 தோடு உள்ளிட்ட 15 பவுன் (சுமார் 125 கிராம்)தங்க நகையை நைசாக திருடிச் சென்ற னர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அடையா ளம் தெரியாத இருவரை தேடி வருகின்றனர். இதேபோல், அரூர் அருகே உள்ள ஆலாபுரம் கள்ளி யூரை சேர்ந்தவர் குமார் (56). இன்ஜினியராக பணியாற்றி வரும் இவர், கடந்த 22ஆம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் மதுரையில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். மறுநாள் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், உள்ளே சென்று பார்கையில், பீரோவில் வைத்தி ருந்த 24 பவுன் தங்க நகைகள் மாயமாகி இருந்தது. இதுகு றித்து, ஏ.பள்ளிப்பட்டி காவல்நிலையத்தில் குமார் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீ சார், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபரை தேடி வரு கின்றனர்.
கோவை: பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்
கோவை, ஏப்.27- நடப்பாண்டில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியின் கட்டுப் பாட்டின் கீழ் 81 ஆரம்பப் பள்ளிகள், 38 நடுநிலைப்பள்ளிகள், 17 மேல்நிலைப் பள்ளிகள், ஒரு சிறப்பு பள்ளி ஆகியவை இயங்கி வருகிறது. ஒவ்வொரு கல்வி யாண்டிலும், 30 ஆயிரத்திற்கும் மேற் பட்ட மாணவ, மாணவிகள் சேர்ந்து படித்து வருகின்றனர். 850க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த மாநகராட்சி பள்ளிகளில் வரும் கல்வியாண்டிற் கான மாணவர் சேர்க்கை துவங்கி உள் ளது. 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு, 6 முதல் 9ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு தற்போது சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் வகையில், பள் ளிகளில் அரசின் திட்டங்கள் குறித்த விளக்கப் படங்கள் வைக்கப்பட்டுள் ளன. மேலும், பள்ளிக்கு வரும் பெற்றோ ரிடம் ஆசிரியர்கள் அரசு சார்பில் மாண வர்களுக்கு வழங்கப்படும் திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்து மாணவர் சேர்க்கையை நடத்தி வருகின்றனர். அதன்படி, மாநகராட்சி துவக்கப் பள்ளி கள், நடுநிலைப்பள்ளிகள் மற்றும் உயர் நிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை யானது தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், அரசு செயல்ப டுத்தி வரும் பல்வேறு திட்டங்களின் கார ணமாக மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்க பெற்றோரும் ஆர்வம் காட்டி வருவதா கவும், நடப்பாண்டில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
வாலிபர் பலி
வாலிபர் பலி மே.பாளையம், ஏப்.27- பவானி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம், காந் திபுரம் 3வது வீதியைச் சேர்ந் தவர் பண்ணாரி. இவரது மகன் சஞ்சய்(23). பெயிண் டிங் வேலை பார்த்து வருகி றார். இவர் வெள்ளியன்று மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள உப்பு பள்ளம் பம்பர மடுவு அருகே பவானி ஆற்றில் தனது நண்பர்கள் விஜய்(21), சிவா(22), அக்ஷய்(23) ஆகி யோருடன் குளிக்கச் சென் றுள்ளார். அப்போது,சஞ்சய் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கியதாக கூறப்படு கிறது. உடன் சென்ற நண்பர்கள் அவரை தண்ணீருக்குள் இறங்கி தேடியதோடு, அக் கம் பக்கத்தினரையும் உத விக்கு அழைத்துள்ளனர். தொடர்ந்து அப்பகுதி மக்கள் உதவியுடன் சுமார் அரை மணி நேரம் போராடி ஆற்றில் மூழ்கி பலியான சஞ்சயை சடலமாக மீட்டனர். இச்சம்ப வம் குறித்து அறிந்த மேட்டுப் பாளையம் போலீசார் விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
சாதி மறுப்பு திருமணம் செய்த இளம் பெண் மரணம்
சாதி மறுப்பு திருமணம் செய்த இளம் பெண் மரணம் ஈரோடு, ஏப். 27- ஈரோடு அருகே சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்ப வம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு அருகே உள்ள கணபதி பாளையம் கிராமத் தைச் சேர்ந்த சித்ராவின் மகள் மீனா(21). பட்டியல் இனத் தைச் சேர்ந்த இவர் மன்னாதம்பாளையத்தைச் சேர்ந்த யுவ ராஜ் என்ற இளைஞரை காதலித்து வந்தார். ஆதிக்கசா தியை சேர்ந்த யுவராஜ் தனது பெற்றோருடன் சென்று பெண் கேட்டுள்ளார். மீனா தரப்பில் சம்மதம் தெரிவித்த னர். திருமணத்திற்கு யுவராஜ் தரப்பு 5 பவுன் நகை கேட்டதாக கூறப்படுகிறது. 3 பவுன் போட்டு திருமணம் செய்து கொடுத்த னர். திருமணத்திற்குப் பிறகு யுவராஜ் தன் தாய்க்கு உடல் நிலை சரியில்லை என ரூ.50 ஆயிரம் பணம் கேட்டுள்ளனர். சித்ரா பணம் தர இயலவில்லை என கூறியதாக கூறப்படு கிறது. இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி மீனா தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. திருமண மான இரண்டு மாதத்தில் இளம் பெண் உயிரிழந்த நிலையில், மறு நாள் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார். இது குறித்து ஈரோடு தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தகவல் அறிந்த உறவினர்கள், “தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு மீனா கோழை அல்ல” என்றும் “புகுந்த வீட்டில் என்ன பிரச்சனை நடந்தது என்று தங்களுக்கு தெரி யாது” என்றும் கதறி அழுதனர். “ கணவன் யுவராஜையும் அவ னது குடும்பத்தினரையும் கைது செய்து விசாரிக்க வேண்டு மென” கோரிக்கை விடுத்தனர். ஆனால் அங்கு வந்த காவல் துறை துணை கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன் மீனா வின் உறவினர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாக வும், அவர்களை தாக்க முற்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலு வலகத்தை முற்றுகையிட்டனர். தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி மொழி கூறியதை யடுத்து உறவினர்கள் மீராவின் சட லத்தை பெற்றுச் சென்றனர். இந்நிலையில், மீனா இறப்பில் சந்தேகம் இருப்பதால், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என மீனாவின் தாயார் சித்ரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுத் தார். மீனா வின் சகோதரி, உறவினர்கள் மற்றும் ததீஒமு மாவட்டச் செயலாளர் எம்.அண்ணாதுரை, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் வி.ஏ.விஸ்வநாதன் ஆகியோர் உடனி ருந்தனர்.
சட்டவிரோதமாக மது விற்ற 3 பேர் கைது
சட்டவிரோதமாக மது விற்ற 3 பேர் கைது நாமக்கல், ஏப்.27- நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு அனுமதி யின்றி அதிக விலைக்கு அரசு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக குமாரபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் குமாரபாளையம் காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் போலீசார் ரோந்து மேற்கொண்டனர். அப்பொழுது எம்ஜிஆர் நகர் கேஸ் பங்க் அருகே மது விற்றுக் கொண்டிருந்த சிவகங்கை மாவட் டம் காளையார் கோவில் பகுதியை சேர்ந்த ஆரோக்கிய சாமி(51), கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் சேர்ந்த சக்திவேல்(23) ஆகிய இருவரை கைது செய்து அவரிடமி ருந்து 130 மதுபாட்டுகளை பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து ராஜம் திரையரங்கம் அருகே மது விற்றுக் கொண்டி ருந்த உள்ளூரை சேர்ந்த செந்தில்குமார்(46) என்ற நபரை கைது செய்து அவரிடம் 177 மது பாட்டில்களை பறிமுதல் செய் தனர்.