பொள்ளாச்சி, ஜன.27- கோவை மாவட்டம், வால்பாறையில் 1956 ஆம் ஆண்டு தேயிலை தோட்டத்தில் பணிபுரிகின்ற தொழிலாளர்களின் வாழ்வாதர உரிமைக்காக போராடி உயிர்நீத்த அப்பாவு, குரு சாமி, ஞானமுத்து, பழனி ஆகியோரின் தியாகத்தை போற் றும் வகையில் புதனன்று வால்பாறை தியாகிகளின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. தேயிலை தோட்டத் தொழிலா ளர்கள் மற்றும் அலுவலர்கள் சங்க மாவட்ட பொதுச்செயலா ளர் பி.பரமசிவம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிஐடியு தாலுகா தலைவர் முனீஷ்வரி, நேதாஜி, மாரிமுத்து, முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.