ஹஜ் புனித யாத்திரை செல்லும் 354 பயணிகளுக்குத் தடுப்பூசி செலுத்தும் முகாம் மாவட்ட சுகாதத்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டத்தில் ஹஜ் புனித யாத்திரை செல்லும் பயணிகளுக்குத் தமிழக அரசின் சார்பில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தில் தடுப்பூசி, சொட்டு, மருந்து, சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தப் பரிசோதனைகள் முகாம் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த சிறப்பு முகாமானது மே 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஹஜ் யாத்திரை செல்லும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மருத்துவர்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இதில் முதல் நாள் 120 நபர்களுக்கு, இரண்டாம் நாள் நாளை 119 நபர்களுக்கு, மூன்றாம் நாள் 115 நபர்களுக்கும் என மொத்தம் 354 பயணிகளுக்குத் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. இதில் 65 வயதுக்கு மேற்பட்ட 49 நபர்களுக்கு மட்டும் Seasonal Influenza Vaccine பிரத்தியேகமாகச் செலுத்தப்படுகிறது.