districts

img

தியாகிகளுக்கு விவசாயிகள் சங்கம் சார்பில் அஞ்சலி

திருப்பூர், ஜூன் 19- மின் கட்டண உயர்வுக்கு எதிராக போராடி  உயர்நீத்த தியாகிகளுக்கு, அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் திங்களன்று மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. 1970 ஆம் ஆண்டில் ஒரு பைசா மின்கட்ட ணத்திற்கு எதிராக போராடி உயிர் நீத்த பெரு மாநல்லூர் விவசாய தியாகிகள் மாரப்பக வுண்டர், ராமசாமி கவுண்டர், ஆயிகவுண்டர்  ஆகியோரின் 53 ஆவது நினைவு தின நிகழ்ச்சி  திங்களன்று நடைபெற்றது. பெருமாநல்லூ ரில் உள்ள நினைவு ஸ்தூபியில், தமிழ்நாடு  விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மலர் வளை யம் வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.  இந்நிகழ்விற்கு சங்கத்தின் வடக்கு  ஒன்றிய செயலாளர் எஸ்.அப்புசாமி தலைமை வகித்தார். இதில், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சாமி.நடராஜன், மாநில துணைத்தலை வரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரு மான பி.டில்லிபாபு, மாவட்ட செயலாளர் ஆர். குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன், விவசாயிகள் சங்க மாவட்ட துணைச்செய லாளர் வை.பழனிசாமி உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். முடி வில் வடக்கு ஒன்றிய தலைவர் கே.ரங்கசாமி  நன்றி கூறினார்.