districts

img

கட்டிடக்கலையின் அழகியல் பிரம்மாண்டம்!

உலக சுற்றுலா பயணி களை கவர்ந்த உத கைக்கு பல்வேறு  சிறப்புகள் இருக்கிறது. அந்த வகையில், ராஜ்பவன், உதகை நீதிமன்றம் என கட்டிடக்கலைக்கு முக்கியத்துவம் பெற்ற பல கட்டி டங்கள் உள்ளன. இவைகள் அனைத்தும் பிரிட்டிசார் ஆட்சி யில் கட்டப்பட்டுள்ளது. இந்த பிரம் மாண்டங்களை பாதுகாக்க வேண் டும் என்கிற குரல் தொடர்ந்து எழுந்து வருகிறது.  இந்நிலையில், நீலகிரி மாவட் டம், உதகமண்டலத்தின் மையப் பகுதியில் அமைந்திருந்த மாவட்ட மற்றும் குற்றவியல் அமர்வு நீதி மன்றம், மகளிர் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் உட்பட அனைத்து நீதி மன்றங்களும் கடந்த ஜனவரி 27  ஆம் தேதியன்று முதல் உதக மண்டலத்தின் புறநகர் பகுதியில் உள்ள காக்கா தோப்பு என்ற இடத் தில் புதிய நீதிமன்ற வளாகத்தில் செயல்பட துவங்கியுள்ளது.  புதிய நீதிமன்றம் மிக பிரமாண்ட மாக கட்டப்பட்டுள்ளது. பழைய நீதி மன்றம் உதகை நகரில் மையப் பகுதியில் ஆட்சியர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ளது. பழைய நீதிமன்றம் ஆங்கிலேய கட்டிடக் கலையில் மிகவும் அழகான வடி வில் புராதான சின்னமாக விளங்கி வருகின்றது. இந்த பழைமை வாய்ந்த கட்டிடத்தை இடிக்கக் கூடாது என்றும், புராதான கலாச் சாரம் மிகுந்த பழைய நீதிமன்ற கட்டி டத்தை அப்படியே பராமரிக்க வேண் டும் என்பது பொதுமக்களின் விருப்பமாகும். புதிய நீதிமன்ற கட்டிடத்தில் வழக்குகள் நடைபெற துவங்கியுள் ளது. இவ்வேலையில் பழைய நீதி மன்றம் காலியாக உள்ளது பெரும் வளாகத்தை தன்னகத்தே அடக்கிய இந்த பழைய நீதிமன்றம். உதக மண்டலம் நகர மையப்பகுதியில் புராதான சின்னமாக கட்டிடக்கலை யின் மைல் கல்லாக திகழ்ந்து வரு கின்றது. மிகவும் பழமை வாய்ந்த கட்டிடமாகவும் அமைந்துள்ளது. 1857 ஆம் ஆண்டுக்கும் முன்பு கட்டப்பட்ட புராதான சின்னமாகிய இக்கட்டிடம், நிலை அரசப் புரா தான சின்னமாக அங்கீகரத்து வரு கின்றது.

இந்த வளாகத்தில் பழைமை வாய்ந்த ஆங்கிலேய கட் டிடக்கலையில் அமைக்கப்பட்டது மட்டுமல்லாது; அதன் அறைகலன் களும் மிகவும் பிரசித்தி பெற்றவை யாக உள்ளது குறிப்பாக மாவட்ட நீதிபதியின் இருக்கை உயர்நீதிமன் றத்திலும் இல்லாத அளவு வடிவ மைக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்களின் இருக்கை உயர்நீதி மன்றத்திலும் இல்லாத அளவு வடிவமைக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்களின் இருக்கைகள் வழக்காடிகளின் பார்வையால் இருக் கைகள் வேறு எங்கும் இல்லாத அள வுக்கு மிகவும் கண்கவர் வடிவில் உறுதியான, அழகான வடிவமைப் பில் உள்ளது. இத்தகைய பழமை யான கட்டிடத்தை தொடர்ந்து பரா மரிக்க வேண்டும் என்று அன்பால யத்தின் அனைத்துலக அன்பர்  அமைப்பின் சார்பில் தமிழ்நாடு முதல் வருக்கு மனு அனுப்பியுள்ளனர்.  அம்மனுவில், உதகையில், கடி கார கோபுரம் முதல் கட்டிட கலை கள் வரை பிரசித்திப்பெற்றதாகும். இதுபோன்று உதகை அரசு கலைக் கல்லூரியில் மட்டும் ஒன்றுள்ளது. எனவே இவையும் பாதுகாக்கப்பட வேண்டியவை. எனவே அருங்காட் சியகம் மற்றும் நூலகம் ஒன்றை அமைத்து, இந்த வளாகத்தை பாது காத்து, உலகிலிருந்து வரும் அனைத்து சுற்றுலாவினரும் கண்டு களிக்கும் வண்ணம், இந்த சிறப்பு  வாய்ந்த பாரம்பரிய சிறப்பு மிக்க புரா தான சின்னமாக இக்கட்டிடத்தை பாதுகாத்து பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். -சேக் அமீன்