உடுமலை, நவ.26- தமிழகத்தில் மோட்டார் வாகன சட் டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, உடு மலை மத்திய பேருந்து நிலையத்தின் முன்பு சிஐடியு மோட்டார் மற்றும் ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார் பில் வெள்ளிக்கிழமை கண்டண ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. உடுமலை மோட்டார் சங்க செயலா ளர் சுதாசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மோட்டார் வாகன சட்டத் திருத்தம் என்ற பெயரில் பொது மக்களுக்கும் வாகன உரிமையாருக்கும் அநியாய அபராதம் விதிப்பதை திரும்ப பெற வேண்டும். மோட்டார் வாகன சட்டம் திரும்ப பெரும் வரையில் காவல்துறை மற்றும் மோட் டார் வாகன ஆய்வாளர்கள் அபராதக் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது. உடு மலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை இணைக்கும் பழுதடைந்த சாலைகளை சரி செய்ய வேண்டும். பெட்ரோல் மற் றும் டீசல் விலை உயர்வை கட்டுபடுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் அன்பு கண்டன உரையாற் றினார். ஆட்டோ சங்க மாவட்டதுணை செயலாளர் அப்துல் மஜீத், உடுமலை ஆட்டோ சங்க செயலாளர் ஜஹாங்கீர், கருப்புசாமி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.