districts

img

உடைந்த பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்

தருமபுரி, ஜன.12- தருமபுரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உடைந்து காணப் படும் சிறுபாலத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி நகராட்சி, 14 ஆவது வார்டுக்குட்பட்ட எம்ஜிஆர் நகர், 2 ஆவது தெருவில், 250க்கும் மேற்பட்ட குடியிருப்பு கள் உள்ளன. இங்கு ஏழை கூலி தொழிலாளர்கள் அதிகம் வசிக்கின்றனர். இத்தெருவில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. சாலையின் குறுக்கே கழிவுநீர் கால்வாய் செல்ல சிறு பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம் உடைந்து 3 ஆண்டுகளுக்கு மேலாகிறது. உடைந்த சிறுபாலத்தின் வழியாக நான்கு சக்கர வாகனங் கள் செல்ல முடிவதில்லை. நோயாளிகளை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வருவதில்லை. இதனால் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். உடைந்த சிறுபாலத்தை சரிசெய்ய வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் தருமபுரி நகராட்சியி டம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.