districts

கல்விக்கான பட்ஜெட் ஜிடிபியில் 6 சதவிகிதம் உயர்த்த வலியுறுத்தல்

திருப்பூர், செப். 29 – கல்விக்கான பட்ஜெட் தொகையை மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில்  (ஜிடிபி) 6 சதவிகிதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கல்விக்கொள்கை ஆலோ சனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங் கிணைக்கும் மாநில கல்விக் கொள்கை வடி வமைப்பிற்கான கருத்து கேட்புக் கூட்டம் திருப்பூர் மாவட்ட அளவில் கே.ஆர்.சி. சிட்டி  சென்டரில் அண்மையில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு அறிவியல் இயக்க மாவட்டத்  தலைவர் நஷீரா தலைமை ஏற்றார். பெருமா நல்லூர் கிளை இணைச் செயலாளர் கார்த்தி கேயன் வரவேற்றார். மாநில செயலாளர் தியா கராஜன் முன்னிலையில், மாவட்டச் செயலா ளர் கௌரிசங்கர் நோக்க உரை வழங்கி னார். இக்கூட்டத்தில் தமுஎகச மாநிலக்குழு உறுப்பினர் கோவை சதாசிவம், முதுநிலை  பட்டதாரி ஆசிரியர்கள் கழக மாவட்டத் தலை வர் செல்வக்குமார், அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்றச் சங்க  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாபு, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலா ளர் பிரபு செபாஸ்டியன், பட்டதாரி ஆசிரியர்  கூட்டமைப்பு மாவட்டச் செயலாளர் சந்திர சேகர், ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலா ளர் செல்வம், உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குநர்கள் சங்க மாவட்டச் செயலாளர் பாலு, மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட  செயலாளர் ராஜேஷ், இந்திய மாணவர் சங்க  மாவட்ட செயலாளர் சம்சீர் அகமது, ஜன நாயக வாலிபர் சங்கம் மாவட்ட தலைவர் அருள் ஆகியோர் கலந்து கொண்டு கல்விக்  கொள்கை குறித்து கருத்துக்களை வழங்கி னர்.

இக்கூட்டத்தில் கல்விக்கான பட்ஜெட் தொகையை மொத்த உள்நாட்டு உற்பத் தியில் 6 சதவிகிதம் அளவிற்கு உயர்த்த வேண் டும், பள்ளிக்கு ஒரு நிரந்தர தூய்மை பணியா ளர் நியமிப்பது, அரசு உதவிபெறும் பள்ளிக ளிலும் ஆசிரியர் நியமனம் செய்ய வேண் டும்,  கல்வி உரிமைச் சட்டப்படி 25 சதவிகித மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு அரசே அனுப்புவதை கைவிட வேண்டும். புத் தகச் சுமையை குறைக்க வழிவகை செய்ய  வேண்டும். தொடக்க வகுப்புகளில் படங்களு டன் கூடிய கதைப் புத்தகங்கள் வழங்க வேண்டும். பாடத்திட்டம் அந்தந்த வட்டார  அடிப்படையில் உருவாக்க வேண்டும். பொதுத் தேர்வு மூலம் மாணவர்களுக்கு உரு வாகும் அழுத்தத்தை குறைக்க வேண்டும். கலை மற்றும் விளையாட்டையும் மதிப்பீட் டிற்குள் கொண்டு வர வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் விளையாட்டு மைதானத்தை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட ஆலோ சனைகள் முன்வைக்கப்பட்டன. நிறைவாக  அறிவியல் இயக்கத்தின் முன்னாள் செயலா ளர் தினேஷ் நன்றி கூறினார். அறிவியல் இயக் கத்தின் கல்வி உபகுழு ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் ஒருங்கிணைத்தார்.