districts

img

சுமைப்பணித் தொழிலாளர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வலியுறுத்தல்

திருப்பூர், ஜூன் 24- திருப்பூர் மாவட்டத்தில் வீடு இல் லாத சுமைப்பணி தொழிலாளர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங் கத்தின் 47 ஆவது மகா சபைக் கூட்டத் தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட சிஐடியு சுமைப்ப ணித் தொழிலாளர் சங்கத்தின் 47 ஆவது  மகா சபைக் கூட்டம் மாவட்டத் தலைவர்  ராஜகோபால் தலைமையில் ஞாயிற் றுக்கிழமை நடைபெற்றது. இதில், சுமைப் பணி தொழிலாளர்களுக்கு சமூக  மற்றும் சட்டப் பாதுகாப்பு வழங்க வேண் டும். சாலையோரங்களில் ஓய்வு பந்தல் அமைக்க அனுமதிக்க வேண்டும். பொதுக் கழிப்பிட வசதி செய்து கொடுக்க வேண்டும். நலவாரிய பணப்  பயன்களை அதிகரிக்க வேண்டும். வீடு  இல்லாத சுமைப் பணித் தொழிலாளர்க ளுக்கு அரசு வீடு கட்டிக் கொடுக்க வேண் டும். 55 கிலோவுக்கு மேல் மூட்டை எடையை அனுமதிக்கக்கூடாது. கூட் ஷெட், மாா்க்கெட், டாஸ்மாக் கிடங்குக ளில் அடிப்படை வசதிகளை ஏற்ப டுத்திக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதில், சிஐடியு மாவட் டச் செயலாளர் கே.ரங்கராஜ், விசைத் தறி சங்க மாநிலத் தலைவர் முத்துச்சாமி  ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்டச் செயலாளர் கே.உன்னிகி ருஷ்ணன், பொருளாளர் ஜெயராம், சிஐ டியு சாலையோர வியாபாரிகள் சங்கச் செயலாளர் பாலன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகரச் செய லாளர் டி.ஜெயபால் உள்ளிட்டோர்  கலந்து கொண்டு பேசினார். இதைதொடர்ந்து, திருப்பூர் மாவட்ட  சுமைப்பணி தொழிலாளர் சங்கத் தலைவ ராக எம்.ராஜகோபால், செயலாளராக பி.பாலன், பொருளாளராக டி.ஜெய பால், துணைத் தலைவர்களாக மார்க் கெட் தங்கவேல், மணி என்கிற நடராஜ்,  கிஷோர் குமார், துணை செயலாளர்க ளாக மார்க்கெட் ஜெயராம் அப்பாசாமி,  ரவி உள்ளிட்டு 30 நிர்வாகக் குழு உறுப்பி னர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.