districts

img

சாய ஆலைகளுக்கு ஆதரவாக அரசு அதிகாரிகள்?

சேலம், நவ.24- அரசு அனுமதியின்றி தொடர்ந்து செயல்படும் சாயப்பட்டறைகளுக்கு ஆதரவாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய  அதிகாரிகள் செயல்படுவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. சேலம் மாவட்டம், எடப்பாடியில்  சுமார் 30க்கும் மேற்பட்ட சாயப்பட்ட றைகள் தொடர்ந்து அரசு அனுமதி யின்றி செயல்பட்டு வருகிறது. எடப் பாடி நகரப் பகுதியில் சில மாதங் களுக்கு முன்பு அகற்றப்பட்ட சாயப் பட்டறைகள் மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருவதை மாசு கட்டுப் பாட்டு வாரிய அதிகாரிகள் கண்டு கொள்ளாமல், சாயப்பட்டறைகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக அப் பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டி யுள்ளனர். இதுகுறித்து பலமுறை பொதுமக்கள் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க மறுக்கும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், இதுபோன்ற சம்பவங்கள் நடக்கவே  இல்லை என்பது போலவே பொதுமக்க ளிடம் பேசி வருகின்றனர். இதற் கிடையே எடப்பாடி பகுதியில் பெய்த தொடர் மழையால் சாயக்கழிவுகள் குடி யிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ளது. மேலும், சாயப்பட்டறைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சரபங்க ஆற்றில் கலப்பதால் சுற்றுச்சூழலும், நிலத்தடி நீரும் பாதிக்கும் நிலை ஏற்பட் டுள்ளது. இதுதொடர்பாக மாசு கட்டுப்பாட்டு  வாரிய அதிகாரிகள், காவல் துறை யினர் நடவடிக்கை எடுத்து இருந்தால், இப்பகுதியில் நாளுக்கு நாள் அதிக ரித்து வரும் சாயக்கழிவுகளை தடுத்து  நிறுத்த முடியும். இதனால், நிலத்தடி நீர் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் நீரில் மாசுத்தன்மை குறையும். இது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய  அதிகாரிகளோ அல்லது மாவட்ட நிர்வா கமோ நடவடிக்கை எடுப்பார்களா? என்ற கேள்வியுடன் எடப்பாடி பகுதி பொதுமக்கள் எதிர்ப்பார்ப்போடு உள் ளனர்.