கோவை, ஆக.12- தொழிலாளர் விரோத சட்டங் களை திரும்ப பெற வேண்டும். மக்கள் விரோத மூன்று குற்றவி யல் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி கோவையில் மத்திய தொழிற்சங்கத்தினர் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் திங்க ளன்று ஈடுபட்டனர். தொழிலாளர் விரோத சட்டங் களை திரும்ப பெற வேண்டும். ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தேசிய அளவில் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.26 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும். புதிதாக கொண்டு வந்துள்ள மூன்று குற்றவி யல் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். விவசாய விளைபொ ருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கம் சார்பில் போராட் டங்கள் நடைபெற்று வருகிறது. இதன்ஒருபகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள மத்திய தந்தி அலு வலகம் முன்பு திங்களன்று மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் மூன்று குற்றவியல் சட்ட நகல்களை எரிக் கும் போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன் னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஏஐடியூசி-யின் மாநில துணைத்த லைவருமான எம்.ஆறுமுகம் தலைமை வகித்தார். இதில், சிஐடியு மாவட்ட தலைவர் கே.மனோகரன், பொருளாளர் ஆர்.வேலுசாமி, ஏஐ டியுசி மாவட்ட கவுன்சில் பொதுச் செயலாளர் சி.தங்கவேல், எல்பிஎப் பா.மணி, வி.ஆனந்த், ஐஎன்டியூசி பி.சண்முகம், எம்எல்எப் தியா கராசன், ஏஐசிசிடியூ ஆர்.பாலசுப்ர மணியன், எஸ்டிடியு எஸ்.சையது, எல்டியுசி மு.ஜெயப்பிரகாஷ் நாரா யணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட மத்திய தொழிற்சங்கத்தி னர், தேசத்தின் இறையான்மையை பாதுகாக்க வேண்டும், மோடி அரசு மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பி தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர். பின்னர், ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டு சட்ட நகல்களை எரிக்க முயன்றபோது போலீசார் தடுத்து நிறுத்தி, சட்ட நகல்களை பறித்து சென்றனர். சேலம் ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத மூன்று குற்றவியல் சட் டத்தை கண்டித்து, சேலத்தில் மத் திய தொழிற்சங்கங்கள் சார்பில் அஸ்தம்பட்டி அரசு விரைவு போக் குவரத்து பணிமனை முன்பு வாகன பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் எஸ்.கே.தியாக ராஜன், தலைமையில் நடைபெற்ற பிரச்சாரத்தில், சிஐடியு ஆட்டோ சங்க செயலாளர் உதயகுமார், எல்எல்எப் சரஸ்ராம், ரவி மற்றும் எல்பிஎப், ஏஐடியுசி, எச்எம்எஸ் உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்க ளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.