districts

img

வேலையிழந்த பனியன் தொழிலாளி இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொரி வியாபாரி

 அவிநாசி,பிப்.12 - அவிநாசி அருகே அரசப் பம்பாளையத்தில் வசித்து வரும் முன்னாள் பனியன் தொழிலாளி, வேலை இழந்த நிலையில், பொரி வியாபாரியாக மாறி, தனது  வியாபாரத்தோடு, போக்கு வரத்து விழிப்புணர்வு ஏற் படுத்தி வருகிறார்.  அவிநாசி ஒன்றியம், கரு வலூர் ஊராட்சிக்குட்பட்ட  அரசப்பம்பாளையத்தில் வசிப்பவர் சந்திர சேகர். இவர் கருவலூர் ஊராட்சி முழுவதும்  மசால் பொரி விற்பனை செய்து வருகிறார்.  தனது இருசக்கர வாகனத்தில் ஒலிபெ ருக்கி அமைத்து, பொரி வியாபாரம் செய்வ தோடு, “குடிபோதையில் வாகனம் ஓட்டா தீர்கள், வாகனம் ஓட்டிக் கொண்டு செல் போன் பேசாதீர், சாலையை கடக்கும் போது  இருபுறமும் பார்க்கவும், தலைக்கவசம் அணி யுங்கள்” என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.  இதுகுறித்து, டைம் பாஸ் காரப்பொரி உரிமையாளரான சந்திரசேகர் கூறிய தாவது, நான் பனியன் கம்பெனியில் சுமார்  20 வருடங்கள் அயரன் மற்றும் பேக்கிங் வேலை செய்து வந்தேன். பல மாதங்களாக வேலையில்லை.

இதனால் வீட்டிலேயே முடங்கி கிடந்தேன். எனக்கு திடீரென்று ஒரு  யோசனை தோன்றியது, மசால் பொரி வியா பாரம் செய்யலாம் என முடிவு செய்தேன். இத்தொழிலை செய்யும்போது பலரும், என்ன சந்திரசேகர் பொரி வியாபாரம் செய் கிறாய் என கேட்டார்கள். ஆம், கம்பெனி யில் வேலை இல்லாததால் பொரி வியாபாரி  செய்கிறேன் என கூறினேன். எல்லாரும் கேட்கிறார்கள் என்று பொரி வியாபாரத்தை இடையில் கைவிட்டேன். இதில் பலர் என்னிடம், செய்யும் தொழிலில்  கேவலம் வேண்டாம், நீங்கள் விற்கும் பொரி  சுவையாக இருக்கிறது என கூறினர். எனவே  மீண்டும் பொரி விற்பனை செய்கிறேன். இதில் தினசரி கொள்முதல் போக, மூன்று  நேரம் உணவு உட்கொள்ளும் அளவிற்கு வருவாய் கிடைக்கிறது. மேலும் வெங்காயம்,  கேரட், கொத்துமல்லி, மிளகாய் தூள், தேங் காய் எண்ணெய் தினசரி மளிகை கடைக் காரர்களுக்கு ஒரு வியாபாரமும், அதேபோல  பொரி, நிலக்கடலை, பொட்டுக்கடலை இதன்  மூலம் ஒரு வியாபாரம் நடைபெறுகிறது.  இதேபோன்று, பனியன் கம்பெனியில் உடன் பணியாற்றிய பலர் இப்போது முள்ளு வெட்டும் வேலைக்கு செல்கிறார்கள். பனியன் வேலை கிடைக்கும் நம்பிக்கை எனக்கு இல்லை. அதன் காரணமாகவே இந்த தொழிலுக்கு வந்தேன் என்றார்.