districts

img

யானை தந்தங்கள் விற்க முயற்சி

கோவை, செப்.27- கோவை, தடாகம் அருகே உள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் யானை தந்தங்களை விற்க முயற்சி செய்த பெண் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.  கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில், ஐந்து பேர்  டிராவல் பேக் ஒன்றில் இரண்டு தந்தங்களுடன் பிடிபட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், யானை தந்தங் கள் இரண்டும் வெங்கடபுரம் பகுதியைச் சேர்ந்த செந்தில்  வேலன் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது.  இதையடுத்து அவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.