districts

img

மயங்கிக்கிடந்த யானைக்கு சிகிச்சை

உதகை, ஏப்.5- கடும் வறட்சி காரணமாக உடல் நலம் குன்றி மயங்கி கிடந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளித்த வனத்து றையிரையே காட்டு யானை விரட்டியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற் பட்டது. நீலகிரி மாவட்டம், முது மலை புலிகள் காப்பகத் திற்கு உட்பட்ட வனப்பகுதி யில் கடந்த நான்கு மாதங்க ளுக்கும் மேலாக பகல் நேரங் களில் கடும் வெயில் நிலவி வருகிறது. இதனால் வனப் பகுதிகளில் தண்ணீர் பற் றாக்குறை ஏற்பட்டு செடி, கொடிகள் முற்றிலும் கருகி, மரங்கள் காய்ந்தும் கடும் வறட்சி ஏற்பட்டு வருகிறது. இதனால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி குடியிருப்பு கள் மற்றும் விளை நிலங்க ளின் அருகே உலா வருவது  தொடர் கதையாக உள்ளது. இந்நிலையில் மசினகுடி பகுதியில் தனியாருக்கு சொந் தமான இடத்தில் ஆறு வயது ஆண் காட்டு யானை ஒன்று உடல் நலம் குன்றி மயங்கி  விழுந்தபடி காணப்பட்டுள் ளது. இது தொடர்பாக வனத் துறையினருக்கு அளித்த தக வலின் அடிப்படையில் சம் பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர் வன கால்நடை உதவி மருத்துவர்கள் முன் னிலையில், சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சிகிச்சை அளித்தனர். அப் போது, உடல்நலம் குன்றி சோர்வுடன் காணப்பட்ட காட்டு யானை சற்று உடல் நலம் தேறிய நிலையில் சிகிச்சை அளித்த வனத் துறையினரையே யானை துரத்திய பின் அடர்ந்த வனப் பகுதிக்குள் சென்றது. இத னால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.