districts

புற்று நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு சிகிச்சை

ஈரோடு, அக். 5- ஈரோட்டில் அரசு மருத்துவ குழுவி னர், தனியார் மருத்துவமனைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங் கள் மூலம் நேரடியாக முகாம் அமைத்து அரசால் இலவசமாக புற்றுநோய் பரி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றது என மாவட்ட ஆட்சியர் தெரி வித்து உள்ளார். இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சி யர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது, ஈரோடு மாவட்டத்தில் 73 அரசு ஆரம்ப சுகா தார நிலையங்கள், 18 நகர்ப்புற நல வாழ்வு மையங்கள், 98 கிராமப்புற துணை சுகாதார நலவாழ்வு மையங்கள், 8 அரசு மருத்துவமனைகள் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி உட்பட 198 சமு தாய அளவிலான புற்றுநோய் கண்ட றியும் பரிசோதனை மையங்களில் இல வசமாக புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இம்மு காம்களுக்கு மகளிர் சுகாதார தன்னார்வ லர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் இல்லம் தேடி சென்று அனை வரையும் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 4 லட்சத்து 23ஆயிரத்து 478 நபர்களுக்கு வாய் புற்றுநோய் பரி சோதனை, 2 லட்சத்து 21 ஆயிரத்து 765 நபர்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோ தனை, 2 லட்சத்து 21 ஆயிரத்து 816 நபர்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் பரி சோதனைக்கு அழைப்பு அனுப்பட்டது. இதில், 2 லட்சத்து 8 ஆயிரத்து 699 நபர்களுக்கு வாய் புற்றுநோய் பரிசோ தனை செய்யப்பட்டது. இதில் 22 பேருக்கு வாய் புற்றுநோய் உறுதி செய் யப்பட்டது. 86 ஆயிரத்து 63 பேருக்கு மார்பக புற்றுநோய்க்காக பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 22 பேருக்கு மார் பக புற்றுநோய் உறுதி செய்யப்பட்டது. கர்ப்பப்பை புற்றுநோய் அறிகுறியுள்ள தாக 62 ஆயிரத்து 880 நபர்களுக்கு பரி சோதனை செய்யப்பட்டது. இதில் 9 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட் டுள்ளது. இதனை தடுக்க 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் மருத்துவ முன்பரிசோதனைகள் மற்றும் மன அழுத்தம் இல்லா வாழ்வியல் முறை, சரியான உணவுப் பழக்கவழக்கம், யோகா போன்றவை கடைபிடிப்பது அவசியமாகும். உணவுப் பழக்க வழக்கங்களில் அதிகமாக காய்கறிகள், பழங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.  அனைத்து பொது மக்களும், இல்லம் தேடி வரும் மருத்துவப் பணி யாளர்களின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதலை பெற்று தங்கள் பகு திக்கு அருகில் நடைபெறும் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை திட்ட மையங்களை அணுகி, புற்றுநோய்க்கான பரிசோத னைகளை மேற்கொண்டு தங்கள் இன்னுயிரை புற்றுநோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.