ஈரோடு, அக். 26- அடையாள சான்று வைத்திருப் போருக்கு பயண சலுகை வழங்க வேண்டும் என அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில் மாற்றுத்திற னாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ண னுண்ணி மாற்றுத்திறனாளிகளிட மிருந்து மருத்துவ வசதி, உதவித் தொகை, பேட்டரியால் இயங்கும் இருசக்கர வாகனம், பட்டா, குடிநீர் வசதி, அடையாள அட்டை, வங்கி கடனுதவி உள்ளிட்டவை வேண்டி 116 கோரிக்கை மனுக்களை பெற் றார். இம்முகாமில் கலந்து கொண்ட தமிழ்நாடு அனைத்துவகை மாற் றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் உரிமைகளுக்கான சங்கத் தின் மாவட்ட செயலாளர் ஏ.சகா தேவன் அளித்துள்ள மனுவில் தெரி வித்திருப்பதாவது, குறைதீர் முகாம் களில் மருத்துவர்கள் இறுதிவரை கலந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும். இம்முகாம்களில் சான்று கள் வழங்குவதோடு, உதவி உப கரணங்களுக்கான விண்ணப்ப பதிவும் நடக்க வேண்டும். உதவித் தொகையினை ஏடிஎம் மூலம் எடுத்துக்கொள்ள உத்தரவு இருந் தும் வங்கிகள் மறுப்பதன் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும். அடை யாள சான்று வைத்திருப்போருக்கு ரயில் பயண சலுகை சான்று வழங் கலாம் என்ற உத்தரவை அமல் படுத்த வேண்டும். மாற்றுத்திறனா ளிகள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும்போது புதிய அடையாள அட்டை பெற வேண்டுமென வற் புறுத்துகின்றனர். இவ்வாறு அலைக் கழிப்பதைத் தவிர்த்து முகவரி மாற்றம் மட்டுமே செய்யவேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் 4 மணி நேர வேலை என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இருந்தும் மறுக்கப் படுகிறது. நகர்ப்புற வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக் கும் பணி வழங்க வேண்டும்.
தொழில் மற்றும் வேலைவாய்ப்பு துறையில் அரசாணைப்படி 5 விழுக் காடு என்பதை ஈரோடு மாவட்டத் தில் முழுமையாக அமலாவதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும். தாளவாடி மலை பகுதி யில் கூடுதல் பேருந்துகள் இயக்கப் பட வேண்டும் என தெரிவிக்கப்பட் டுள்ளது. முன்னதாக, 12 மாற்றுத்திறனா ளிகளுக்கு தலா ரூ.9,050 வீதம் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 600 மதிப்பி லான சக்கர மிதிவண்டிகளையும், இருவருக்கு தலா ரூ.4,500 வீதம் ரூ.9 ஆயிரம் மதிப்பிலான பார்வை யற்றோருக்கான பிரெலி கைக்கடி காரத்தினையும், இருவருக்கு தலா ரூ.13 ஆயிரம் வீதம் ரூ.26ஆயிரம் மதிப்பிலான கைபேசியினையும், ஒருவருக்கு ரூ.6,300 மதிப்பிலான எழுத்தை பெரிதாக்கி காட்டும் கருவியினையும் வழங்கினார். தொடர்ந்து, தேசிய அளவிலான அடையாள அட்டை, தடையற்ற சூழல், சமவாய்ப்பு கொள்கை உள் ளிட்டவை தொடர்பாக மாவட்ட அள விலான குழு கூட்டம் நடைபெற் றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட வரு வாய் அலுவலர் ச.சந்தோஷினி சந் திரா, தனித்துணை ஆட்சியர் கும ரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கோதைசெல்வி உட் பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.