திருப்பூர், மார்ச் 22- சென்னை மறியலுக்கு புறப்பட்ட மாற் றுத்திறனாளிகளை ரயில் நிலைய வளாகத் திற்குள் நுழைய விடாமல் காவல் துறை யினர் தடுத்து நிறுத்தியதால் திருப்பூர் ரயில் நிலைய நுழைவாயில் பகுதியை முற்றுகை யிட்டு மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊனமுற்றோர் மாதாந்திர உதவித் தொகையை ரூ.3 ஆயிரமாகவும், கடும் ஊன முற்றோருக்கு ரூ.5 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்க வலியுறுத்தி சென்னையில் திட்ட மிடப்பட்ட குடியேறும் போராட்டத்திற்கு திருப்பூரில் இருந்து புறப்பட்டவர்களை ரயில் நிலைய வளாகத்திற்குள் நுழைய விடாமல் காவல் துறையினர் தடுத்து நிறுத் தினர். இதையடுத்து பயணம் செய்ய வந்தி ருந்த சுமார் நூறு மாற்றுத்திறனாளிகள் ரயில் நிலைய நுழைவாயில் பகுதியை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தினர். மேலும், மாவட்டத் தலைவர் டி.ஜெய பால், மாவட்டச் செயலாளர் பா.ராஜேஷ், மாவட்டப் பொருளாளர் ஆர்.காளியப்பன் உள்ளிட்டோர் ரயில் நிலையத்திற்குள் நுழைய முற்பட்டபோது காவல் துறையி னர் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து காவல் துறையினருடன் அவர்கள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். ரயில் பயணத்திற்கு முன்பதிவு பயணச் சீட்டு வைத்திருந்தும் ரயில் நிலையத்திற்குள் நுழைய விடாமல் தடுப்பது மனித உரிமை மீறும் செயல் ஆகும். இதை ஏற்க மாட்டோம் என்று கூறி காவல் துறையின் நடவடிக்கையைக் கண் டித்து முழக்கம் எழுப்பினர். இவர்கள் முன்பதிவு செய்திருந்த சேரன் விரைவு ரயில் இரவு 11.45 மணியளவில் ரயில் நிலையத்திற்குள் வந்தது. அப்போது உள்ளே செல்ல முயன்ற மாற்றுத்திற னாளிகளை காவல் துறையினர் உள்ளே விடாமல் இரும்பு தடுப்புகளை குறுக்கே நிறுத்தியும், கயிறு கட்டியும் வலுக்கட்டாய மாக அவர்களைத் தடுத்து நிறுத்தினர். காவல் துணை ஆணையர் அரவிந்த் தலை மையில் காவலர்கள் இந்த நடவடிக்கை யில் ஈடுபட்டனர். சேரன் விரைவு ரயில் புறப்பட்டுச் சென்ற பிறகும் அங்கிருந்த கலைய மறுத்த மாற்றுத் திறனாளிகளை காவல் துறையினர் கைது செய்ய ஆயத்தமானார்கள். பிற்பாடு அவர்களை அங்கிருந்து வெளியேற்றி வேறு பகுதியில் வாகனத்தின் மூலம் கொண்டு இறக்கிவிட்டனர். காவல் துறையின் இந்த மனித உரிமை மீறிய, சட்டத்தை மீறிய அரா ஜக நடவடிக்கையைக் கண்டித்து மாற்றுத் திறனாளிகள் தொடர்ந்து முழக்கம் எழுப்பி னர். அத்துடன் இங்கு வந்திருந்த சுமார் 20 பேர் அவசரமாக பேருந்து நிலையத் திற்கு புறப்பட்டுச் சென்று அங்கிருந்து சென்னைக்குச் சென்றனர். செவ்வாயன்று சென்னையில் நடைபெற்ற மாநிலந்தழு விய போராட்டத்தில் இவர்கள் வெற்றிகர மாக கலந்து கொண்டனர்.