districts

img

விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க வலியுறுத்தி டிராக்டர் பேரணி

தருமபுரி, ஜன.27- விவசாயத்தையும், விவசாயிகளையும் பாது காக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய விவ சாயிகள் முன்னணி சார்பில் வெள்ளியன்று டிராக்டர் மற்றும் இருசக்கர வாகன பேரணி நடை பெற்றது. தில்லியில் நடைபெற்ற விவசாயிகளின் வீரஞ் செறிந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, மோடி அரசு கொடுத்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்கும் சட்டத்தை நாடாளுமன்றத் தில் இயற்ற வேண்டும். விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனை தள்ளுபடி செய்து, விவசாயி களை பாதுகாக்க வேண்டும். மின்சாரத்தை தனியார்மயப்படுத்தி ஏழை, எளிய விவசாயி கள் பயன்படுத்தும் இலவச மின்சாரத்தை பறிக் கக்கூடாது. மின்சார திருத்த சட்டத்தை முழுமை யாக திரும்பப்பெற வேண்டும். லக்கிம்பூர் கேரியில் விவசாயிகளை படுகொலை செய்த முக்கிய குற்றவாளிகளை கைது செய்து சிறை யில் அடைக்க வேண்டும். கார்ப்பரேட் ஆதரவு பொருளாதார கொள்கையை கைவிட்டு, பொதுத் துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குடிய ரசு தினமாக வெள்ளியன்று ஐக்கிய விவசாயி கள் முன்னணி சார்பில் டிராக்டர் மற்றும் இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள குறிஞ்சி நகரில் துவங்கிய டிராக்டர் பேரணி பேருந்து நிலையம், முக்கிய கடைவீதி வழி யாக அரூர் ரவுண்டானா வந்தடைந்தது. இதைய டுத்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயி கள் சங்க செயலாளர் ஏ.நேரு தலைமை வகித் தார். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் பி.டில்லிபாபு, மாவட்ட துணைத் தலைவர் கே.என்.மல்லையன், வட்ட துணைத் தலைவர் எஸ்.கே.கோவிந்தன், பால் உற்பத்தி யாளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தீர்த்த கிரி, கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் சிவலிங் கம், பொருளாளர் பொண்ணுசாமி, கரும்பு வெட் டும் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் இ.கே.முருகன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பி.குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று பென்னாகரம் அருகே உள்ள நாகமரை நான்கு சாலை சந்திப்பு பகுதியிலி ருந்து துவங்கிய டிராக்டர் மற்றும் இருசக்கர வாகன பேரணிக்கு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எம் குமார் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.மதன் பேர ணியை துவக்கி வைத்தார். இப்பேரணி போடூர் நான்கு சாலை சந்திப்பு, காவல் நிலையம், வட் டாட்சியர் அலுவலகம், பழைய பேருந்து நிலை யம், முள்ளுவாடி, தற்காலிக பேருந்து நிலை யம் வழியாக அம்பேத்கர் சிலை பகுதியில் நிறை வடைந்தது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய விவசாயிகள் முன் னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சோலை.அர் ஜுனன், விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜீவானந்தம், அன்பு, பென்னா கரம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் சர்க்கரை வேல், பென்னாகரம் ஒன்றியத் தலைவர் கருவூ ரான், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலச் செயலாளர் முத்துக்குமார், இணைச்செயலா ளர் கோபிநாத், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி  மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், விவசாயி கள் விடுதலை முன்னணி அமைப்பின் ராம லிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி கைகாட்டி பகுதியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில், நடைபெற்ற டிராக்டர் பேரணி முக் கிய சாலைகள் வழியாக சென்று புதிய பேருந்து நிலையம் அருகே நிறைவடைந்தது. இதில் விவசாயிகள் சங்க தலைவர்கள் உட்பட திரளா னோர் கலந்து கொண்டனர். இதேபோன்று குமார பாளையம் அடுத்துள்ள பல்லக்காபாளையம் பகுதியில் நடைபெற்ற டிராக்டர் பேரணியில் விவ சாயிகள் சங்க தலைவர்கள் கோவிந்தசாமி, முரு கேசன், ரேவதி, சின்னதாய், செல்வம், பால் உற் பத்தியாளர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் உட் பட திரளான விவசாயிகள், பெண் தொழிலா ளர்கள் பங்கேற்றனர். 

சேலம்

மத்திய தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங் களின் கூட்டுக்குழு சார்பில், சேலம் காந்தி சாலை பகுதியிலிருந்து டிராக்டர், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகன பேரணி துவங்கியது. இதில் சிஐடியு சாலை போக்குவரத்து சங்க மாநில துணைத்தலைவர் எஸ்.கே.தியாகராஜன், சிஐ டியு மாவட்டப் செயலாளர் உதயகுமார், பொரு ளாளர் வி.இளங்கோ, எல்பிஎப் செயலாளர் பொன்னி பழனியப்பன், ஏஐடியுசி முருகன், ஏஐ சிசிடியு வேல்முருகன், யூபியூசி மோகன், தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத்தலை வர் டி.ரவீந்திரன், மாவட்டச் செயலாளர் ஏ.ராம மூர்த்தி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் மேவை. சண்முகராஜா, சிபிஐ மாவட்டச் செயலாளர் ஏ. மோகன் உட்பட திரளானோர் கலந்து கொண்ட னர்.