districts

img

ஆழியார், கவியருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

பொள்ளாச்சி, ஜன. 16- பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார்  பூங்கா கவியருவி பகுதிக்கு மூன்று  நாட்களில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  சுற்றுலாப் பணிகள் வருகை தந்துள்ளனர்.  தமிழகத்தில் மிகவும் பிரபலமான  சுற்றுலாத் தலங்களில் பொள்ளாச்சி அருகே  உள்ள ஆழியார் பூங்கா மற்றும் அணை  ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி  வனச்சரகத்துக்கு உட்பட்ட கவியருவி மிகவும் பிரபலமானதாகும்.  நாள்தோறும், சென்னை உள்ளிட்ட பிற  மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங் களான கேரளா கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட  மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற் றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப் பாக அரசு விடுமுறை நாட்களில் ஏராளமான  சுற்றுலாப் பயணிகள் ஆழியாறு அணை,  பூங்கா, கவியருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு  வந்து வால்பாறை சென்று வருகின்றனர்.  பொங்கல் விடுமுறையை அடுத்து, கடந்த மூன்று  நாட்களாக ஆழியாறு அணை, பூங்கா, கவி யருவிக்கு 25,000 மேற்பட்ட சுற்றுலாப் பயணி கள் வந்துள்ளனர். ஆனைமலை புலிகள் காப் பகம் பொள்ளாச்சி வனச்சரகம் பாதுகாக் கப்பட்ட பகுதி என்பதால் வனத்துறை அதி காரிகள் உத்தரவின் பெயரில் வனத்துறை யினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள்  சுழற்சி முறையில் பணியாற்று வருகின்ற னர். தமிழக அரசு அறிவித்த பிளாஸ்டிக் ஒழிக் கும் விதமாக மஞ்சள் பை திட்டம் இப்பகுதி யில் செயல்பட்டு வருகிறது இதனால் சுற் றுலாப் பயணிகள் வரும் வாகனங்களில் மது  பாட்டில்கள், போதை வஸ்துகள் உள்ளனவா  என்பது குறித்து சோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறது. தற்போது பனி அதிக அளவில் பெய்து வருவதால் சாலை ஓரம் உள்ள செடிகள் காய்ந்த நிலை யில் உள்ளன. ஆதலால், தீப்பெட்டி, சிசர் லைட் உள்ளிட்டவை கொண்டு செல்ல வனத் துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும்  மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிக்கு  காட்டு யானைகள் வராமல் இருக்கவும் வனத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வரு கின்றனர். மேலும் வால்பாறை செல்லும் சுற்றுலாப் பயணிகள் சாலை ஓரங்களில் வாக னங்களை நிறுத்த வேண்டாம் விலங்கு களை கண்டால் புகைப்படம் எடுப்பது அரு கில் செல்வது தெரிய வந்தால் வனத்துறை கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச் சரித்துள்ளனர்.