தருமபுரி, அக்.13- பாலக்கோடு வட்டத்தில் தக்காளி ஜூஸ் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வட்டக்குழு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட் டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு - காரிமங்கலம் வட்ட 14 ஆவது மாநாடு, வெள்ளிச்சந்தை எஸ்.எஸ்.டி திருமண மஹா லில் தோழர் சீத்தாராம் யெச்சூரி நினைவரங் கத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. மாவட் டக்குழு உறுப்பினர் பி.ஜெயராமன், வட்டக் குழு உறுப்பினர்கள் பி.கோவிந்தசாமி, சி. கலாவதி, ஆகியோர் தலைமை வகித்தனர். வட்டக்குழு உறுப்பினர் என்.வரதராஜன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். வட்டக் குழு உறுப்பினர் ஏ.சேகர் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மாரி முத்து துவக்கவுரையாற்றினார். வட்டச் செய லாளர் டி.எஸ்.ராமச்சந்திரன் அறிக்கையை முன்வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எஸ்.கிரைஸாமேரி, ஆர்.மல்லிகா ஆகியோர் வாழ்த்தி பேசினர். இம்மாநாட்டில், பாலக்கோடு வட்டத்தில் தக்காளி ஜூஸ் தொழிற்சாலை ஏற்படுத்த வேண்டும். வெள் ளிச்சந்தையில் பயணிகள் நிழற்கூடம் மற்றும் இலவச கழிப்பிட வசதி ஏற்படுத்தித்தர வேண்டும். பாலக்கோடு வட் டத்திலுள்ள பிக்கனஅள்ளி, ஜக்கசமுத்திரம், ஜிட்டான்ட அள்ளி, அண்ணாமலை அள்ளி, மகேந்திரமங்கலம் ஆகிய ஊராட்சிகளை பாலக் கோடு ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும். நீண்ட காலமாக கோவில் நிலம், வனத்தை ஒட்டிய நிலங்களில் குடியிருப்போ ருக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். பாலக்கோடு அரசு மருத்துவம னையில் உயிர்க்காக்கும் சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் சிடி, எம்ஆர்ஐ, அல்ட்ரா ஸ்கேன் இயந்திரங்கள் அமைக்க வேண்டும். மாரண்டஹள்ளி பகுதி ஊராட்சிகளை ஒன்றி ணைத்து தனி ஊராட்சி ஒன்றியமாக அறி விக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து கட்சியின் பாலக் கோடு - காரிமங்கலம் வட்டச் செயலாளராக பி.காரல் மார்க்ஸ் மற்றும் 11 வட்டக்குழு உறுப் பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முடி வில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சி.நாகராஜன் நிறைவுரையாற்றினார்.