districts

அடிக்கடி இழப்பை சந்திக்கும் தக்காளி விவசாயிகள்: குளிர்பதன கிடங்கு அமைக்க வலியுறுத்தல்

திருப்பூர், மார்ச் 5-  உரிய விலை கிடைக்காததால் தக்காளி களை சாலை ஓரத்தில் கொட்டிவிட்டு செல் லும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள் ளார்கள். எனவே விவசாய விளைபொருட்க ளுக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், குடி மங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காய்கறி கள் சாகுபடியில் அதிக அளவில் நடைபெற்று  வருகிறது. குறிப்பாகத் தக்காளி, சின்ன வெங் காயம் உள்ளிட்டவற்றை விவசாயிகள் அதிக  அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நி லையில் அடிக்கடி விலை சரிவு ஏற்படுவதால்  தங்கள் வாழ்வாதாரம் பாதிப்பதாக விவசாயி கள் வேதனை அடைந்துள்ளனர். தற்போது தக்காளிக்கு உரிய விலை கிடைக்காத நிலை யில் ஆங்காங்கே சாலையில் கொட்டும் அவ லம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் சிலர் கூறுகை யில், மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிக ளில் சாகுபடி செய்யப்படும் தக்காளி உடு மலை தினசரி சந்தைக்கு கொண்டு வரப்ப டுகிறது. அங்கிருந்து வியாபாரிகள் மூலம் தமி ழகத்தின் பிற மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. கேரள  மாநிலத்தின் சில பகுதிகளுக்கும் இங்கி ருந்து தக்காளி அனுப்பி வைக்கப்படுகி றது. வரத்து மற்றும் தேவையை பொறுத்து  தினசரி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் விலை சரிவை சந்திப்பதும் விவசாயிகளுக்கு  இழப்பு ஏற்படுவது வழக்கமான ஒன்றாக மாறி  வருகிறது. 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி  தக்காளி ரூ.80 முதல் ரூ.150 வரையே விற்ப னையாகிறது. இதனால் போக்குவரத்து, சுங் கம், கூலி எனச் செலவு செய்து சந்தைக்கு கொண்டு வந்து இழப்புடன் திரும்புவதை விட  சாலை ஓரத்தில் வீசி எறிவதே சிறந்தது என்று  விவசாயிகள் முடிவு செய்து விடுகின்றனர். பல விவசாயிகள் விரக்தியின் உச்சத்தில்,  டிராக்டர்கள் மூலம் தக்காளி செடிகளை  அழிக்க தொடங்கியுள்ளனர்.  இந்த நிலையை மாற்றுவதற்கு அரசும்,  வேளான்மை துறையும்  உரிய நடவடிக்கை   எடுக்க வேண்டும். மேலும் இப்பகுதி விவசாயி களின் நீண்ட நாள் கோரிக்கையான தக்காளி உள்ளிட்ட விளை பொருட்களுக்கான குளிர்ப தன கிடங்கு அமைக்க வேண்டும். தக்காளி  கூழ் தாயாரிப்பு தொழிற்சாலை அமைக்க வேண்டும். உற்பத்தி செலவு பல மடங்கு  அதிகரித்துள்ள நிலையில் ஒரு கிலோ தக் காளி உற்பத்திக்கு ஆகும் செலவை விட  கூடுதல் விலையில் விற்கப்பட வேண்டும்.  தக்காளி கொள்முதல் விலையை அரசு நிர்ண யம் செய்ய வேண்டும்.இதுபோன்ற நடவ டிக்கை எடுக்காத நிலையில் விவசாயி கள் விரக்தியில் உள்ளனர். மடத்துக்குளம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தக்காளியை கொட்டி உள்ள நிகழ்வு வெளியில் தெரிந்த ஒரு சம்பவம் மட்டுமே. எனவே விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். உடுமலையில் தக்காளி சந்தை உருவாக்கி, இருப்பு வைக்க வும், உரிய விலை கிடைக்கும் பகுதிக ளுக்கு அனுப்பி வைக்கவும், மதிப்புக் கூட்டுப் பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.