districts

img

20 ஆவது புத்தகத் திருவிழாவிற்கு ஆயத்தமாகும் திருப்பூர்

திருப்பூர், ஜன. 20- தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம், பின்னல் புக்  டிரஸ்ட் இணைந்து நடத்தும் 20 ஆவது  திருப்பூர் புத்தகத் திருவிழா பணி கள் மும்முரமாக நடைபெற்று வரு கிறது. திருப்பூர் காங்கேயம் சாலை வேலன் ஹோட்டல் மைதானத்தில் தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 20 ஆவது திருப் பூர் புத்தகத் திருவிழா வரும் ஜன. 25 முதல் பிப்.4 வரை நடைபெற வுள்ளது. இந்த புத்தக கண்காட்சி வளாகத்தில் 152 அரங்கங்கள் அமைக்கப்பட உள்ளது. இதற்கான  பணிகள் தற்போது மும்முரமாக  நடைபெற்று வருகிறது. இதில், முன்னணி புத்தக வெளி யீட்டாளர்கள், விற்பனையாளர்கள் தங்கள் புதிய வெளியீடுகள் உள் ளிட்ட புத்தகங்களை காட்சிப்படுத்த உள்ளனர். இத்துடன் அரசுத் துறை சார்ந்த மாசு கட்டுப்பாட்டு வாரியம், மகளிர் திட்டம், வேலைவாய்ப்புத் துறை, காவல் துறை உள்ளிட்ட பல் வேறு துறை சார்ந்த அரங்குகளும் அமைக்கப்பட்ட உள்ளது. இத்திரு விழா நடைபெறும் பிரம்மாண்டமான வேலன் ஹோட்டல் மைதானத்தில் அனைத்து வசதிகளும் தாராளமான  இட வசதியுடன் செய்யப்பட்ட உள்ள தாகவும், புத்தக திருவிழாவுக்கு வரு வோர் வசதிக்காக நான்கு சக்கர, இரு சக்கர வாகன நிறுத்துமிடம், சிற் றுண்டி அரங்குகள், கழிப்பிட வசதி  என பார்வையாளர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட உள்ளதாக புத்தக கண்காட்சி ஏற் பாட்டாளர்கள் தெரிவித்தனர்.  இலட்சினை வெளியிடு: முன்னதாக திருப்பூர் மாநகராட்சி  நொய்யல் பண்பாட்டு அமைப்பு  நடத்திய இரண்டாம் ஆண்டு பொங் கல் திருவிழா நிகழ்ச்சியில் 20 ஆவது புத்தகத் திருவிழாவின் இலட்சினை திருப்பூர் மாநகராட்சியின் மேயர் ந.தினேஷ்குமார், முதல் மண்டல தலைவர் வே.உமா மகேஸ்வரி, இரண்டாவது மண்டலத் தலைவர் தம்பி ஆர்.கோவிந்தராஜ், திருப்பூர்  மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் கள், பின்னல் புக் டிரஸ்ட் நிர்வாகிகள்,  நொய்யல் பண்பாட்டு அமைப்பின் நிர்வாகிகள் இணைந்து வெளியிட் டனர்.