திருப்பூரில் பிப்.14 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருப்பூர் மாவட்ட தொழில் பாதுகாப்பு தொழிலாளர் வாழ்வுரிமை மாநாடு நடத்தப்பட உள்ளது. இம்மாநாட்டிற்கான இலட்சினையினை வியாழனன்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி. சுகுமாறன் வெளியிட, மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.ராஜகோபால் பெற்றுக் கொண்டார். இதில் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி. சாவித்திரி, கே.ரங்கராஜ், ஆர்.குமார் ஆகியோர் உடனிருந்தனர்.