உடுமலை, ஜூலை 31- மேற்கு தொடர்ச்சி மலை பகுதிக ளில் தொடர் மழை பெய்தும் திருமூர்த்தி அணை நிரம்பவில்லை. காண்டூர் கால் வாய் பராமரிப்புப் பணிகளை பொதுப்ப ணித்துறை அதிகாரிகள், திட்டக்குழுவி னர் முறையாக திட்டமிட்டு துவக்கி முடித் திருந்தால், தற்போது அணையில் தண் ணீர் நிரப்பியிருக்க முடியும் என்று விவ சாயிகள் கூறுகின்றனர். கடந்த சில வாரங்களாக தென் மேற்கு பருவமழை பெய்து வருவதால், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருக்கும் அனைத்து அணைகளும் நிரம்பி உபரி நீர் ஆற்றில் சென்று வரும் நிலையில், திருப்பூர் மாவட்டம் உடு மலை அருகே உள்ள திருமூர்த்தி அணை மட்டும் நிரம்பவில்லை. மொத்த கொள்ளளவான 60 அடியில் இன்று வரை 28 அடி மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. இந்த அணையின் மூலம் பிஏபி பாசன திட்டத்தில், திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள 3.77 லட்சம் ஏக் கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின் றன. மேலும், உடுமலை நகராட்சி, மடத் துக்குளம், குடிமங்கலம் ஒன்றிய பகுதி களுக்கு குடிநீர் திட்டங்கள் மூலம் தண் ணீர் விநியோகிக்கப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள திட்ட தொகுப்பு அணைகளில் இருந்து, 48.39 கி.மீ., தூரம் அடர்ந்த வனப்பகுதிக ளில் மலையை குடைந்து அமைக்கப் பட்ட காண்டூர் கால்வாய் மூலம், திரு மூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு சேமிக்கப்படுகிறது. பிரதான கால்வாய் மூலம் நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு, பாசன நிலங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அணைக்கு பிஏபி தொகுப்பு அணையில் இருந்து தண்ணீர் வரும் காண்டூர் கால்வாய் பராமரிப்பு பணிகள் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு துவங்கியது. பல்வேறு சிரமங்க ளுக்கு இடையே மேற்கொள்ளும் இப் பணி இன்னும் முடிவடையததால் அணைக்கு தண்ணீர் வராமல் உள் ளது. இது குறித்து விவசாயிகள் சிலர் கூறு கையில், தென்மேற்கு பருவமழை முன் கூட்டியே துவங்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தும், காண்டூர் கால்வாய் பராமரிப்புப் பணிகளை பொதுப்பணித் துறை அதிகாரிகள், திட்டக்குழு உறுப்பினர்களும் போதிய முன்திட்டமிடல் இன்றி துவங்கினர். திரு மூர்த்தி அணையில் இருந்து கடந்த ஆண்டு முடிவிலும், இந்த ஆண்டு துவக் கத்தில் நான்கு மற்றும் முதலாம் மண்டல பாசனத்திற்கு நான்கு சுற்றுகள் தண் ணீர் தரப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இரண்டு மண்டல விவசாயி களை வஞ்சிக்கும் வகையில் வெறும் இரண்டு சுற்றுகள் மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த இரண்டு சுற்று தண்ணீரும் கீழ்மடை விவசாயிகளுக்கு சென்று சேரவில்லை. ஏற்கனவே இரண்டு மண்டல விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மாதம் அணையில் நீர் இல்லாத கார ணத்தால் இரண்டாம் மண்டல பாசனத் திற்கு தண்ணீர் திறக்க வேண்டியது கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பிஏபி பாசன விவசாயிகளுக்கு தொடர் இழப்பு கள் ஏற்பட்டுள்ளது. முறையாகத் திட்ட மிட்டு முன்கூட்டியே பணி முடித்திருந் தால் இந்த இழப்பை தவிர்த்திருக்க முடி யும் என்றனர்.