districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

கூடலூர் நெடுஞ்சாலையில் புலி நடமாட்டம்

உதகை, ஜூலை 30- முதுமலையிலிருந்து கூடலூர் செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் உலா வந்த புலியால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். முதுமலையிலிருந்து கூடலூர் செல்லும் தேசிய நெடுஞ் சாலை அடர்ந்த வனப்பகுதியாகும். இச்சாலையில் யானை,  கரடி, காட்டுமாடு, புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்கு கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே, வாகன ஓட்டி கள் கவனமுடன் செல்ல வேண்டும் என வனத்துறை சார்பில்  அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சனியன்று இரவு முதுமலையிலிருந்து கூடலூர் செல்லக்கூடிய சாலையில் புலி  உலாவியது. அப்போது சாலையில் சென்ற கார் ஓட்டுநர் வாக னத்தை நிறுத்தினார். இதன்பின் ஒரு புறத்திலிருந்து மறுபுறம் செல்ல புலி சாலையில் அங்குமிங்கும் உலாவியது. வாகன முகப்பு வெளிச்சத்தை கண்டவுடன் புலியானது வனப்பகுதிக் குள் ஓடியது. இதனை காரில் சென்றவர் அச்சத்துடன் வீடியோ பதிவு செய்துள்ளது, இணையதளத்தில் வைரலாகி வருகி றது. புலி உலாவிய இடத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு யானை ஒன்று வாகனங்களை ஒரு மணி நேரத்திற்கு மேலாக வழிமறித்து நின்றது. தற்போது இரவு நேரத்தில் புலி உலா வியுள்ளது. எனவே, இப்பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி வனவிலங்குகளுக்கு இடையூறு செய்யும் விதமான செயல் களில் ஈடுபட வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

மருத்துவ இணை இயக்குநர் அலுவலகத்தை இடமாற்றம் செய்

தருமபுரி, ஜூலை 30- தருமபுரி அருகில் இயங்கி வரும் மருத்துவ இணை இயக்குநர் அலுவலகத்தை தருமபுரி நகருக்குள் இடமாற்றம்  செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.  தருமபுரியில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில்  குப்பூர் பகுதியில் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக  நலப் பணிகள் இணை இயக்குநர் அலுவலகம் உள்ளது.  இந்த அலுவலகத்தின் கீழ் பென்னாகரம், அரூர், பாலக் கோடு, பாப்பிரெட்டிப்பட்டி வட்டார தலைமை மருத்துவ மனைகள் மற்றும் அரசு தொழுநோய் மருத்துவமனை இயங்கி வருகிறது. குப்பூரில் உள்ள இணை இயக்குநர் அலுவலகத்துக்கு போதுமான போக்குவரத்து வசதிகள் இல்லை. இதனால் அரசு அலுவலர்கள், அரசு மருத்து வர்கள், அலுவலக பணிகளுக்காக செல்லும் நோயாளிகள்  மற்றும் பொதுமக்கள் நாள்தோறும் பல்வேறு இன்னல் களை சந்தித்து வருகின்றனர்.  எனவே, பொதுமக்கள் பயன்பெறும் வகையில், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர்  அலுவலகத்தை தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதியில் அமைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்வு

ஈரோடு, ஜூலை 30- பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 2.953 கனஅடியாக உள்ளதால், நீர்மட்டம் உயர்ந்துள்ளது.  ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாமா கவும் உள்ளது பவானி சாகர் அணையாகும். இந்த அணை யின் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன  வசதி பெறுகிறது. பவானிசாகர் அணை 105 அடி கொள்ளளவு கொண்ட தாகும். இந்த அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதி யான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. பின்னர் மழைப்பொழிவு குறைந்ததால் நீர் வரத்தும் குறைந்து வருகிறது. இந்நிலையில், ஞாயிறன்று காலை நிலவரப்படி பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 83.73 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 2,953 கன அடி நீர்வரத்து வருகிறது. அணையில்  இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 200 கன அடியும், தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கன அடியும், குடிநீருக்காக 200 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,205 கன அடி  நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது. 

ஆயுதங்களை காட்டி ரூ.16 லட்சம் கொள்ளை

திருப்பூர், ஜூலை 30 - திருப்பூரில் கடை உரிமையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.16 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 7 கொள்ளையர்களை கும்பலை பிடிக்க 5 தனிப்படை அமைக் கப்பட்டுள்ளது. திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே காமாட்சி அம்மன் கோவில் வீதியில்  ஹஜ்மத் சிங் (40) என்பவர் வீட்டு உபயோக  பொருட்கள் விற்பனை கடை நடத்தி வரு கிறார். விடுமுறை நாளான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இப்பகுதி களில் உள்ள கடைகளில் கூட்டம் அலை மோதும். இந்நிலையில் சனியன்று இரவு இவரது கடைக்கு பொருட்கள் வாங்க 7 பேர் வந்துள்ளனர்.  திடீரென அந்த கும்பல் அரிவாள், கத்தி  உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி ஹஜ்மத்  சிங்கை மிரட்டி அவரிடம் இருக்கும் பணத்தை  தருமாறு கேட்டு மிரட்டியுள்ளனர். அந்த கும்பல் கடையில் வைத்திருந்த ரூ.16 லட்சம்  பணம் மற்றும் செல்போன் உள்ளிட்ட வைகளை பறித்துக் கொண்டு அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் காரில் ஏறி தப்பி  ஓடியது.  இந்த சம்பவம் குறித்து ஹஜ்மத் சிங் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார்  கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ  இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.  மேலும், சம்பந்தப்பட்ட கடையில் உள்ள  கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி களை கைப்பற்றி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.  இதற்கிடையே கொள்ளை கும்பல் பல்லடம் ரோடு வித்யாலயம் பகுதியில் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை நிறுத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். காரின் பதிவெண்னைக் கொண்டு, கார் உரிமையாளர் சக்தி வேல் என்பவரை பிடித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.  மேலும், காரை நிறுத்திவிட்டு கொள்ளை  கும்பல் தப்பி ஓடும் கண்காணிப்பு கேமரா  காட்சிகள் கிடைத்துள்ளன. இந்த சம்பத் தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மதுரை,  சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங் களுக்கு தனிப்படை விரைந்துள்ளது. 

சேலம் இரும்பாலை நிறுவனத்திற்கு இஸ்ரோ பாராட்டு 

சேலம், ஜூலை 30- சந்திராயன்-3 விண்கலத்திற்கு குளிரூட்ட  பயன்படும் இரும்பு தகடை சேலம் இரும் பாலை அனுப்பியதற்காக இஸ்ரோ நன்றி தெரிவித்துள்ளது.  கடந்த 2019 ஆம் ஆண்டு சந்திராயன்-2 விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால் சந்தி ராயன்-2 லேண்டர் சரியாக தரையிறங்காமல் மோதி திட்டம் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், சந்திரனின்-3 திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது ரூ.615 கோடி மதிப்பீட்டில் அதிநவீன சிறப்பு  அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டது. இதை யடுத்து, ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து கடந்த 14ஆம் தேதியன்று சந்திராயன்-3 விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண் கலம் நிலவை அடையும் வரை விஞ்ஞானி கள் இதனை தீவிரமாக கண்காணித்து வரு கின்றனர்.  இந்நிலையில், சந்திராயன்-3 திட்டத் திற்கு குளிரூட்ட பயன்படும் இரும்பு தகடு  சேலம் இரும்பாலையில் தயாரிக்கப்பட்ட தாகும்.  இதற்கு இஸ்ரோ நிறுவனம், சேலம் உருக்காலை நிர்வாக இயக்குநருக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.

கோவிலில் நகை, பணம் கொள்ளை

நாமக்கல், ஜூலை 30- நாமக்கல் மாவட்டம், வெப்படை புற காவல் நிலையத் திற்குட்பட்ட வால்ராசம்பாளையம் பகுதியில், அத்தனூர் அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பூசாரியாக இருக் கும் மூர்த்தி  என்பவர் வழக்கம் போல, இரவு கோவிலை பூட்டி விட்டு அருகிலுள்ள கோவில் அறையில் தூங்கச் சென்றார். இதன்பின் அதிகாலை கோவிலை திறந்த பொழுது சாமி சிலை யிலிருந்த ஒரு பவுன் தாலி, இரண்டு கிராம் தாலி பொட்டு, 20 கிராம் வெள்ளிக்கொடி மற்றும் ரூ.7 ஆயிரம் பணம் கொள் ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தபோது, நள்ளிரவில் முகமூடி அணிந்த கொள்ளையர் ஒருவர் கோவி லின் பின்புறம் உள்ள சுவர் ஏறி குதித்து கோவிலுக்குள் நுழை வதும், அதன்பிறகு கோவிலில் கருவறை பகுதியில் இருந்த  இரண்டு கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தி நகை, பணத்தை கொள்ளையடித்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் வெப்படை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு  விரைந்த வெப்படை புறக்காவல் நிலைய உதவி ஆய்வாளர்  மலர்விழி தலைமையிலான போலீசார், கண்காணிப்பு கேமரா வில் பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

குன்னூரில் “ஹேப்பி ஸ்ட்ரீட்” நிகழ்ச்சி

உதகை, ஜூலை 30- நீலகிரி மாவட்ட காவல்துறை மற்றும் தன்னார்வலர்கள் கூட்டமைப்பு சார்பில், குன்னூர் மவுண்ட் ரோடு பகுதியில், அண்ணா சிலை முதல் லாலி அரசு மருத்துவமனை வரை வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு, “ஹேப்பி ஸ்டீரீட்” நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தோடர், கோத்தர் பழங்குடியின மக்களின் பாரம்பரிய இசை, நடன நிகழ்ச்சி, படுகர் சமுதாய மக்களின் பாரம்பரிய நடனம் நடை பெற்றது. இந்நிகழ்ச்சிகளை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். மேலும் இசை, நடன நிகழ்ச்சிகள் மற்றும் குழந்தை கள், பள்ளி மாணவ, மாணவர்கள் சதுரங்கம், பல்லாங்குழி, கேரம் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்த னர். உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, சுற்றுலா பயணிகளும் ஆடி, பாடி மகிழ்ந்தனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதனால் மவுண்ட் ரோடு பகுதி, மக்களின் மகிழ்ச்சியில் திளைத்தது.

இரண்டு வயது பெண் குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: தந்தை கைது

கோவை, ஜூலை 30- கோவை மாவட்டம், போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் 29  வயது இளைஞர். இவருக்கு திருமணமாகி இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இதனிடையே சனியன்று பெண்  குழந்தையின் பிறப்புறுப்பில் ரத்தம் கசிவதை அவரது தாய்  பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தாய், குழந் தையை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென் றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந் தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டனர். இதில் குழந்தையின் தந்தையே குழந் தைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து பெற்ற குழந்தையையே பாலியல் வன் கொடுமை செய்த தந்தையை போலீசார் கைது செய்து, விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மிளிரும் கொல்லிமலை

நாமக்கல், ஜூலை 30- வல்வில் ஓரி விழாவினை முன்னிட்டு, சுற்றுலா பயணி களை வரவேற்க கொல்லி மலை தயாராகி வருகிறது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் வருடந் தோறும் தமிழக அரசு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பில் நடத்தப்படும், வல்வில் ஓரி விழாவினை முன் னிட்டு அங்குள்ள தாவரவி யல் பூங்காக்கள் அழகு படுத்தும் பணிகள் நடை பெற்று வருகிறது.  மேலும், வழக்கம் போல் நெடுஞ் சாலைகளில் சுற்றுலா பயணி களின் கவனத்தை ஈர்க்கும் ஓவியங்கள் வரையப்பட்டுள் ளது. அதுமட்டுமின்றி சுற் றுலா மையங்களையும் அழ குபடுத்தும் பணி மற்றும் தூய் மைப்படுத்தப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் கொல்லிமலை புத் தொளி பெற்று சுற்றுலா பய ணிகளை கவரும் வண்ணம் மெருகூட்டப்பட்டு வருகி றது.

பருத்தி, கொப்பரை ஏலம்

நாமக்கல், ஜூலை 30- நாமக்கல், திருச்செங் கோடு வேளாண்மை உற் பத்தியாளர்கள் கூட்டுறவு விற் பனை சங்கத்தின் மல்லச முத்திரம் கிளையின் மாமுண்டி உபகிளையில் பருத்தி ஏலம் நடைபெற்றது. மதியம்பட்டி,  மாமுண்டி, அக்கரைப்பட்டி மற்றும் வெண்ணந்தூர் உள் ளிட்ட பல்வேறு பகுதிகளிலி ருந்து 415 மூட்டை பருத்தியை விவசாயிகள் ஏலத்தில் கொண்டு வந்திருந்தனர். சுரபி ரகப்பருத்தி குவிண் டால் ரூ.7380 முதல் ரூ.7986 வரையிலும், பிடி ரகப்பருத்தி  ரூ.6320 முதல் ரூ.6280 வரை யிலும் ஏலம் போனது. மொத் தம் ரூ.10 லட்சத்திற்கு பருத்தி விற்பனையானது. இதேபோல், திருச்செங் கோடு வேளாண்மை உற் பத்தியாளர்கள் கூட்டுறவு விற் பனைச் சங்கத்தின் மல்லச முத்திரம் கிளையில் கொப் பரை ஏலம் நடைபெற்றது. இதில், சுற்றுப்புற பகுதியி லிருந்து 75 மூட்டை கொப் பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். முதல் தரம் ரூ.72.25 முதல் ரூ.79.55 வரையிலும், இரண் டாம் தரம் ரூ.58.75 முதல் ரூ.70.25 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.2.50 லட்சத்திற்கு வர்த்தகம் நடை பெற்றதாக ஏல அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் தேர்வு

நாமக்கல், ஜூலை 30- குமாரபாளையம் அருகே நடைபெற்ற மாற்றுத்திறனாளி கள் சங்க கிளை அமைப்பு கூட்டத்தில், சங்கத்தின் புதிய நிர் வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம், ஓடப்பள்ளி அக்ரஹாரம் பகுதியில், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க கிளை அமைப்பு கூட்டம் சண்முகசுந்தரம் தலைமையில் நடை பெற்றது. இதில் சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் எம்.ஆர். முருகேசன், குமாரபாளையம் தாலுகா தலைவர் அர்ஜூனன், தாலுகா செயலாளர் அருண்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து சங்கத்தின் புதிய கிளை தலை வராக சுப்பிரமணி, செயலாளராக சண்முகசுந்தரம், பொரு ளாளராக குணபாலன், துணைத்தலைவர்களாக மணி, குண சுந்தரி, துணைச்செயலாளர்களாக முருகேசன், பூங்கொடி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.