districts

போலி நிதி நிறுவனம் நடத்தி மோசடி மூன்று பேர் கைது; 11 லட்சம் மீட்பு

திருப்பூர், அக்.15 - திருப்பூர் மாவட்டம், காங்கேயம், அவி நாசி உள்பட தமிழகத்தில் ஆறு இடங் களில் போலி நிதி நிறுவனம் நடத்தி மோசடி யில் ஈடுபட்டது தொடர்பாக மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இதில்  தொடர்புடைய மற்றவர்களை கைது செய்ய  முயற்சி மேற்கொண்டுள்ளனர். திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் சாமிநாதன் சனியன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறிய தாவது: திருப்பூர் மாவட்டம் அவிநாசி, காங் கேயம் ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக என்.கே.பி. நிதி நிறுவனம் என்ற பெயரில் விளம்பரம் செய்து, பொது மக்கள் தொழில் தொடங்க தனிநபர் கடன்  தருவதாகவும், மகளிர் சுய உதவிக் குழுக் களுக்கும் கடன் தருவதாகவும் கூறியுள்ள னர். இதை நம்பி  மக்கள் பணம் செலுத்திய  நிலையில் பணத்துடன் அந்த கும்பல்  தலைமறைவு ஆகிவிட்டது. இது தொடர் பாக வரப்பட்ட புகாரின் அடிப்படையில் கடந்த 11ஆம் தேதி எப்ஐஆர் பதிவு  செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப் பட்டது. இதில் போலி நிதி நிறுவனம் நடத்தி பொது  மக்களிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்ட திருவாரூர் மாவட்டம், வலங்கை மானைச் சேர்ந்த கோபி (40), திருச்சி கே.கே. நகரைச் சேர்ந்த தேவிகா மற்றும் திருச்சி பீமான் நகரைச் சேர்ந்த ஆண்டனி (34) ஆகிய  மூன்று பேரை திருப்பூர் மாவட்ட தனிப்படை  காவல் துறையினர் கைது செய்தனர். இவர் களிடம் இருந்து ரூ.11 லட்சம் பறிமுதல் செய் யப்பட்டது. இவர்கள் தனிநபர் கடன் தருவதா கவும், மகளிர் சுயஉதவிக் குழுக் கடன் தருவ தாகவும் காங்கேயம் மற்றும் அவிநாசியில் ரூ.43 லட்சம் அளவுக்கு மோசடி செய்துள் ளனர். இத்துடன் கள்ளக்குறிச்சி, ஈரோடு, தென்காசி, திருச்சி மற்றும் திண்டுக்கல் ஆகிய இடங்களிலும் இதேபோல் பண மோசடியில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவு  செய்யப்பட்டுள்ளது.

இந்த போலி நிறுவனத்தின் மூலம் பணப் பரிமாற்றம் செய்த வங்கிக் கணக்குகள் அடை யாளம் காணப்பட்டு  அதை முடக்குவதற் கான நடவடிக்கைகளை காவல் துறை மேற்கொண்டுள்ளது. இந்த வழக்கில் தொடர் புடைய மற்ற குற்றவாளிகளையும் விரை வில் கண்டுபிடித்து கைது செய்யவும், மோசடியில் தொடர்புடைய அனைவரின் சொத்துகளை முடக்கவும் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு, அவர்கள் செலுத்திய  பணத்தை மீட்டு நீதிமன்றம் மூலம் ஒப்ப டைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. எந்த வித ஆவணங்களும் இல்லாமல், எளிய முறையில் கடன் தருவதாக அல்லது  குறைந்த வட்டியில் கடன் தருவதாகவோ அல்லது முதலீட்டுக்கு அதிக வட்டி தரு வதாகவோ பொய்யான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம், அதேபோல் ஆன் லைனிலும் வேலை வாங்கித் தருவதாகவும்,  பணம் டெபாசிட் செய்தால் இரட்டிப்பு தொகை தருவதாகவும் விளம்பரம் செய் வதையும் நம்பி ஏமாற வேண்டாம். அரசால் அங்கீகரிக்கப்படாத நிதி நிறுவனங்களின் (பைனான்ஸ்) விளம்பரங்களைப் பார்த்து  ஏமாற வேண்டாம். இது பற்றி தகவல்களை காவல் நிலையத்தில் தெரிவித்து உண்மைத்  தன்மையை அறிந்து கொள்ள வேண்டும். வீடு, கடைகளை வாடகைக்கு விடும் போது அவர்களது ஆதார் கார்டு, பான் கார்டு  விபரங்களையும், நிரந்தர முகவரி விபரங் களையும் கேட்டுப் பெற்று, தெரிந்து கொள்ள  வேண்டும். சந்தேகம் இருப்பின் காவல் நிலை யத்தில் தகவல் தெரிவிக்கவும் வேண்டும். இவ்வாறு காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் கூறினார்.