districts

img

திருமுருகன்பூண்டி நகராட்சி: புதிய மாற்றத்திற்கு தயாரான மக்கள்

திருப்பூர் மாநகரத்தையொட்டி அமைந்துள்ளது திருமுருகன்பூண்டி நகராட்சி. இந்நகரில்தான் புகழ் பெற்ற திருமுருகநாதர் சுவாமி  கோவில், சிற்பக் கலைக்கூடம் உள் ளிட்டவைகள் அமைந்துள்ளது. மேலும், பனியன் போன்ற எண் ணற்ற தொழில் நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. பேரூராட்சி யாக இருந்த இந்த நகரம் அண்மை யில் தான் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இத்தகைய பெரு மைமிகு நகரான திருமுருகன் பூண்டி நகராட்சி இருந்தபோதிலும், மக்கள் தொகை நெருக்கத்திற்கு ஏற்ப போதிய அடிப்படை கட்ட மைப்பு வசதிகள் என்பது கடந்த  பத்தாண்டுகளாக மாநிலம் மற்றும்  உள்ளாட்சி நிர்வாகத்தில் ஆளுங் கட்சியாக இருந்த அதிமுகவினால் மேற்கொள்ளப்படவில்லை என்பதே நிதர்சணம்.  இதுகுறித்து திருமுருகன் பூண்டி நகராட்சியில் 10 ஆவது வார்டில் போட் டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வேட்பாளர் சுப்பிரமணி கூறு கையில்,  2011 ஆம் வருடத்தில் அதி முக வெற்றி பெற்று பேரூராட்சி நிர் வாகத்தை கைப்பற்றியது . இதில் திரு முருகநாதசுவாமி கோவில் பின்புறம் உள்ள ஓடையில் சாக்கடை கழிவு நீர் தேங்குவதை வெளியேற்ற நமக்கு நாமே திட்டத்தின் மூலமாக அப்பகுதி அதிமுக பிரமுகர்கள்  பொதுமக்களிடம் பல லட்சம் ரூபாய் கள் வசூல் செய்தனர். ஆனால், இந்த  பணிகளுக்காக சில ஆயிரம் ரூபாய் களை மட்டுமே செலவு செய்துவிட்டு மீதி தொகையினை சுருட்டிக் கொண்டுவிட்டனர். ஆனால், இப் போது திருமுருகன் பூண்டி நகராட் சிக்கு புதுப்பொலிவு தருவேன் என்று கூறி அக்கட்சியினர் வாக்கு சேக ரித்து வருவது கேளிக்கூத்தாகும் என் கிறார்.

குடிநீர் இணைப்பில் கொள்ளையடித்தவர்கள் 

16 ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட் பாளர் வெங்கடாசலம் கூறுகையில், கடந்த காலத்தில் ஒரு வீட்டிற்கு குடி நீர் இணைப்பிற்காக 20 ஆயிரம் ரூபாய் என்றுகூறி பல கோடி ரூபாய் களை வசூலித்து கொள்ளையடித்த வர்கள்தான் தற்போது வாக்கு கேட்டு வரும் அதிமுக வேட்பாளர்கள்.  ஆனால், தற்போது தாங்கள் சுய நலன் இல்லாதவர்கள், மக்களுக் காக போராடுபவர்கள் என கூறிக் கொள்கின்றனர். முன்னதாக, ராக்கி யாபாளையம் செல்லும் சாலையில் விபத்துக்களால் மனித உயிர்கள் பலியாவதை தடுத்திட பாலமும், வேகத்தடையும் ஏற்படுத்தக்கோரி அப்பகுதி மக்கள் இரண்டாயிரம் பேரிடம் மார்க்சிஸ்ட் கட்சியினர் கையெழுத்து இயக்கம் நடத்தி,  அதி முகவின் சட்டமன்ற உறுப்பினர் தன பாலிடம் கொடுக்கச் சென்றபோது அக்கோரிக்கையை காது கொடுத்து கேட்க மறுத்து அதற்கு எதிராக பேசியவர்கள்தான் தற்போதைய அதிமுக வேட்பாளர்கள் என்பதை திருமுருகன்பூண்டி பகுதி வாக்கா ளர்கள் மறக்க மாட்டார்கள், என அவர் தெரிவிக்கிறார்.

இரட்டை வேடம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளரும், முன்னாள் பேரூராட்சி தலைவருமான ராம சாமி கூறுகையில்,  பாறைக் குழியில் குப்பை கொட்டும் பிரச்சனை சம் பந்தமாக ஊர் பொதுமக்கள் கூடி கட்சிப் பாகுபாடின்றி ஒருமித்த குர லோடு பல போராட்டங்களை நடத்தி வந்தோம். ஆனால், அன்றைய தினம் ஆட்சியில் இருந்த அதிமுக அதனை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. ஆனால், இன்று புதி யதாக பொறுப்பேற்ற திமுக அரசில் அமைச்சராக உள்ள மு.பெ.சாமி நாதன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பி னர் கே.சுப்பராயன் ஆகியோரின் தொடர் முயற்சியால், பாறைக்குழி யில் குப்பை கொட்டும் பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படவுள்ள நிலையில், அதற்கு தாங்கள் மட்டும் தான் கார ணம் எனக்கூறி மார்தட்டிக் கொள்வ தில் எள்ளவும் தார்மீக உரிமை யில்லை. இது ஒரு அரசியல் நாகரீக மற்ற செயலே என்பது மக்களுக்கு தெரியும்.  அதேபோல், அதிமுக, பாஜக கூட் டணி முறிவு ஏற்பட்டது என்று அதி முகவின் தலைமை அறிவித்துள்ளது. ஆனால், இது ஒரு பொய் பித்தலாட் டம் என்பதை போல்தான்  திருமுரு கன்பூண்டி நகராட்சியில் (10,13 மற்றும் 19 ஆவது வார்டுகளில் அதிமுக போட்டியிடவில்லை. மாறாக, அந்த வார்டில் பாரதிய ஜனதா கட்சி போட் டியிடுகிறது.  அவர்களுடன் மறைமுக கூட்டணி வைத்துக் கொண்டு அதி முகவினர் பாஜக வேட்பாளர்களுக் காக பணியாற்றி வருகின்றனர். இது மக்களை ஏமாற்றும் செயலா அல் லது எடப்பாடி பழனிச்சாமிக்கும், ஓ. பன்னீர்செல்வத்திற்கும் செய்யும்  துரோகமா? என்பதை அதிமுக வினர் விளக்க வேண்டும். 

வாரிச் சுருட்டியது யார் என்பது மக்களுக்கு தெரியும்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர துணைச் செயலாளரும், முன் னாள் பேரூராட்சி கவுன்சிலருமான பொன்னுச்சாமி கூறுகையில், திரு முருகன்பூண்டி பேரூராட்சியின் அனைத்து வருவாய்களும் அரசு  கணக்கிற்கு வராமல் பல வழிகளில் வாரிச் சுருட்டியது யார் என்பது மக்க ளுக்கு நன்கு தெரியும். பணத்தைக் காட்டி அச்சுறுத்துவதும், மிரட்டு வதும், பேரம் பேசுவதும் யார் என்பது மக்களுக்கு தெரியும். ஆகவே, அர சியல் தெளிவும், சிந்தனையும் உள்ள  திருமுருகன் பூண்டி பகுதி மக்கள், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்குதான் வாக் களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருப் பதாக தெரிவித்தார். திராவிட முன்னேற்றக் கழகத் தின் நகர செயலாளரும், 25 ஆவது வார்டு வேட்பாளருமான பாரதி கூறு கையில், ராக்கியாபாளையம் அரசுப் பள்ளியில் மாணவர்கள் மதிய நேரத் தில் நிழலில் அமர்ந்து உணவருந்து வது, விளையாடுவதற்கும், பசுமை யான சுற்றுச்சூழலை உறுதிசெய்ய வும் கடந்த காலங்களில் பாதுகாக்கப் பட்ட மரங்களை எந்தவித காரணமு மின்றி அதிமுக பேரூராட்சி நிர்வாகம் வெட்டி சாய்க்க முயன்றது. அப் போது, எவ்வித பாகுபாடின்றி அரசி யல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மரம் வெட்டுவதை தடுத்து நிறுத்தினோம். இவ்வாறு மரத்தைக்கூட விட்டு வைக்காத நிர்வாகமாக தான் கடந்த அதிமுகவின் நிர்வாகம் இருந்தது.  மேலும், திருமுருகன்பூண்டி பேரூராட்சி நிர்வாகத்தில் அதி முக பிரமுகர்கள் மற்றும் இடைத்தர கர்களின் ஆதிக்கம் எந்தளவிற்கு இருந்தது என்பதை இப்பகுதி மக்கள் நன்கு அறிந்திடுவர். ஆகவே, இப்படிப்பட்ட நிர்வாகத்தை மாற்றி யமைக்க கிடைத்த வாய்ப்பை திரு முருகன்பூண்டி நகராட்சி மக்கள் சரி யாகவே பயன்படுத்துவார்கள் என்ற  நம்பிக்கை இருப்பதாக அவர் தெரி வித்தார்.

அமோக வெற்றியை பரிசளிப்பார்கள்

திருமுருகன்பூண்டி நகராட்சி திராவிட முன்னேற்றக் கழக 26 ஆவது வார்டு வேட்பாளர் குமார் கூறுகை யில், திருமுருகன் பூண்டி பேரூராட்சி தலைவர் பதவி அதிமுக வசம் இருந்து வந்தது. இதில் பேரூராட்சி தலைவராக லதா குறுகிய காலகட் டம் வரை மட்டுமே பதவி வகித்து  வந்தார். ஆனால், தனது பேரூராட்சி  தலைவர் பொறுப்பை திடீரென்று ராஜினாமா செய்ய காரணம் என்ன?  அதில் உள்ள மர்மம் என்ன? என்பது இன்றுவரை மக்களுக்கு தெரிய வில்லை. மேலும், 18 ஆண்டுகள் திருமுருகன்பூண்டி பேரூராட்சி நிர் வாகம் அதிமுக வசம்தான் இருந்தது என்பதை வசமாக மறந்துவிட்டு, அப்பொதெல்லாம் அடிப்படை வசதி களை மேம்படுத்தாமல் விட்டுவிட்டு தற்போது மீண்டும் நிர்வாகப் பொறுப் புக்கு வந்தால் பூண்டி நகரம் புதுப் பொலிவு பெறும் என அதிமுக வேட் பாளர்கள் கூறுவது நகைப்பிற்குரி யது. ஆகவே, இவை எல்லாவற்றை யும் நினைவில் வைத்திருக்கும் திரு முருகன்பூண்டி நகராட்சி மக்கள், திமுக தலைமையிலான மதசார் பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட் பாளர்களுக்கு பெறுவாரியான வாக்குகளை அளித்து அமோக வெற் றியை பரிசளிப்பார்கள் என்பதுதான் மறுக்க முடியாத உண்மையாகும். இவ்வாறு அவர் கூறினார்.

-அருண்