அவிநாசி, டிச.14- திருமுருகன்பூண்டி நகராட்சி யில் தேவையான அலுவலர்களை உடனே நியமிக்க கோரி புதனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் உண்ணாவிரத போராட் டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சிக்கு மிக அருகாமையில் திருமுருகன் பூண்டி நகராட்சி உள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேலாக பேரூராட் சியாக செயல்பட்டு வந்த நிலை யில், மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில், அன்றைய திமுக தலைமையிலான அரசு பொறுப் பேற்றவுடன் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. திருமுருகன் பூண்டியில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் பழமையான முருகன் கோயில் உள்ளது. இப் பகுதியில் சிற்பக் கலைக்கூடம், பனியன் தொழிற்சாலைகள் பெரியளவில் செயல்படுகின்றது. பேரூராட்சியாக இருந்தபோது 15 வார்டுகளும், நகராட்சியாக தரம் உயர்த்திய நிலையில் 27 வார்டு களாக மாற்றி அமைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நகர மன்ற தேர்தலும் அறிவிக்கப்பட்டு மக்கள் பிரதிநிதிகளும் தேர்வு செய்து பல மாதங்கள் கடந்த நிலையிலும், பல பிரிவுகளுக்கு அதிகாரிகள் நியமிக் கப்படவில்லை. அதேபோல, தபால் அலுவலகத்திற்கு சொந்த கட்டிடமில்லை, ஆரம்ப சுகாதார நிலையத்தை பொது மருத்துவ மனையாக மாற்ற முடியாமல் திணறி வருகிறது. பொதுமக்கள் வசதிக்கேற்ப நகர மன்ற அலுவ லகத்தை பூண்டி பேருந்து நிறுத்தம் அருகிலேயே செயல்பட வேண்டும் என்று பெரும்பாலானோர் கூறி வந்த நிலையில், நகராட்சி நிர் வாகம் தானடித்த மூப்பாக, பொது மக்கள் சென்றுவர பொருத்தம் இல் லாத இடத்திற்கு அலுவலகத்தை மாற்றுகிறது. மேலும், பேரூராட்சி யாக இருந்தபோது அமைக்கப் பட்ட சாலைகள், மின்விளக்குகள் அதே நிலையில் தான் தொடர்கிறது. புதிய குடிநீர் இணைப்பு வேண் டிய ஆயிரக்கணக்கான விண்ணப் பங்கள் வந்தபோதும், அதனை அலட்சிப்படுத்தி, புதிய குடிநீர் இணைப்பு வழங்காமல் இழுத்த டித்து வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில், இந்த நகராட்சியில், பல்லாயிரக்கணக்கான முறை கேடான குடிநீர் இணைப்பு வழங் கப்பட்டதை அறிந்து மார்க்சிஸ்ட் கட்சி தொடர் போராட்டம் நடத் தியது. இந்த முறைகேடு நடை பெற்றது உண்மையென நிருபித்து, திருமுருகன் பூண்டி நகராட்சி நிர் வாகத்திற்கு பல கோடி ரூபாய் வரு வாய் ஈட்டி தந்துள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் முறையீட்டில், முறை கேடான குடிநீர் இணைப்பு வழங் கிய நபர்கள் மீது நடுவர் மன்றத்தின் மூலமாக உறுதி செய்யப்பட்டது.சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவ டிக்கை எடுக்கக் கோரி நடுவன் மன்றம் உத்தரவும் வழங்கியது. இருப்பினும் நகராட்சி நிர்வா கமும் நடுவர் மன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் எந்த ஒரு நபர் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருமுருகன் பூண்டி பகுதி கிளைகள் சார்பில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடு பட முடிவு செய்தனர். இதன்ஒருபகுதியாக புதனன்று மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமை யில் பொதுமக்கள் பங்கேற்ற உண்ணாவிரத போராட்டம் நடை பெற்றது. இதில், திருமுருகன் பூண்டி நகராட்சி தரம் உயர்த்தப் பட்டு ஒரு வருடத்தை கடந் துள்ளது. ஆனால், நகராட்சி நிர்வா கத்திற்கு தேவையான அலுவலர் களை இதுவரையில் நியமிக்கப் படவில்லை. உடனடியாக தேவைக் கேற்ப அலுவலர்களை நியமிக்க வேண்டும்.
புதிய வரிவிதிப்பு, பெயர் மாற்றம், புதிய குடிநீர் இணைப்பு, வரைபடம் போன்ற அனுமதிக்கு மக்களை அலைகழிக் கச்செய்யும் நடவடிக்கையை திரு முருகன் பூண்டி நகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும். பொது சுகா தாரம், குடிநீர் விநியோகம், தெரு விளக்கு, வரி வசூல் போன்ற பணி களுக்கு தனியாருக்கு வழங்கும், அரசாணை 115,152 உடனடியாக திரும்பபெற வேண்டும். லஞ்ச, ஊழல் இல்லாத நகராட்சி நிர்வா கத்தை நடத்த வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை முன்வைக் கப்பட்டது.
திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகம் எதிரில் நடை பெற்ற போராட்டத்திற்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 10 வார்டு நகர மன்ற உறுப் பினர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். 14 ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினர் தேவராஜன், 22 ஆவது வார்டு நகர மன்ற பார்வதி சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்ணாவிரத போராட்டத்தை தொடக்கி வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் செ.முத்து கண்ணன் உரையாற்றினார். இந்தப் உண்ணாவிரத போராட் டத்தை வாழ்த்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரங்கராஜ், மாவட்ட குழு உறுப்பினர்கள் வெங்கடா சலம், பழனிச்சாமி, ஒன்றிய செய லாளர் ஈஸ்வரமூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் மோகன சுந்தரம், வேலுச்சாமி, பாலசுப்பிர மணியம் உள்ளிட்டோர் பேசினார். இறுதியாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் நந்தகோபால் உண்ணாவிரதத்தை நிறைவு செய்து உரையாற்றினார். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமை யில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் பொதுமக்கள் திர ளாக பங்கேற்றனர்.