districts

img

மக்கள் பிரதிநிதியாக நகர் மன்றத்தில் குரல் எழுப்புவோம்

அவிநாசி, பிப்.12- அவிநாசி திருமுருகன்பூண்டி நக ராட்சியில் 24 மணி நேரமும் செயல்ப டக்கூடிய அரசு பொது மருத்துவ மனை, நூலகம், பள்ளிகள், சாலை, சாக்கடை வசதி போன்ற மக்களின் அடிப்படை தேவைகளுக்காக நகர் மன்றத்தில் குரல் எழுப்பும் மக்கள் பிரதிநியாக செயல்படுவோம் என்று  திருமுருகன்பூண்டி நகராட்சியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட் பாளர்கள் உறுதியளித்தனர். திருப்பூர் மாநகராட்சிக்கு மிக அரு காமையில் அமைந்துள்ளது திருமுரு கன்பூண்டி நகராட்சி. முன்னர் பேரூ ராட்சியாக இருந்து அண்மையில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள் ளது. மக்கள் தொகைக்கு ஏற்ப தற் போது 27 வார்டுகளாகப் பிரிக்கப்பட்ட திருமுருகன்பூண்டி நகராட்சி தனது முதல் தேர்தலை சந்திக்கிறது. இங்கு  திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் 5 வார்டுகளில் போட் டியிடுகின்றனர். இவர்கள் கூட்டணி கட்சி ஊழியர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலை யில், செல்லும் இடங்களில் எல்லாம்  பொதுமக்கள் உற்சாக வரவேற்ப ளித்து வெற்றி திலகமிட்டு வருகின்ற னர். இவ்வாறு மார்க்சிஸ்ட் கட்சி வேட் பாளர்களின் வெற்றியை அப்பகுதி மக்கள் உறுதி செய்யும் விதத்தில் அமோக ஆதரவளித்து வரும் நிலை யில், அவ்வேட்பாளர்கள் வெற்றி பெற்ற பின் தாங்கள் மேற்கொள்ள இருக்கும் பணிகள் குறித்து கூறுகை யில், 

குப்பைகள் உரமாக மாற்றப்படும்

 11 ஆவது வார்டு வேட்பாளர் எஸ். கலைச்செல்வி பேசுகையில், எனது வார்டு சீமைக் கருவேல மரம் இல் லாத வார்டாக மாற்றப்படும். கடந்த  15 ஆண்டுகளாக கழிவுநீர் குட்டை யாக மாறி வரும் ராசாத்தா கோயில் குளம் தூர்வாரப்பட்டு மரங்கள் நடப் பட்டு சுற்றிலும் நடை பாதை அமைக் கப்படும். இதன்மூலம் இயற்கை எழில் மிக்க குளமாக அவை பராமரிக் கப்படும். கழிவு நீர் கால்வாய்கள்  அனைத்தும் சுகாதாரமான முறை யில் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப் படும். குப்பைகள் உரமாக மாற்றப் பட்டு விவசாயிகளுக்கு அளிக்கப்ப டும். மருத்துவ குணங்கள் கொண்ட ஆயிரம் மரங்கள் வார்டு பகுதி முழு வதும் நட்டு வளர்க்கப்படும்.  பொதுமக்கள் வாட்ஸ் ஆப்பில் கூறும் புகார்கள், ஆலோசனைகள் பெறப்பட்டு உடனடியாக தீர்வு காணப்படும்.  குடிநீர் விநியோகம் நாள் முன்கூட்டியே குறுஞ்செய்தி மூலமாக அனைவருக்கும் தெரியப் படுத்தப்படும். பெண்கள் அனைவ ரும் உடல்நலம் பேண மற்றும் தொழில் தொடங்கி வாழ்வில் உய ரிய நிலையை அடைய ஏற்பாடு செய் யப்படும். குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை குடியிருப்பு பகுதிகளில் மருத்துவ முகாம் ஏற்படுத்த முயற் சிப்போம். மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக உரிய வல்லுனர்கள் கொண்டு ஆலோசனை வழங்கி  உயர் கல்வி பயிற்சி அளிக்கும் வசதி களை ஏற்படுத்த முயற்சிப்போம். இவ் வாறு அவர் தெரிவித்தார்.

24x7 அரசு மருத்துவமனை 

16 ஆவது வார்டு வேட்பாளர் எஸ். வெங்கடாசலம் கூறுகையில், இந்த வார்டில் முதல் முறையாக போட்டியி டுகிறேன்,  இந்த வார்டில் வெற்றி  பெறும் பட்சத்தில், இராக்கியா பாளையம் தெற்கு பிள்ளையார் கோவில் குட்டையை பராமரிக்க நடவ டிக்கை எடுக்கப்படும். 1800 குடும்ப அட்டைகளைக் கொண்ட  ரேசன் கடையை இரண்டாகப் பிரிக்க முயற்சி மேற்கொள்ளப்படும். ராக்கி யாபாளையம்  சுடுகாட்டிற்கு சுற்றுச்சு வர் அமைத்திட நடவடிக்கை எடுக்கப் படும். மகாலட்சுமி நகர் அனைத்து வீடு களிலும் கழிவுநீர் பாதை அமைக்க முயற்சிக்கப்படும். நூலகம் அமைப் பதுடன், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். திருமுருகன்பூண்டி நகராட்சியில் இருபத்தி நான்கு மணி நேரமும் செயல்படும் வகையில், அரசு மருத் துவமனை அமைக்க போராடுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நல்லாறு தூய்மைப்படுத்தப்படும் 

22 ஆவது வார்டு வேட்பாளர் எஸ். பார்வதி பேசுகையில், இந்த வார்டில் அடிப்படை வசதியான சாக்கடை, குடிநீர், மின்விளக்கு வசதிகளை மேம் படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்ப டும். புதிய குடிநீர் இணைப்பு நியாய மான கட்டணத்தில் பெற்றுத் தர முயற்சி மேற்கொள்ளப்படும். அகில் நகர் பகுதியில் காலி இடங்களில் புதர் மண்டிக் கிடக்கின்றது. இதனை சீரமைக்கவும், நல்லாறு பகுதியினை  தூய்மைப்படுத்தவும் முயற்சி மேற் கொள்ளப்படும். தபால் அலுவலகம் அரசு இடத்தில் அமைத்து விரிவுபடுத் தப்படும். திருமுருகன் கோவில் பின் புறமுள்ள பாலத்தினை தூர்வார முயற்சி எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய குடிநீர் இணைப்புகள் 

14 ஆவது வார்டு வேட்பாளர் பி. தேவராஜன் கூறுகையில், இந்த வார் டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஏற்கனவே நான் போட்டி யிட்டு வெற்றி பெற்றுள்ளேன். மன்ற  உறுப்பினராக இருந்தபோது மக்க ளின் அடிப்படை தேவைகளை நிறை வேற்றியுள்ளேன். குறிப்பாக, உமை யஞ் செட்டிபாளையத்தில் அரசு ஆரம் பப் பள்ளியை போராடிக் கொண்டு  வந்தேன். மங்கலம் சாலை முதல் உமையஞ்செட்டிபாளையம் வரை செல்லும்சாலை மிக மோசமாக இருந்த நிலையில், அதனை உடனடி யாக சரி செய்ய வேண்டும் என மறியல்  போராட்டம் செய்தபின்பு சாலை மேம் படுத்தப்பட்டது. அதேசாலை குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டி மீண் டும் பழுது ஏற்பட்டுள்ளது அதனை சரி  செய்ய போராட்டம் நடத்தினோம். இதன் தொடர்ச்சியாக பணிகள் துவங் கிய நேரத்தில், தேர்தல் அறிவித்த தால் அந்த பணி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல், தெருவிளக்குகள் பழுதடைந்தால் உடனடியாக சரி செய் யப்படும். சீரான குடிநீர் விநியோ கத்தை ஏற்படுத்த பெரும் முயற்சி  எடுக்கப்படும். குறிஞ்சி, அனுகிரகா நகர் பகுதியில் பகுதி நேர ரேசன் கடை அமைக்க முயற்சி மேற்கொள் ளப்படும். புதிய குடிநீர் இணைப்பு கள் ஏற்படுத்த வழிவகை செய்யப்ப டும்.  குடிநீர் கட்டணத்தை குறைக்க  முயற்சி  எடுக்கப்படும். அரசு பள் ளிக்கு சுற்றுச்சுவர் எழுப்ப நடவ டிக்கை எடுக்கப்படும். முதியோர் ஓய் வூதியம் போன்ற அரசின் நலத்திட் டங்களை மக்களுக்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வேன். இவ் வாறு அவர் கூறினார்.

பேருந்து நிலையம் 

10 ஆவது வார்டு உறுப்பினர் பி. சுப்பிரமணி பேசுகையில், இந்த வார் டில் மார்க்சிஸ்ட் கட்சி மக்களின் ஆதர வுடன் பலமுறை வெற்றி பெற்றுள் ளது. அப்போது, சாக்கடை கால் வாய் அமைத்தல், குடியிருப்பு பகுதிக ளில் சாலை வசதி ஏற்படுத்துதல் போன்ற எண்ணற்ற திட்டங்கள்  சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள் ளது. எதிர்காலத்தில் திருமுருகன் பூண்டி நகராட்சியில் பேருந்து நிலை யம் அமைக்க குரல் கொடுக்கப்படும். அதேபோல், மக்களுக்கு சீரான குடி நீர் கிடைக்கவும், தரைமட்ட தொட்டி கள் அமைக்கவும் முயற்சி எடுக்கப்ப டும். அதேநேரம், குடிநீர் கட்டணத்தை  குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒட்டுமொத்தமாக மக்கள் பிரதிநிதி யாக, மக்களின் ஒருவனாக நகர மன் றத்தில் குரல் ஒலிக்க செய்வேன். இவ் வாறு அவர் கூறினார். (ந.நி)