districts

img

திருச்செங்கோடு: விழிப்புணர்வு பேரணி

நாமக்கல், நவ.21- திருச்செங்கோட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதி ரான குற்றங்களை தடுக்கும் விதமாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு மகளிர் காவல் நிலையம் சார்பில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதி ரான குற்றங்களை தடுக்கும் விதமாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை திருச்செங்கோடு அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழினி கொடியசைத்து துவங்கி வைத்தார். திருச்செங்கோடு மகளிர்  காவல் நிலைய ஆய்வாளர் தீபா முன்னிலை வகித்தார். 100க்கும் மேற்பட்ட அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பேரணியில் கலந்து கொண்டு பதாகைகளை ஏந்தி, முழக்கங் கள் எழுப்பினர். திருச்செங்கோடு அரசினர் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் தொடங்கிய பேரணி புதிய பேருந்து நிலை யம், பழைய பேருந்து நிலையம், அண்ணா சிலை வழியாக மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது.