தமிழ்நாடு முழுவதும் தீக்கதிர் நாளிதழ் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்று வரும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய குழு, வஉசி நகர் கிளை செயலாளர் என்.கருப்பண்ணன், தீக்கதிர் நாளிதழுக்காக தான் உண்டியல் மூலம் சேமித்த ரூ.2 ஆயிரத்தை ஒரு ஆண்டு சந்தாவுக்காக ஒன்றிய செயலாளர் ஆர்.ரவியிடம் வழங்கினார். கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பெருமாள் உடனிருந்தார்.