districts

img

வாரிசு சான்றிதழ் பெற லஞ்சம்: பண உதவி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பெண்

திருப்பூர், பிப்.12- ரூ.13 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தான் வாரிசு சான்றுதழ் பெற முடியும் என்று வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்த அதி காரிகாரிகள் கூறியதாக கூறி,  தமிழரசி என்பவர் திங்க ளன்று லஞ்சம் கொடுக்க பண  உதவி வேண்டும் எனக் குறிப் பிட்டிருக்கும் பேனருடன் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்திற்கு வந்திருந்தார். இதுகுறித்து தமிழரசி கூறியதாவது, நான் கொங்கு மெயின்ரோடு பகுதியில்  30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரு கிறேன். இந்நிலையில் 5 ஆண்டுக ளுக்கு முன்பு எனது தந்தை இறந்து  விட்டார். அவருடைய வாரிசு சான்றி தழை பெறுவதற்காக திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென் றேன். அப்போது அங்கு இருந்து அதிகா ரிகள் இறப்பு சான்றிதழ் மற்றும் இதர ஆவணங்களை காண்பிக்குமாறு கூறி னார்கள். நான் ஆவணங்களை காண் பித்த உடனே, அவர்கள் அப்பாவின் அப்பா வாரிசு சான்றிதழ் காண்பிக்கும் படி கூறினர். எனது தாத்தா இறந்து 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அவரது வாரிசு சான்றிதழ் என்னிடம் இல்லை என்று கூறினேன். நாங்கள் நேரில் வந்து விசாரிப்போம் என்று கூறினார்கள். நாங்கள் அங்கிருந்து வந் துவிட்டோம். சில நாட்க ளுக்கு பின் ஒருவர் அரசு  ஊழியர் என்று கூறி எங்களிடம் வாரிசு சான்றிதழ் குறித்து விசாரித்து. நாளை  நேரில் வரும் படி கூறினார்.  அடுத்த நாள் நானும் என்  மகன் ஹரிகரனும் வட் டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றோம். அப்போது அங்கிருந்த ஊழியர்  வாரிசு சான்றிதழ் வேண்டும் என் றால், ரூ.13 ஆயிரம் பணம் தரும் படி  கேட்டார். நாங்கள் கூலி வேலை செய் கின்றோம் எங்களிடம் அவ்வளவு பணம்  இல்லை என்று கூறியதற்கு, பணம் தரா விட்டால் வாரிசு சான்றிதழ் பெற முடி யாது என்று கூறிவிட்டனர். எனவே தான்  மாவட்ட ஆட்சியரிடம் உதவிகேட்டு  இங்கு வந்துள்ளோம் எனக் கூறினார்.