ஈரோடு, நவ. 19 – புத்தகம் என்பது நமக்காக முன்னோர் எழுதி வைத்த உயில் என புன்செய் புளியம் பட்டி புத்தக திருவிழாவில் மதுக்கூர் ராமலிங் கம் உரையாற்றினார். புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல அறக்கட்டளை சார்பில் 9ஆம் ஆண்டு புத்தக திருவிழா கே.ஜி.மஹாலில் நடைபெற்றது. பெரியார், அண்ணா சிந்தனையாளர் பேரவை, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து நடத்திய புத்தக கண்காட்சிக்கு திருப்பூர் மாவட்டபகுத்தறிவாளர் கழக தலைவர் கோ.வெ.குமாரராசா தலைமை வகித்தார். மருத்துவர் பு.சா.இராணி வரவேற் றார். மானுட சமுத்திரம் நானென்று கூவு என்ற தலைப்பில் பங்கேற்று கருத்துரையாற்றிய கவிஞர் மதுக்கூர்ராமலிங்கம் பேசுகையில், புத்தக வாசிப்பை பரவலக்கவேண்டும் என்பதற்காக தமிழக அரசு மாவட்டந்தோறும் புத்தக திருவிழாவைநடத்தி வருகிறது. புன்செய் புளியம்பட்டியில் விடியல் சமூக நல அறக்கட்டளை தன்னெழுச்சியாக தொடர்ந்து 9ஆவது ஆண்டாக புத்தக திருவிழாவை நடத்தி வருவது பாராட்டுக் குரியது. இங்கு அனைத்து விதமான புத்த கங்களும் உள்ளன.
புத்தகம் என்பது நமக்காக முன்னோர்கள் எழுதிவாய்த்த உயில். அறிவுடைய சமுதாயம் படைப் பதும் ஒருவகையில் புரட்சிதான். புத்தகம் உங்கள் அறிவை விசாலமாக்கும், கற்பனை சிறகுகளை விரிக்கும். எனவே இத்தகைய புத்தக திருவிழாவில் பொதுமக் களும், இளைய சமுதாயத்தினரும் அதிக ளவில் பங்கேற்று சிறுகதைகள், நாவல்கள், இதிகாசங்கள், கவிதைகள் என உங்களுக்கு பிடித்த புத்தகங்களை வாங்கி பயன்பெற வேண்டுகிறேன். இத்தகைய புத்தக திருவிழா போன்ற அறிவு தேர் ஊர்கள் தோறும் ஓடட்டும் என்றார். இந்நிகழ்வில், திமுகவின் பெரியார் விருது பெற்ற சம்பூர்ணம் சாமிநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.சுந்த ரம், சிபிஐ வடக்கு மாவட்ட செயலாளர் எஸ்.மோகன்குமார், பொருளாளர் பி.என்.இரா ஜேந்திரன், பேரூராட்சி மன்ற துணை தலை வர் எ.அசனார், சிறுபான்மை மக்கள் நலக் குழு மாநில உதவி தலைவர் ப.மாரிமுத்து, உதவி தலைவர் டி.சுப்பிரமணி, போட்டி தேர்வு இலவச பயிற்சி மைய ஒருங்கிணைப் பாளர் ஏ.ஹாத்திம்தாய், ஏ.பி.ராஜீ மற்றும் சிபிஎம் மூத்த தலைவர்கள் கே.துரைராஜ், கே.திருத்தணிகாசலம் உள்ளிட்ட ஏராளமா னோர் பங்கேற்றனர். முடிவில், முன்னாள் பவானிசாகர் ஒன்றிய பெருந்தலைவர் பி.கே. விஸ்வநாதன் நன்றி கூறினார்.